Pages

Wednesday 29 February 2012

சக்தி

நான்காம் ஆண்டு பொறியியல் மின்னணு மற்றும் தொழில்தொடர்பியல் (சரி சரி விடுங்க ECE ) மாணவிகள் பேசிக்கொண்டது .

இந்த கார்த்தி  இப்படி பண்ணுவான்னு கொஞ்சங்கூட எதிர்ப்பாக்கலடீ.

இத்தன நாளா யார்டையும் பேசாம இப்ப FACEBOOKல RELATIONSHIP WITH SAKTHI னு ஸ்டேடஸ் அப்டேட்  பண்ணி இருக்கான்.

எந்த கார்த்திடீ?

அவன்தான்டீ நம்ம யாராவது பேச போனா முறைச்சுகிட்டே இருப்பானே   அவன்தான்.நாலு வருசத்துல யார்ட்டயுமே பேசினதே  இல்ல. 

அவனா ??சரி, சக்தி என்ன சொன்னா ? .

அவளால இன்னும் நம்பவே முடியல. கார்த்தி ஏன் இப்படி எழுதினான்னு புரியாம உக்காந்து இருக்கா. 


ஆம் அவர்கள் சொல்வதும்  நியாயம்தான்.

எல்லா படத்துலயும் ஹீரோ பேறு கார்த்திக் . ஆனா இவனோ மௌனம் பேசியதே சூர்யா மாதிரி யார பார்த்தாலும் முறைப்பான்; ஆனா ரொம்ப நல்ல டைப்.
பட் இவன் ஏன் இப்படி பண்ணினான்??

அடுத்த நாள் 

சக்தி லைப்ரரிக்கு வெளியே நின்றிருக்க கார்த்திக் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்..

சக்தி கேட்டே விட்டாள்.

என்ன நினைச்சிட்டு இருக்க??

என்ன வேணும்னாலும் நினைப்பேன். உனக்கென்ன..

ஹ்ம்ம் FACEBOOK ல என்ன ஸ்டேடஸ் போட்ட ?

ஏன் நீ பாக்கலையா ??

அதென்ன லவ் வித் சக்தி??

ஆமாம். உனக்கென்ன .

நீ என்ன லவ் பண்றியா ??

ஐயோ. அவனுக்கு தூக்கி வாரி போட்டது. அவனது பதிலோ அவளை தூக்கி வாரி போட்டது 

என்னை இவ்வளவு கீழ்தரமா நினச்சுட்டீங்கள்ள. இந்த நாலு வருஷத்துல யாராவது ஒரு பொண்ணு கிட்ட பேசி இருப்பனா?. ATLEAST யாரையாவது பார்த்து சிரிச்சு இருப்பனா??. நம்ம கிளாஸ் பொண்ணு யார்மேளையும் எனக்கு எந்த விதமான தவறான அபிப்ராயமும் கிடையாது.

அப்ப சக்தி எந்த பொண்ணு ??

எனக்கு உங்கள மட்டும் இல்ல ; எந்த பொண்ணையும் பிடிக்காது. நான் பார்த்தது உங்களுக்கு பின்னாடி நின்னுகிட்டு இருந்த சக்திவேல் 

                                                 
  


THE SIXTH SENSE

                                                            THE SIXTH SENSE
                 
பேய் படம் ; ஆவிகளுடன் பேசும் படங்கள் ஆகிய படங்களை பார்த்து இருப்பீர்களாயின் இப்படம் அத்தகைய  தளத்தில் ஒரு சிறந்த படைப்பு.
ஒரு எழுத்தாளன் தன் நாவலை தானே படமாக்கியது இதுவே முதல் முறை என நினைக்கிறேன் . அதுவும் மேலை நாடுகளில் ஒவ்வொரு துறையையும்  (கதை , வசனம், இயக்கம் ) ஒவ்வொரு நபர்   செய்வர் . தமிழில் ஜெயகாந்தன் (உன்னை போல் ஒருவன்,யாருக்காக அழுதான்   ) அவர்கள் இவ்வாறு செய்ததாக கேள்வி.


நைட் ஷ்யாமளன் (மனோஜ் ஷ்யாமளன் )என்ற அமெரிக்க வாழ் இந்தியர் எழுதி இயக்கிய படம்..

மால்கம் க்ரோவ் ஒரு குழந்தைகள் மனோதத்துவ ஆலோசகர். தன் மனைவியுடன் தனிமையில் இருப்பதாய் தவறாக எண்ண உள்ளிருந்து ஒருவன்(வின்சன்ட் ) வந்து மால்கம் தனக்கு தவறாக சிகிச்சை அளித்ததாக கூறி மால்கமை  முதுகு பகுதியில் சுட்டுவிட்டு தானும் இறந்துவிடுகிறான்.


பின்பு


கோல் என்ற ஒரு சிறுவனுக்கும் வின்சன்ட் போன்று இறந்தவர்கள் இவனோடு உரையாடுவது போன்ற உணர்வு இருப்பதாய் மால்கம் உணர்கிறார் . கோல் மீது அதீத கவனம் எடுத்துகொள்கிறார்.

