Pages

Monday 30 January 2012

வாலு

                                     
                                                                
                                                                வாலு
     
               எப்பயும் போல ஜெயா வீட்டு சந்துல கத்திக்கிட்டு இருந்துச்சு.

        கிர்ர்ர்ர்

        கிரர்ர்ர்ரர்ர்ர்ர்

         கிர்ர்

        "ஜெயா என்ன கத்துற "  சந்தோரமாய் எட்டி பார்த்தேன் ...

        நான் தான் சிங்கம் கிர்ர்ர்ரர்ர்ர்ர் கிர்ர்ரர்ர்ர்ர்

        சிங்கமா??  சரி சிங்கம்னா வாலு இருக்கணும் தெரியுமா. உனக்கு தான் வால் இல்லையே 

         தன்னை தான் பின்புறமாய் திரும்பி பார்க்க நினைத்து சுற்றி விழுந்தாள்..

        தனக்கு இல்லை என்பது போல் நினைத்து நமட்டு சிரிப்பு சிரித்தாள்..

        எனக்கும் சங்கடமாய் பட்டது ,ஒரு குழந்தையை ஏமாற்றியது..

      சட்டென பதில் வந்தது அவளிடம் . நிசப்தம் மட்டுமே என்னிடம்

                 

       ஆமா எனக்கு இல்லை அண்ணாக்கு இத்துகூண்டா  முன்னாடி நீட்டீட்டு இருந்துச்சு..

நாகரீக முரண்

                                                    நாகரீகம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு என்ன பதில் சொன்னாலும் பொருந்தும்.சிந்து சமவெளியில் தொடங்கி இன்றளவும் தொடர்கிறது.இன்று நான் சொல்லும் பதில் நாளை தவறாகிவிடும்.. அது ஒரு மாற்றத்தின் கட்டாயத்தில் உள்ளது. தவறெனக்கொள்ளபடுவது சரியாவதும். சரி எனக்கொண்டது தவறாவதும் வாடிக்கை ஆகிவிட்டது..1950 களில் கடுக்கன் போடும் ஆண்கள் மத்தியில் போடாதவர்கள் குற்றவாளிகள் போல் பார்க்கபட்டனர்.  இன்றும் அதே நிலைமை. என்ன ஒரு சிறு மாற்றம் கடுக்கன் STUD  ஆகி உள்ளது. 

                   ஒரு குவளை அளவு அரிசியில் இருக்கும் அதே சத்துக்கள் தான் கோதுமையிலும் ஓட்சிலும் இருப்பதாக கேள்வி. 'உன் மண்ணில் விளையாத ஒரு உணவு பொருள் உன் உடம்பிற்கு ஒவ்வாது " என ராஜாஜி சொன்னதாக கேள்வி. மூன்று பதார்தத்திலும் நாம் சாப்பிடும் அளவு தான் வேறுபட போகிறதே ஒழிய வேறில்லை. ஏனோ நாம் பிறரின் பொருட்கள் மீது கொண்டிருக்கும் மோகம் குறைந்தபாடில்லை.. 

                ரவிக்கை இல்லாமல் இருந்த காலம் மறைந்து பின்னர் ரவிக்கைகளின் அளவு குறைந்து. தற்போது மீண்டும் அது இல்லாமல் அணிவது  கவர்ச்சி;நவநாகரீகம் என கொள்ளப்படுகிறது .. 

                நாம் சாப்பிடும் உணவு. சாப்பிடும் பொருள் என அனைத்தும் கால சக்கரத்தின் கீழ் சுழன்று  கொண்டே இருக்கிறது.. நம் கை விரலை விட கரண்டியும்; முட்கரண்டியும் சுத்தமானவை தான் என்பதில் எனக்கு  உடன்பாடில்லை. சுத்தம் இல்லை எனிலும் கூட பிறர் என் விரல்களை பயன்படுத்தி இருக்கபோவதில்லை .சர்வ பள்ளி  ராதாகிருட்டிணன் ஒரு முறை இங்கிலாந்து சென்ற போது சர்ச்சில் அவர்கள் விரல்களில் உணவு உண்ணும் ராதாகிருட்டிணனை கேலி செய்து இருக்கிறார். "எங்கள் ஊரில் கழுதை கூட கரண்டியில் தான் சாப்பிடும்" அதற்கு ராதாகிருட்டிணனின் பதில் அவரை ப்ளார் என அறைய வைத்தது. "நான் மனிதனாக இருக்க ஆசை". இந்த துணிவு நம்மில் எத்துனை பேருக்கு இன்று இருக்கிறது???
              
             நாகரீகம் என்பது தற்போது மாறுதலுக்கு உட்பட்டது என்பது களைந்து எதை செய்ய வேண்டுமோ அதற்கு முரணாக செய்ய வேண்டும் என கருத்தில் கொள்ளப்படுவது நம்மிடம் உள்ள இழிவு மனப்பான்மையையும்; பேதை தனத்தையுமே காட்டுவதாக இருக்கிறது. 

