Pages

Showing posts with label கதை விமர்சனம். Show all posts
Showing posts with label கதை விமர்சனம். Show all posts

Wednesday, 1 February 2012

DIAL M FOR MURDER

                                       நான் மிகவும் பார்த்து அதிசயித்த படம் . இந்த படத்தை உலக சினிமா என்று சொன்னதிற்காக ஆறு மாதத்திற்கு முன்   பதிவிறக்கம் செய்தேன். முதலில் பார்க்க ஆரம்பித்த போது . சுத்தமாக பிடிக்கவில்லை.  விரைவாக முன்னோக்கினேன். ஏன் பதிவிறக்கம் செய்தோம் என்று யோசிக்க வைத்துவிட்டது. அப்படி ஒரு நீ....ளம். ஐவர்  மட்டுமே கதையில் வருகிறார்கள்.

                    சென்ற மாதம் வேலை ஏதும் இல்லாததால் மீண்டும் பார்த்தேன். 

 ஒரு படத்திற்கு BUDGET , CASTING என்று எதுவும் முக்கியம் இல்லை என்று சட்டென உணர்த்தும் ஒரு படம்.. 
                                       

                              

                                    கதை  கண்டிப்பாக ஒரு வரி தான்.மனைவியின் தவறான உறவிற்காக கணவன் (RAY MILLAND )தன பால்ய நண்பனை (DAWSON) வைத்து அவளை கொலை செய்ய திட்டமிடுகிறான்.கொலை செய்துவிட்டு அவளின் பணத்தை பெற முயல்கிறான்.

                        கொலை செய்யும்  திட்டத்தின் ஒவ்வொரு FRAME இலும் ALFRED HITCHCOCK இன் நேர்த்தி பளிச்சிடிகிறது. கொலை செய்யும் திட்டத்தை சொல்லி முடித்தவுடன் MILLAND தன நண்பன் DAWSON பயன்படுத்திய பொருட்களில் அவன் ரேகையை துடைக்கும் SHOT அருமை... 

                          DAWSON கொள்ளபடுவதும், அதை தன் மனைவியின் மீது குற்றம் சுமத்தாமலே அவளை மாறிவிடும் இடத்திலும் MILLAND இன் நடிப்பு ஈர்க்கிறது..  

                          படத்தின் இறுதியில் உண்மையை கண்டுபிடித்து அந்த போலீஸ்காரர் தன் மீசையை முறுக்கும் போது ஏனோ நம் சினிமா பார்த்து எழுத்து போன்றதொரு உணர்வு ..
  
படத்தில் பார்க்க வேண்டிய காட்சிகள் 

1 ) கொலை செய்வதற்கு நேரம் குறித்து , MILLAND பார் ஒன்றில் நேரத்தை சரி பார்க்க தன் கடிகாரம் ஓடாமல் இருக்கும் காட்சி.முதல் திருப்பம் ...

2 ) கொலை செய்ய அனுப்பிய ஆள் தவறி தானாக இறப்பதும் அதற்கு ஏற்றார் போல் MILLAND கதை சொல்வதும்...

3 )மனைவியின் கள்ள காதலன் கற்பனையாக ஒரு கதை சொல்ல அதுதான் உண்மை என்று ஊர்ஜீனம் செய்வது..

4 ) MILLAND சாவியை ஒலித்து வைக்க சொல்லும் இடத்தை போலீஸ் இறுதியில் கண்டுபிடிப்பது  
STORY , SCREENPLAY : FREDRICK 
DIRECTION : ALFRED HITCHCOCK 

Friday, 1 July 2011

RASHOMON -(1950)REVIEW

       நான் இப்போது விமர்சனம் செய்யும் படம் சிலருக்கு பழசாக இருக்கலாம் . இருந்தும் பார்க்காதவர்கழுகாக எழுதுகிறேன். 1950 களில் எப்படி இப்படி ஒரு களத்தை அகிரா குரோஷா தேர்வு செய்தார் என்பது புரியாத  புதிர்,கதை மிகவும் எளிது ஒரு வரியில் சொல்வதற்கு கணவன் , மனைவி . ஒரு திருடன் மூவர் மட்டும் இருக்க. கணவன் கொலை செய்யபடுகிறான்
      முதலாவதாக திருடன் நடந்தவற்றை கூறுகிறான் . பின்பு அந்த மனைவி தன் வழியில் கூறுகிறாள் . மற்றொரு விதத்தில் இறந்த உடலின் ஆவியாக பூசாரி ஒருவர் சொல்கிறார். மூன்று பேரும் வெவேறு விதமாய் சொல்ல ரசிகனின் மனநிலை எது உண்மை என்று யோசிப்பதற்குள். நடந்ததை தூரத்தில் இருந்து பார்த்தவன் உண்மை இதுதான் என்று கூறி முடிக்கிறான்.
    நான்கு கோணத்தில் ஒரு கதையை சொல்லி முடித்து இருக்கிறார் இயக்குனர் . விருமாண்டி படத்தின் இரண்டு கோணத்தை புரியாமலே இன்னும் சிலர் இருக்க நான்கு கோணங்கள் என்பது எவ்வளவு கடினம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
    நான் மிகவும் பிரமித்து பார்த்த ஒரு படம் . வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்