தன் வேலையில் முழுவதுமாய் ஈடுபடுவதால் தன் மனைவி தன்னை விட்டு விலகி செல்வதை நினைத்து மனம் உருகுகிறார்.


                                                         
கோலின் பயத்திற்கான காரணத்தை  மால்கமும் ; மால்கமை  தன் மனைவி பிரிந்ததற்கான காரணத்தை கோலும் சொல்கின்றனர்..


படத்தின் இறுதி திருப்பம் கண்டிப்பாக பலர் கணிக்கவே முடியாமல் இருப்பது மனோஜின் நேர்த்தியான திரைக்கதை.


படத்தின் ப்ளஸ் கூர்மையான வசனங்கள்



  • கோலும் ஆசிரியரும் பேசி கொள்வது 

நமது நகரம் மிகவும் பழமையானது. இங்கு இருக்கும் ஒவ்வொரு கட்டிடமும் ஏதோ ஒன்றிற்காக பயன்பட்டு இருக்கின்றது. நமது பள்ளி எதுவாக இருந்தது தெரியுமா ??

கோல் : இங்கு மக்கள் தூக்கில் இடப்படுவார்கள்.

தவறு. யார் சொன்னார்கள் இவ்வாறு ??

கோல் :தூக்கில் இடப்ப்படுமுன் அவர்கள் அழுவார்கள் ; மக்கள் அவர்களை தூற்றுவார்கள்.

இது ஒரு நீதிமன்றம்.சட்டங்கள் இயற்றப்பட்ட இடம். சட்டவல்லுனர்கள் இருந்த இடம்
கோல் : அனைவரையும் கொன்ற இடமும் இது தான் 
                 
  • மால்கம் : என் மனைவி என்னை புரிந்துகொள்ளவில்லை

    கோல் : அவள் தூங்கும்பொழுது அவளிடம் பேசுங்கள்.தூக்கத்தில் அனைவரும் உண்மை பேசுவார்கள் 

இப்படத்தை பற்றி முழுதும் நான் எழுதவில்லை.6 ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு எதுவும் வெல்லாத ஒரு சிறந்த படம்


இப்படத்தின் முழு திரைக்கதையும் படிக்க

http://home.online.no/~bhundlan/scripts/TheSixthSense.htm



இப்படத்தை காண

  http://woowza.com/watch/92974251863886861885

Monday 27 February 2012

விபத்து

சொல்லுங்க மாமா

கோபால் , ப்ரீயா இருக்கியா

ஏன் , மாமா சொல்லுங்க


இல்ல ப்ரீயா இருந்தா சொல்லு வெளிய போலாம். எங்க? காலேஜ்லையா இருக்க.

இல்ல மாமா, காலேஜில இருந்து கெளம்பீட்டேன். இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவேன்.

சரி சரி சீக்கிரம் வா..

டேய் நான் கெளம்புறேன். மாமா கூப்பிடுறார்.

மூன்று பஸ் மாறினால் ,சீக்கிரம் சென்றுவிடலாம். கல்லூரியில் இருந்து ரெட்டியார் சத்திரத்திற்கு ஒரு டவுன் பஸ். பின்பு ஓட்டஞ்சத்திரதிற்கு ஒரு விரைவு. அப்புறம் பழனிக்கு ஒரு பஸ். எப்படியும் மாமா லேட்டாக தான் கெளம்பவார்.


ரெட்டியார் சத்திரத்தில் இறங்கிட்டேன் ..இன்னிக்குன்னு ஒரு பஸ்சும் நிக்கல. மாமாவும் கால் பண்ணல. 4 பஸ் நிக்காம போயிருச்சு.

திடீர்னு பாலத்துகிட்ட ஒரு புது காரும் லாரியும்  மோதிருச்சு . கார் இன்னும் ரெஜிஸ்டர் கூட பண்ணல. எல்லோரும் அத நோக்கி ஓடினாங்க.


ஆக்சிடண்டுன்க்ராதாள எல்லா பஸ்சும் நின்னுருச்சு. நானும் பஸ்ல ஏறிட்டேன் ..


விபத்துகளில் நன்மையையும் உண்டு. 

அந்த கார்க்காரன்  மேல தான் தப்பு ........ காதல் சொல்ல நேரமில்லை.உன் காதல் சொல்ல தேவையில்லை .நம் காதல் சொல்ல வார்த்தையில்லை .


ஹெட்செட்டிற்குள்  நுழைந்தன என் காதுகள்.

சேவக் 40  பந்தில் 70 ரன் . கம்பீரும் தன் பங்கிற்கு அடித்து நொறுக்க ; சட்டென விழித்தேன்.

9 MISSED CALLS ..

நல்ல தூக்கம்..

என்ன அப்பா சொல்லுங்க

எங்கடா இருக்க . இப்ப தான் பழனில இறங்கினேன். மாமா கெளம்பீட்டான்களா ??.


சரி சரி வீட்டுக்கு சீக்கிரம் வா. 


