Pages

Tuesday 14 February 2012

ஹிட்லரும் சினிமாவும்

                   ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி. யூதர்களுக்கு எதிராக கொடூரமாக செயல்பட்டவர் என அவரை எவ்வளவு வேண்டுமானாலும் தாக்கி பேசலாம் . அவர் மறுப்பு கூற இங்கு இல்லை. ஹிட்லர் எனக்கு மிகவும் பிடிக்கும். ஹிடலர் என்றால் தெரியாதவர்கள் கூட அவரின் மீசை வைத்திருப்பார்கள். ஹிட்லர் மீசை இல்லாமல் அவரா என அவருக்கே ஐயுறும்   நிலையில் இருப்பார்.



ஆனால் இன்றும் அவரை வைத்து பணம் சம்பாதித்துகொண்டுத்தான் இருக்கிறது சினிமா.ஹிட்லர் பற்றியும் ; அவர் யூதர்களுக்கு செய்த கொடுமைகள் பற்றியும் இன்று வரை வெளிவந்த சினிமாக்களின் தொகுப்பு 

                                            

1. THE DOWNFALL (2004  )

                       ஹிட்லர் போன்ற முகம் கொண்ட ஒரு படம் வருவதற்கு 2004 வரை திரையுலகம் காத்து இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஹிட்லர்  தன் வாழ்நாளின் கடைசி 12 நாட்கள் பற்றிய படம். ஹிட்லர் பற்றி தெரிந்துகொள்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று . இப்படத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள 

2. THE GREAT DICTATOR (1940)

                  ஹிட்லர் பற்றி முதல் முறையாக வந்த படம். அந்த துணிவு நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினால் தான் முடிந்து இருக்கிறது. ஹிட்லர் பற்றியும் அவர் யூதர்களுக்கு செய்த கொடுமைகள் பற்றியும் ஹிட்லர் வாழும் போது வந்து சர்ச்சை ஏற்படுத்திய படம். இப்படத்தை பார்த்த ஹிட்லர் ஒரு காட்சியை  மட்டும் வேறு மாதிரி நடித்து காட்டினாராம். இது சார்லி அவர்களின் முதல் பேசும் படம். ஒருவர் செய்யும் தவறுகளை நகைச்சுவையாய் சொல்லிய படம். முதல் ஆள்மாறாட்டக்கதை. இப்படத்தின் இறுதியில் சாப்ளின் பேசிய வசனம் மிகவும் பிரபலம் . http://www.oldmagazinearticles.com/Charlie_Chaplins_Final_Speech_from_THE_GREAT_DICTATOR_pdf  

3. HITLER THE RISE OF EVIL (2003) (TV SERIES)

                                                                                 
ஹிட்லர் தன் பிறப்பு முதல் முதல் உலக போர் முடிவு வரை சித்தரிக்கும் ஒரு தொலைக்காட்சி தொடர். இந்த தொடர் பின்பு 2003 இல் திரைப்படமாக வெளிவந்து இரண்டு எம்மி விருதுகளை பெற்றது. ஹிட்லர் தான் அடைந்த நிலைமையை இப்படத்தில் தெளிவாக சித்தரித்து இருப்பார்கள்.  முதல் உலக போர் முடிவில் ஒரு நாய் அடிபட்டு இருக்க அதை ஹிட்லர் தூக்கிச் செல்லுமாறு திரை முடிவடையும்..

தொடர்ச்சி நாளை .....

No comments:

Post a Comment