Pages

Wednesday 22 February 2012

LIFE IS BEAUTIFUL

                                                              நம் வாழ்வில் என்று நாம் மகிழ்வுற்று இருக்கிறோம் என்று சிந்தித்தால் அது நம் வாழ்வின் முன்னேற்றத்தின் போதே அன்றி வேறெதுமாக இருக்காது. வாழ்வில் நாம் என்றாவது வேதனையின்    போது சிரித்து இருக்கிறோமா ??. அல்லது அதனை வெளிக்காட்டாமல் இருந்து இருக்கிறோமா??




LIFE IS BEAUTIFUL (1997 ) வெளியான இப்படம் அதுவரை ஹிட்லர் பற்றி வந்த படங்களில் முற்றிலும் வேறுபட்டு இன்றுவரை தனித்து நிற்கிறது . முகாம்களில் கொடுக்கப்படும் தண்டனையை ஒரு தந்தை  தன மகனிடம் இதை விளையாட்டு என சொல்லி , இறுதிவரை அதை வெளிக்காட்டாமல் இறந்தும் விடுகிறார்.


 குய்டோ என்ற இளைஞர் ஒரு புத்தக கடை வைக்க ஆசைப்பட்டு போதிய பொருளாதார வசதி இல்லாததால்  ; அங்கு இருக்கும் தன் மாமாவின் உணவகத்தில் வேலைக்கு சேருகிறார். படம் முழுவதிலும் நகைச்சுவையை தெளித்து வாழ்க்கை மிக சுகம் என காட்டுகிறார் . படம் முழுவதும் இரண்டாம் உலக போரால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லி இருப்பார்கள்.

                                                                       
மேல் உள்ள காட்சியில் ; மேற்பார்வையாளர் அனைத்து கைதிகளிடமும் தங்கள் வேலை பற்றியும்,கொடுக்கபோகும் உணவை பற்றியும் கடுமையாக பேசிக்கொண்டு இருக்க , குய்டோவின் பையன் மட்டும் சிரித்துகொண்டு இருக்கிறான். அவனை பொறுத்தவரையில் இது ஒரு விளையாட்டு.இந்த விளையாட்டில் வெற்றி பெற்றால் ஒரு பீரங்கி கிடைக்கும் என தன் தந்தை சொன்னது மட்டுமே அவன் நினைவில் இருக்கிறது.



தங்கள் அனைவரையும் யூதர்கள் என கூறி கொலைசெய்யபோகிறார்கள் என தெரிந்தும் தன் மகனிடம் அவன் போலியாய் சொன்ன விளையாட்டை உண்மையாக்கிகொண்டு இருக்கிறான்.The game starts now. You have to score one thousand points. If you do that, you take home a tank with a big gun. Each day we will announce the scores from that loudspeaker. The one who has the fewest points will have to wear a sign that says "Jackass" on his back. There are three ways to lose points. One, if you cry. Two, if you ask to see your mother. Three, if you're hungry and ask for a snack. Forget it! 
ஒரு காட்சியில் கூட குய்டோ தன் நிலையை பற்றி கவலைபடாமல் மகிழ்ச்சியாகவே இருக்கிறான்.



குய்டோவின்  மனைவி யூதர் இல்லை என தெரிந்ததும் அவளை விடுவிக்கின்றனர் . ஆனால் அவளோ "My husband and son are on that train. I want to get on that train. Did you hear me? I want to get on that train."


   
இரண்டாம் உலக போரில் ஹிட்லர் தோற்றவுடன், முகாம்களில் இருக்கும் கைதிகளை கொல்ல உத்தரவிடுகிறார் ; ஆதாரங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக. தன் மனைவியை காப்பாற்ற பெண் வேடம் இட்டு சென்று மாட்டிக்கொள்கிறார்.


இறுதிக்காட்சியில் தன் மகனை ஒரு கூண்டில் நிற்க வைத்துவிட்டு ; நாளை காலை வரை இதிலுருந்து வெளியே வரவில்லை எனில் பரிசு நமக்கு தான் என சொல்லிவிட்டு சாவை நோக்கி செல்கிறான்; எப்போதும் போல் சிரித்துக்கொண்டே.


குண்டுகள் வெடிக்கும் சத்தம் மட்டுமே

மறுநாள்

சிறுவன் தன் தாயை பார்க்கிறான். பீரங்கிகள் அணிவகுத்து வருகின்றன . அவன் வார்த்தைகளோடு படம் முடிகிறது

Mom, we won, we won!


இந்த வாழ்க்கை மிகவும் அழகானது ஏனெனில் இது அவன் தந்தை அவனுக்காக கொடுத்தது 

1 comment:

  1. சாகும் போதும் சிரிக்க நம்மில் எத்தனை பேரால் முடியும்? உலகின் சிறந்த நூறு படங்களில் ஒன்றிது

    ReplyDelete