என்ன பா? சொல்லுங்க. மாமா ரெட்டியார் சத்திரத்துகிட்ட ஆக்சிடண்டுல இறந்துட்டார்.

விபத்துகளோ ; என்கவுன்டர்களோ நமக்கு சாதரணம் தான் . நம்மில் யாருக்கும் நடக்காத வரை 

Wednesday 22 February 2012

LIFE IS BEAUTIFUL

                                                              நம் வாழ்வில் என்று நாம் மகிழ்வுற்று இருக்கிறோம் என்று சிந்தித்தால் அது நம் வாழ்வின் முன்னேற்றத்தின் போதே அன்றி வேறெதுமாக இருக்காது. வாழ்வில் நாம் என்றாவது வேதனையின்    போது சிரித்து இருக்கிறோமா ??. அல்லது அதனை வெளிக்காட்டாமல் இருந்து இருக்கிறோமா??




LIFE IS BEAUTIFUL (1997 ) வெளியான இப்படம் அதுவரை ஹிட்லர் பற்றி வந்த படங்களில் முற்றிலும் வேறுபட்டு இன்றுவரை தனித்து நிற்கிறது . முகாம்களில் கொடுக்கப்படும் தண்டனையை ஒரு தந்தை  தன மகனிடம் இதை விளையாட்டு என சொல்லி , இறுதிவரை அதை வெளிக்காட்டாமல் இறந்தும் விடுகிறார்.


 குய்டோ என்ற இளைஞர் ஒரு புத்தக கடை வைக்க ஆசைப்பட்டு போதிய பொருளாதார வசதி இல்லாததால்  ; அங்கு இருக்கும் தன் மாமாவின் உணவகத்தில் வேலைக்கு சேருகிறார். படம் முழுவதிலும் நகைச்சுவையை தெளித்து வாழ்க்கை மிக சுகம் என காட்டுகிறார் . படம் முழுவதும் இரண்டாம் உலக போரால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லி இருப்பார்கள்.

                                                                       
மேல் உள்ள காட்சியில் ; மேற்பார்வையாளர் அனைத்து கைதிகளிடமும் தங்கள் வேலை பற்றியும்,கொடுக்கபோகும் உணவை பற்றியும் கடுமையாக பேசிக்கொண்டு இருக்க , குய்டோவின் பையன் மட்டும் சிரித்துகொண்டு இருக்கிறான். அவனை பொறுத்தவரையில் இது ஒரு விளையாட்டு.இந்த விளையாட்டில் வெற்றி பெற்றால் ஒரு பீரங்கி கிடைக்கும் என தன் தந்தை சொன்னது மட்டுமே அவன் நினைவில் இருக்கிறது.



தங்கள் அனைவரையும் யூதர்கள் என கூறி கொலைசெய்யபோகிறார்கள் என தெரிந்தும் தன் மகனிடம் அவன் போலியாய் சொன்ன விளையாட்டை உண்மையாக்கிகொண்டு இருக்கிறான்.The game starts now. You have to score one thousand points. If you do that, you take home a tank with a big gun. Each day we will announce the scores from that loudspeaker. The one who has the fewest points will have to wear a sign that says "Jackass" on his back. There are three ways to lose points. One, if you cry. Two, if you ask to see your mother. Three, if you're hungry and ask for a snack. Forget it! 
ஒரு காட்சியில் கூட குய்டோ தன் நிலையை பற்றி கவலைபடாமல் மகிழ்ச்சியாகவே இருக்கிறான்.



குய்டோவின்  மனைவி யூதர் இல்லை என தெரிந்ததும் அவளை விடுவிக்கின்றனர் . ஆனால் அவளோ "My husband and son are on that train. I want to get on that train. Did you hear me? I want to get on that train."


   
இரண்டாம் உலக போரில் ஹிட்லர் தோற்றவுடன், முகாம்களில் இருக்கும் கைதிகளை கொல்ல உத்தரவிடுகிறார் ; ஆதாரங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக. தன் மனைவியை காப்பாற்ற பெண் வேடம் இட்டு சென்று மாட்டிக்கொள்கிறார்.


இறுதிக்காட்சியில் தன் மகனை ஒரு கூண்டில் நிற்க வைத்துவிட்டு ; நாளை காலை வரை இதிலுருந்து வெளியே வரவில்லை எனில் பரிசு நமக்கு தான் என சொல்லிவிட்டு சாவை நோக்கி செல்கிறான்; எப்போதும் போல் சிரித்துக்கொண்டே.


குண்டுகள் வெடிக்கும் சத்தம் மட்டுமே

மறுநாள்

சிறுவன் தன் தாயை பார்க்கிறான். பீரங்கிகள் அணிவகுத்து வருகின்றன . அவன் வார்த்தைகளோடு படம் முடிகிறது

Mom, we won, we won!


இந்த வாழ்க்கை மிகவும் அழகானது ஏனெனில் இது அவன் தந்தை அவனுக்காக கொடுத்தது 

Saturday 18 February 2012

அம்புலி 3D

hii da

still in theatre only

ok ok

y didnt come to exam ??

ok ok film started. will call later

என்னடா படம் முடிஞ்சுச்சா

முடிஞ்சுச்சு டா

எப்படிடா இருக்கு MUK கு

டேய் நான் அம்புலி போனேன்

அம்புலியா ??

