Pages

Thursday 21 June 2012

சாட்சி

இரவு மணி இரண்டு இருக்கும்.

கார்த்திக் சற்றும் பயமில்லாமல் அந்த ஊரின் புனிதமேரி நினைவாலயத்தின் உள்ளே சென்றுகொண்டு இருந்தான்.அவன் அலைபேசியின் வெளிச்ச உதவியோடு கல்லறைகளை கடந்துகொண்டு இருந்தான்.தான் தேடிவந்ததை கண்டது போல் ஒருநிமிடம் ஒரு கல்லறையை வெறித்துப் பார்த்தான்.

                                                           கரோலின் பெர்னாண்டஸ் 
                                          தோற்றம் 22.06.1986 மறைவு 26.12.2010 .

அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்தவன்  சட்டென அங்கிருந்த ஒரு கோடாலியை எடுத்து கல்லறையை உடைக்கத் தொடங்கினான்.

உள்ளே அவளின் சருகு போன்றதொரு கூடு  தான் இருந்தது.மூக்கின் துவாரம் வழியாக ஒரு புழு ஊர்ந்து கொண்டு இருந்தது.
அவனது முகம் வியர்த்துவிட்டது.சட்டென அந்த உடலை எடுத்து தன் முகத்தின் அருகே கொண்டுவந்தான்.தன் மொபைலில் ஒரு புகைப்படம் எடுப்பதற்குள் எங்கிருந்தோ வந்த கூட்டம் அவனை சுற்றிவளைத்துவிட்டது.

காவல்நிலையம்.....

..................
சற்று சோர்வடைந்த குரலுடன் கார்த்திக் பேச ஆரம்பித்தான்.

நானும் கரோலினும் லவர்ஸ் சார்.
.............................
............................
அவன் கதையைக்கேட்டு எல்லோரும் சோகமுகத்தோடு இருந்தனர்.

ஊட்டியிலிருந்து காரில் திரும்பிக்கொண்டு இருக்கும் பொழுது வேறொரு கார் நேரெதிரே வர ;இவன் தன் காரை திருப்பமுயன்று அது ஒரு மரத்தின் மீது மோதி அவள் இறந்துவிட்டதாகவும் கூறினான்.

இறந்தாலும் காதலி காதலிதானே. அவள் பினமானாலும் ,சில வருடத்தில் மக்கிவிட்டாலும் இவன் காதல் போயத்துவிடுமா என்ன?.

இவனது முகவரியைக்குறித்துக்கொண்டு  காவல்துறையினர்  இவனைவிடுவித்தனர்.

காரில் தன் நண்பனோடு பயணிக்கத்தொடங்கினான்.

டேய் என்ன சொல்லிடா தப்பிச்ச . கார் ஓட்டிக்கொண்டே பதில் எதிர்பார்த்து இருந்தான் ஜெரோம்.

பதிலெல்லாம் இருக்கட்டும்.பெட் வச்ச 5000 ரூபாயை எடு. என்னமோ ஜீசஸ் , பிசாசுனெல்லாம் பயம் காட்டின.எப்புடி.

கண்டிப்பா காச தர்றேன்.என்னடா சொன்ன?.

லைட்டா மன்மதன் அம்பு கதைய உல்டாபண்ணி சொன்னேன். எல்லோரும் நம்பீட்டாங்க.

சரி அந்த பொண்ணு.

கரோளின்க்ரா பேரயே அங்க தான் பார்த்தேன். அட போட பொணம் என்ன வந்து சாட்சியா சொல்ல போகுது.

இருவரும் சிரித்தனர்.

மறுநாள் காலை ...

காரும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் உடல் நசுங்கி பலி.

இது விபத்து அல்ல கரோலின் தான் இவர்களை கொன்றாள் என்று இந்த இரு பிணமும் சாட்சியா சொல்ல போகிறார்கள்

நோட்டு:புள்ளி மட்டும் வைத்து இருக்கும் இடங்களில் நீங்களாகவே
ஒரு காதல் கதையை முடிவு செய்துகொள்ளவும்