ஆமாண்டா தமிழோட முதல் 3D FILM

அப்ப நான் மை டியர் குட்டிச்சாத்தான் பார்த்தது

அதெல்லாம் 2D ல எடுத்து அப்புறம் மாத்தினது. இது தான் 3D காமரால எடுத்த முதல் படம்

கதை??



பழசு தாண்டா . ஊருக்குள அந்த பக்கமா போன பேய் அடிச்சு சாப்பிடுடும்னு பழைய பிட்டு .

ஓ. ஹீரோ ??

  ஓர் இரவு படத்துல வந்த அதே டீம். அந்த படத்துல PRODUCER ; director ; music கேமரா எல்லாம் இவுங்க தான். இதுலயும் அத  தான் பண்ணி இருக்காய்ங்க

ஏதோ படத்துல யாருமே தெரிய மாட்டாங்கன்னு சொன்னியே அதுவா ??

  ஆமாண்டா. அந்த படம் தான்

ஏன்டா அப்ப இந்த பட போஸ்டர்ல பார்த்திபன்; உமா ரியாஸ்கான் ; தம்பி ராமையா ; ஜெகன் போடோவெல்லாம் இருக்கு

  இவங்கெல்லாம் எக்ஸ்ட்ரா.அம்புளியோட அண்ண பார்த்திபன். அம்மா உமா .ரெண்டு பிரெண்ட்ஸ் லீவுக்கு வீட்டுக்கு போகாம இருப்பாங்க. அதுல ஒருத்தனோட அப்பா தம்பி ராமையா . ஜெகன் வந்து நாத்திகன் ரோல் டா.

அம்புலி யாரு ?

                               

உனக்கு தெரிஞ்ச மூஞ்சி தான் . இந்த மானாட மயிலாடல வந்தான் டா . மூஞ்சிகூட பருவா இருக்குமே. கருப்பா இருப்பான்.

கோகுலா ??

  அவந்தாண்ட. பாவண்டா அவன காட்டவே இல்ல . புல் மேக் அப். அவன்கரதே எழுத்து போடுற அப்ப தான் தெரியும்.

சரி சரி கடைசியா சாவான மாட்டானா??

எப்பயும் போல ENGLISH படத்துல எல்லாம் வருமே . அதே மாதிரி தான் . PART 2 ஆரம்பிக்கற மாதிரி தப்பிக்கிற மாதிரி முடிச்சுடுவாங்க.ஆனா நெறையா லாஜிக் மிஷ்டேக்கு டா .

  ஆரம்பிச்சுட்டியா ..சரி சரி என்னதான் புதுசா இருந்துச்சு.

  ஆர்ட் நல்ல இருந்துச்சு. அப்புறம் சில  சீன்ல   3D  சூப்பர இருந்துச்சு. வேறொன்னும் பெருசா இல்ல .

அவ்ளோதானா ??

 எப்பயும் போல ஒரே கதைய எடுக்காம புதுசா டிரை பண்ணுறாங்க . அதுக்கே  பாக்கலாம்டா. கம்மியான டிக்கட் எடுத்து; கிட்ட உக்காந்து பாரு. படம் பாக்க நல்லா இருக்கும்.

பாட்டு இருக்கா டா??

ஆமாண்டா   ஒரு 3 பாட்டு . ஆனா ஒன்னும் ஞாபகம் இல்ல . நெஞ்சுக்குள்ள யாருன்னு ஒன்னும் மட்டும் கேட்கலாம். bUT RR சூப்பர்ர்ரா

 சரி எத்தன நாள் ஓடும் ??

ஓடும் டா . ஒரு பத்து நாலு.

சரி விடு டவுன்லோடு பண்ணி பாத்துக்குறேன்.

டேய் இது 3D படம் டா.

ஓ சரி சரி ..

சரி சரி எங்க வேகமா போற

பிளாக்ல எழுத தான். இதையாவது படி டா

சரி சரி பார்போம் ..



  

Wednesday 15 February 2012

ஹிட்லரும் சினிமாவும் - 2

        ஹிட்லர் பற்றிய படங்களை விட அவர் யூதர்களுக்கு செய்தவற்றை பற்றி சொல்லும் உண்மை கதைகளும் புனையப்பட்ட கதைகளும் அதிகம். அவற்றுள் சிலவற்றை காண்போம்.

4. SCHINDLER'S LIST (1993).

                                           

                  ஆஸ்கர்  ஷிண்ட்லர் என்பவர் ஆயிரகணக்கான யூதர்களை ஹிட்லரின் கொடிய சிறையில் இருந்து காப்பாற்றுவது தான் கதை. தன் தொழிற்சாலையில் ஆட்களை வேலைக்கு அமர்த்துவதாக கூறி பல யூதர்களை காப்பாற்றிய  ஒருவரின் கதை. ஏழு ஆஸ்கர்களையும் ; பல அவார்டுகளையும் வாங்கி குவித்த படம் . ஸ்டீபன் ஸ்பீல்பெர்கின் மிகச்சிறந்த  படங்களில் ஒன்று.சிறந்த நூறு அமெரிக்க படங்களில் 8 ஆம் இடம் பெற்ற படம்


5.LIFE IS BEAUTIFUL (1998)

               

             இரண்டாம் உலக போருக்கு முன்னர் திருமணம் ஆகி மகிழ்வாக இருக்கும் ஒரு குடும்பம். போர் ஆரம்பிக்கப்பட்டதற்கு பின் முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யபடுகின்றனர். இத்தாலி நாட்டின் இந்த படம் ஆஸ்கர் வரலாற்றில் முதல் முறையாக மூன்று விருதுகளை வாங்கியது.ஒரு வேற்று மொழி படம் இவ்வாறு வாங்குவது இதுவே முதல் முறை. கதையின் நாயகன் ஒவ்வொரு FRAME யிலும் வாழ்க்கை மிகவும் அழகானது என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். தம் மகனிடம் முகாமில் அடைபட்டு இருப்பது ஒரு விளையாட்டு என அவர் சொல்லுவதும் ; இறுதியில் தன்னை கொலை செய்ய போகிறார்கள் என தெரிந்தும் மகனிடம் காட்டிக்கொள்ளதவாறு விளையாட்டாய் நடந்து செல்வதும் சிரிப்பை மறைத்து அழ தூண்டும் காட்சி..
இப்படத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள
http://get2kg.blogspot.in/2012/02/life-is-beautiful.html

6.PIANIST (2002)

                       
             Władysław Szpilman என்பவரின் சுயசரிதை படமாக்கப்பட்டு இருக்கிறது. LIFE IS BEAUTIFUL படத்தில் தன் குடும்பத்திற்காக தன் உயிரை தியாகம் செய்கிறார் நாயகன். இந்த படத்தில் தன் உயிரை பெரிதாக நினைக்கிறார் ஹீரோ. தன் குடும்பம் முழுதும் இரயிலில் ஏறி யூதர்களை கொடுமை படுத்தும் கேம்பிற்கு தள்ளப்பட இவர் மட்டும் தப்பித்துகொள்கிறார் . அவர் தன் வாழ்கையை எப்படி யாருக்கும் தெரியாமல் வாழ்கிறார் என நீள்கிறது படம் . இந்த  போலந்து திரைப்படம் 3 ஆஸ்கர்களை பெற்றது.. LIFE IS BEAUTIFUL மிக சிறந்த படம் எனினும் நான் PIANIST தான்.

மேலும் சில படங்கள் உள்ளன.


முதல் பாகம்


http://get2kg.blogspot.in/2012/02/blog-post_14.html

SPEECHES BY HITLER

DECLARATIONS OF WAR
AGAINST THE SOVIET UNION

http://www.ihr.org/jhr/v19/v19n6p50_Hitler.html

AGAINST THE UNITED STATES OF AMERICA

http://www.ihr.org/jhr/v08/v08p389_Hitler.html

நன்றி எழுத உதவிய தளங்கள்

http://en.wikipedia.org/wiki/Main_Page

http://www.worldfuturefund.org

https://twitter.com/#!/mankuthirai

https://twitter.com/#!/kabulwala

                                                                    

Tuesday 14 February 2012

ஹிட்லரும் சினிமாவும்

                   ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி. யூதர்களுக்கு எதிராக கொடூரமாக செயல்பட்டவர் என அவரை எவ்வளவு வேண்டுமானாலும் தாக்கி பேசலாம் . அவர் மறுப்பு கூற இங்கு இல்லை. ஹிட்லர் எனக்கு மிகவும் பிடிக்கும். ஹிடலர் என்றால் தெரியாதவர்கள் கூட அவரின் மீசை வைத்திருப்பார்கள். ஹிட்லர் மீசை இல்லாமல் அவரா என அவருக்கே ஐயுறும்   நிலையில் இருப்பார்.



ஆனால் இன்றும் அவரை வைத்து பணம் சம்பாதித்துகொண்டுத்தான் இருக்கிறது சினிமா.ஹிட்லர் பற்றியும் ; அவர் யூதர்களுக்கு செய்த கொடுமைகள் பற்றியும் இன்று வரை வெளிவந்த சினிமாக்களின் தொகுப்பு 

                                            

1. THE DOWNFALL (2004  )

                       ஹிட்லர் போன்ற முகம் கொண்ட ஒரு படம் வருவதற்கு 2004 வரை திரையுலகம் காத்து இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஹிட்லர்  தன் வாழ்நாளின் கடைசி 12 நாட்கள் பற்றிய படம். ஹிட்லர் பற்றி தெரிந்துகொள்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று . இப்படத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள 

2. THE GREAT DICTATOR (1940)

                  ஹிட்லர் பற்றி முதல் முறையாக வந்த படம். அந்த துணிவு நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினால் தான் முடிந்து இருக்கிறது. ஹிட்லர் பற்றியும் அவர் யூதர்களுக்கு செய்த கொடுமைகள் பற்றியும் ஹிட்லர் வாழும் போது வந்து சர்ச்சை ஏற்படுத்திய படம். இப்படத்தை பார்த்த ஹிட்லர் ஒரு காட்சியை  மட்டும் வேறு மாதிரி நடித்து காட்டினாராம். இது சார்லி அவர்களின் முதல் பேசும் படம். ஒருவர் செய்யும் தவறுகளை நகைச்சுவையாய் சொல்லிய படம். முதல் ஆள்மாறாட்டக்கதை. இப்படத்தின் இறுதியில் சாப்ளின் பேசிய வசனம் மிகவும் பிரபலம் . http://www.oldmagazinearticles.com/Charlie_Chaplins_Final_Speech_from_THE_GREAT_DICTATOR_pdf  

3. HITLER THE RISE OF EVIL (2003) (TV SERIES)

                                                                                 
ஹிட்லர் தன் பிறப்பு முதல் முதல் உலக போர் முடிவு வரை சித்தரிக்கும் ஒரு தொலைக்காட்சி தொடர். இந்த தொடர் பின்பு 2003 இல் திரைப்படமாக வெளிவந்து இரண்டு எம்மி விருதுகளை பெற்றது. ஹிட்லர் தான் அடைந்த நிலைமையை இப்படத்தில் தெளிவாக சித்தரித்து இருப்பார்கள்.  முதல் உலக போர் முடிவில் ஒரு நாய் அடிபட்டு இருக்க அதை ஹிட்லர் தூக்கிச் செல்லுமாறு திரை முடிவடையும்..

தொடர்ச்சி நாளை .....

Wednesday 8 February 2012

கைதி


                                                    சிக்கனம் , கஞ்சம் , சுயநலம் , இந்த வார்த்தைகளுக்கு தமிழின் ஆழம் நோக்கி வேறு ஒரு வார்த்தை தேடினால் அது தான் அருண் என்ற இந்த கதையின் குறுகிய மனம் உள்ள பாத்திரத்தின் படைப்பு.. 

                                பேச்சில் ஒரு தெளிவு. சீரிய சிந்தனைகளை  வலைதளங்களில் தெளிப்பவன்  , எளிதில் பழகும் பண்பு என ஒரு முகம் . வாழ்விலோ ஒரு கஞ்சம் , இலவசத்தை நம்பி ஓடும் ஒரு ஜீவன்; என ஒரு முகம் . நம்மை போல வலை தளங்களில் மட்டும் வல்லவன். 

                                 தான் செல்லவிருக்கும் ஊருக்கு வீட்டில் இருந்தே உணவு பொட்டலம் கொண்டு வந்திருந்தான்.. நடந்து  வருகிற வழியில் ஒரு கடையில் சிம் கார்டுகள் விற்பனை செய்யபட்டுகொண்டு இருந்தன.. 

                       TALKTIME 999 
                      
                       SIM CARD 99


ஆக்டிவேடட் பண்ணின சிம் சார். 

 100 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான். திடீரென் ஒரு சிம் கார்டு கீழே விழ அதை எடுத்து வைத்து கொண்டான்...

நூறு ருபாய் மிச்சம்..

எப்போதும் போல் அன்ரிசர்வ்வேசனில்  சென்று டிக்கெட் எடுக்காமல் நின்று கொண்டான். வேலூரில் இருந்து ஈரோடிற்கு சென்று கொண்டிருக்கிறான் . 

இரயில் கிளம்பிகிறது. 

அங்கு அவன் சந்திக்கும் நபர்கள் பற்றிய உரையாடல் தான் கதை. 

NOTE ! : மூவரின் பேச்சுகளும் நேர் கூற்றில் தான் வரும்..

NOTE 2 : பெயர் குறிக்கபடாமல்   காட்சிகள் நகரும். இரயில் பயணங்களில் பலர் பெயர் கேட்பதில்லை.

"யோவ் ஜன்னல மூடுயா " உள்ளிருந்து ஒரு குரல்.

ஜன்னல மூடு . உனக்கு குளுருலேன்னா மத்தவங்கள் பத்தியும் யோசி.. 

நீங்க எங்கிருந்து வர்றீங்க 

சென்னைல இருந்து ஜோலார்பேட்டை போகனும் 

இந்த இரயில் அங்க நிக்காதே 

தெரியும் சார் . டிரைன் ஸ்லோவா போகும் . அங்க வேலை செஞ்சிட்டு இருக்காங்க . சோ எப்பயும் போல் ரன்னிங் தான் 

தம்பி நீ எந்த ஊரு 

திண்டுக்கல் ணா . VIT காலேஜுக்கு வந்தேன் ..

அங்க என்ன பா ?

CULTURALS ணா .. நாளைக்கு தான் முடியுது. ஆனா இன்னிக்கே கெளம்புறேன் ..

என்ன ஊர்ரா இது . சுத்தி பார்க்க ஒரு இடம் கூட இல்ல . ஏதோ கற்கோவில்னு சொன்னாங்க. போய் பார்த்தா வெறும் கல்லு தான் இருக்கு ...

உங்களையெல்லாம் ஊட்டில போய் விட்டாலும் என்னபா இது வெறும் பனியா  இருக்குன்னு வந்துடுவீங்க 

அப்புறம் ஊட்டில என்னதாங்க இருக்கு.போன தடவ ஊட்டி போனப்ப அரை மணி நேரத்துல எல்லாத்தையும் பார்த்துட்டேன். ஏதோ போட் ஹௌசுன்னு சொன்னாங்க. படகுல பெடல் போட்டு வச்சுருந்தாங்க..

அண்ணா ஒரு இடத்துக்கு போனா . அதா மெய்மறந்து பாக்கணும். நீர் வீழ்ச்சின்னா வைரமுத்து சொன்ன மாதிரி அது நீர் எழுச்சிங்ற அளவுக்கு அத  ரசிச்சு பார்க்கணும். இல்லாட்டி வாழுறதே வேஸ்ட்டு.. 

அட ஆம்பூர் வந்துருச்சு போல 

எப்டினா இவ்ளோ இருட்டுலயும் கரெக்டா சொல்றீங்க 

எல்லாம் பிரியாணி வாசத்த வச்சு தான்.

ஏன் யா நீ வேற .. இங்க தோல் பேக்டரி இருக்கு..

ஆமா அண்ணா அதையெல்லாம் மூடியாச்சு. ஆனா இன்னும் வாட மட்டும் போகல 

சரி எங்க வேலை பாக்குறீங்க..

சென்னைலங்க 

சென்னைல எங்க ??

தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க 

இல்ல நந்தனத்துக்கு   வருவேன்.

அங்க தாங்க வேலை பாக்குறேன்

ஆமா அங்க அந்த பெரியார் மாளிகை இருக்கே; அதுக்கும் பெரியாருக்கும் என்னங்க சம்பந்தம்.

அண்ணா உங்களுக்கு உண்மையாவே தெரியாதா இல்ல ச்சும்மா கேக்குறீங்களா

தெரிஞ்சுக்க தான்பா கேக்குறேன். ஒரு லாரி டிரைவருக்கு என்ன தெரியும் சொல்லு 

சரி வேல்லூர்ல அமிர்தியாவது  பாத்துருக்கியா?

ஆமா அந்த காடுதான.

எப்படியா எத சொன்னாலும் வெறுத்து சொல்ற..

அண்ணா நானும் பாத்துருக்கேன் அதுல நீரோடை ஒன்னு இருக்கும் .

ஆமா தம்பி டியுப்ல தண்ணி லீக் ஆனா மாதிரி வருமே அது தான

ஐயோ கஷ்டம் உங்களோட . எதையுமே ரசிக்க மாட்டீங்களா

இவனேலாம் தாஜ் மஹால் கூட்டிட்டு போய் விட்டாலும் , என்னபா வெறும் சுண்ணாம்புல பெயிண்ட் அடிச்சுருக்காங்கன்னு  சொல்லுவான்

சரி அத விடுங்க எங்க வேலை பாக்குறீங்க

அது தான் நந்தனம்னு சொன்னேன்ல

ஆமா ஆமா சொன்னீங்க .

பெரியார் மாளிகைக்கு பக்கத்து பில்டிங்..

அப்ப அங்க வந்தா உங்கள பார்க்கலாம்

என்ன பார்த்து  என்னங்க பண்ண போறீங்க . இரயில் பயணங்கள் நீடிக்காது..

ஏன் இப்படி சொல்றீங்க.. சரி உங்கள வந்து பாக்குறேன்.

ஏன்பா தம்பி பழனில சுத்தி பாக்குற மாதிரி ஏதுனாச்சும் இருக்கா ?

ஒன்னும் இல்லணா . பழனி மலைய சொன்னா . மலைக்கு மேல ஒரு கோவில கட்டி வச்சுருக்காங்கன்னு சொல்ல போறீங்க..

வாணியம்பாடி வந்துருச்சு போல 

ஆமா ஜோலார்பேட்டைல வண்டி நிக்காதுல்ல என்ன பண்ண போறீங்க 

உங்களுக்கு என்ன அம்னீசியாவா 

அப்டீன்னா 

அங்க வேலை நடக்குது. அதுனால மெதுவா தான் போகும். எப்பயும் போல ரன்னிங் தான்..

சரிங்க உங்க நம்பர் கொடுத்தீங்கன்னா ....... 

பேரே தெரியாது. நம்பர் வச்சு என்ன பண்ண போறீங்க 

சரி பேர சொல்லுங்க..

மறுபடியும் சொல்றேன். இரயில் பயணம் நீடிக்காது..

உள்ளிருந்து ஒருவன் வருகிறான் 

தம்பி தம்பி என்ன பண்ற 

ஜோலார்பெட்ல வண்டி நிக்காது எப்படி எறங்குவ?

ரன்னிங்க்ள இறங்கீடுவியா??.

சரி நான் இறங்குற மாதிரி இறங்கு..

பாத்தியா இவ்ளோ நேரம் நம்பர் கேட்டுட்டு இப்ப ஆள காணோம். எங்கயா அந்த மனுஷன்??..

அண்ணா நீங்க நம்பர் கொடுங்க. நான் அவர்ட்ட கொடுத்துடறேன் 

தம்பி நீ இறங்குவியா  ?

சரி உன் பேக்க தூக்கி போடு.

இப்படி இறங்கு 

டே  இறங்கு டா

மறுபடியும் இரயிலில் ஏறி

நீ மொதல்ல இறங்கு பா 

அண்ண உங்க நம்பர் . 

உன் நம்பர் சொல்லு MISSED CALL கொடுக்கறேன் 

9629151439 

பேச்சுக்கள் முடிந்தது 

இரயிலில் இரங்கியவாறு அவர் அலைபேசி எடுத்து என் நம்பரை அழுத்தி 'ஹலோ' என்றார்   ; விரைவாக சென்ற வண்டியின் வேகத்தில் முன்னர் இருந்த ப்ளேட்பாரம் கம்பியில் இடித்து ரத்தம் வழிய அவர் இறப்பதை அவன் பார்த்தான்..

மண்டயில் ஏதேதோ சொல்ல 

இரயில் கம்பிய புடிச்சு இழு 

கத்து 

ஏதாவது பண்ணு 

திடீரென அவ்வாறு தோன்றியது

ஏன் கத்தனும். நமக்கெதுக்கு இந்த வேலை.

சிம்மை கழற்றி தூக்கி எறிந்தான்..

100 ரூபாய் சிம் உதவியது..



Wednesday 1 February 2012

DIAL M FOR MURDER

                                       நான் மிகவும் பார்த்து அதிசயித்த படம் . இந்த படத்தை உலக சினிமா என்று சொன்னதிற்காக ஆறு மாதத்திற்கு முன்   பதிவிறக்கம் செய்தேன். முதலில் பார்க்க ஆரம்பித்த போது . சுத்தமாக பிடிக்கவில்லை.  விரைவாக முன்னோக்கினேன். ஏன் பதிவிறக்கம் செய்தோம் என்று யோசிக்க வைத்துவிட்டது. அப்படி ஒரு நீ....ளம். ஐவர்  மட்டுமே கதையில் வருகிறார்கள்.

                    சென்ற மாதம் வேலை ஏதும் இல்லாததால் மீண்டும் பார்த்தேன். 

 ஒரு படத்திற்கு BUDGET , CASTING என்று எதுவும் முக்கியம் இல்லை என்று சட்டென உணர்த்தும் ஒரு படம்.. 
                                       

                              

                                    கதை  கண்டிப்பாக ஒரு வரி தான்.மனைவியின் தவறான உறவிற்காக கணவன் (RAY MILLAND )தன பால்ய நண்பனை (DAWSON) வைத்து அவளை கொலை செய்ய திட்டமிடுகிறான்.கொலை செய்துவிட்டு அவளின் பணத்தை பெற முயல்கிறான்.

                        கொலை செய்யும்  திட்டத்தின் ஒவ்வொரு FRAME இலும் ALFRED HITCHCOCK இன் நேர்த்தி பளிச்சிடிகிறது. கொலை செய்யும் திட்டத்தை சொல்லி முடித்தவுடன் MILLAND தன நண்பன் DAWSON பயன்படுத்திய பொருட்களில் அவன் ரேகையை துடைக்கும் SHOT அருமை... 

                          DAWSON கொள்ளபடுவதும், அதை தன் மனைவியின் மீது குற்றம் சுமத்தாமலே அவளை மாறிவிடும் இடத்திலும் MILLAND இன் நடிப்பு ஈர்க்கிறது..  

                          படத்தின் இறுதியில் உண்மையை கண்டுபிடித்து அந்த போலீஸ்காரர் தன் மீசையை முறுக்கும் போது ஏனோ நம் சினிமா பார்த்து எழுத்து போன்றதொரு உணர்வு ..
  
படத்தில் பார்க்க வேண்டிய காட்சிகள் 

1 ) கொலை செய்வதற்கு நேரம் குறித்து , MILLAND பார் ஒன்றில் நேரத்தை சரி பார்க்க தன் கடிகாரம் ஓடாமல் இருக்கும் காட்சி.முதல் திருப்பம் ...

2 ) கொலை செய்ய அனுப்பிய ஆள் தவறி தானாக இறப்பதும் அதற்கு ஏற்றார் போல் MILLAND கதை சொல்வதும்...

3 )மனைவியின் கள்ள காதலன் கற்பனையாக ஒரு கதை சொல்ல அதுதான் உண்மை என்று ஊர்ஜீனம் செய்வது..

4 ) MILLAND சாவியை ஒலித்து வைக்க சொல்லும் இடத்தை போலீஸ் இறுதியில் கண்டுபிடிப்பது  
STORY , SCREENPLAY : FREDRICK 
DIRECTION : ALFRED HITCHCOCK