            நாகரீகத்தின் படி; தமிழ் சமுதாய நெறிகளின் படி வேட்டி;கோவணம்  கட்டுங்கள் என யாரும் சொல்வதில்லை. ஆடை நம் தேகத்தை மறைக்க உதவாமல் நம் அறிவை மறைக்க முயலும் போது அதை கழற்றுவது தவறில்லை.

               நாகரீகம் என்பது காலத்திற்கு ஏற்ப மாறுவதே அன்றி பிறர் செய்வதை பிரதி எடுப்பது அல்ல.    நாம் நாமாக இருப்போம்.. 


                 இந்த் கட்டுரை katturai .COM இல் வெளியாகி உள்ளது
http://www.katturai.com/?p=1737   

Monday 23 January 2012

வைரமுத்துவிற்கு

வைரமுத்து அவர்கட்கு ஒரு வேண்டுகோள்

             உங்கள் வரிகளை விரும்புவதால் மட்டுமே எழுதுகிறேன் 

      
               உங்கள் பழைய பேட்டி ஒன்றை    வலைதளங்களில் கண்டேன். அதாவது ரோஜா படத்தில் 'காதல் ரோஜாவே' பாடலை நீங்கள் எழுதிய போது பாலசுப்ரமணியம் பாடும் போது கண்மூடிப் பார்த்தால் என்பதற்கு பதிலாக கண்மூடி பார்த்தால் என்று பாடியதற்கு நீங்கள் 'ப்' கண்டிப்பாக பாட வேண்டும் என்று வற்புறுத்தியதாக கேள்விபட்டேன். மிகவும் அருமை. தற்போது உங்கள் பாடல்களை  பாடும்  ஹிந்தி பண்டிதர்களிடம் நீங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லையா??. இல்லை நாம் கருத்து கூறினால் நமக்கு கிடைக்கும் சில !!! வாய்ப்புகளும் பறிபோகும் என்று அச்சமா???

                    ஒரு  திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் ரஹ்மானால் தான் என் தமிழ் உலக தரத்திற்கு கொண்டு செல்ல பட்டது என்று பெருமிதம் கொண்டீர். அவரால் தான் தமிழ் கொலை உற்றதையும் ஒப்புகொள்வீரா??. 

                    உங்கள் பாடல்களை வாசிக்க மட்டுமே அல்லாமல் கேக்கவும் விளைகிறேன். நல்ல தமிழ் குரல்களில். 

மங்காத்தா டா



 எப்பயும் போல CLASSல ATTENDANCE போட்டுட்டு தான் கெளம்பினேன். கூட ஒரு FRIEND வர்ரேன்னு சொன்னதால அவனுக்கும் சேர்த்து TICKET போட வேண்டியது ஆயிருச்சு. திண்டுக்கல் ராஜேந்திர திரைஅரங்குல தான் படம். 300 ரூபா டிக்கெட்டு.. BOXல படம் பார்க்கலாம்னு முடிவு பண்ணிதான் டிக்கெட்டு எடுத்தேன்.. மேல போனா எல்லாமே COUPLES சீட்டு. நானும் அவனும் திரு திருனு முழிக்க.எல்லோரும் எங்களையே பார்க்க ஆரம்பிச்சுடாங்க. அங்க இருந்த ஒருத்தன் சொன்னான். வெங்கட் பிரபு  படம்னா கெளம்பி வந்தர்றாங்க.. 

         அப்புறம் தான் GOA ஞாபகம் வந்தது. வேறு வழியில்லாம ஒண்ணா உக்கர்ந்து பார்த்தோம். 

Saturday 21 January 2012

சொப்பனத்தங்கம்

                 இந்த கதையின் தலைப்பு சொர்க்கதங்கம்; சொற்பத்தங்கம்;சொக்கத்தங்கம் ;சொப்பனத்தங்கம் என அனைத்தும் பொருந்தும்...
    
                  ஏலே காக்கி இந்த மரத்துக்கு பாத்தியே கட்டல.மருந்த தூவி உட்டுருக்க.கிழக்கால சாணம் வச்சுருக்கேன். அத போய் எடுத்துட்டு வா..

                  ச்சே செட்டியார் தோட்டத்துக்கு வந்தாலே இது தான் பிரச்சனை அலுத்துகொண்டான் காக்கி.. 
                 
                 ஆமா அப்புறம் 1  ஏக்கரா தென்னந்தோப்புக்கு இந்த அண்ணன் தம்பி ரவுசு தாங்க முடியாது. 

                 அண்ண குமரேசன் கெட்டிக்கார பைய. 1  ஏக்கராவுல 3   ஏக்கராவுக்கு உரிய தேங்காய் விளச்சல 40 நாள்ல பாத்துருவான்.ஆனாலும் தம்பி குமாருக்கு சரி பாதி பிரிச்சு கொடுத்துடுவான். அம்புட்டு பாசம் தம்பி மேல 

                அன்னிக்கு 

                 எப்பயும் போல சிரிச்சு பேசிக்கிட்டு இருந்த குமாரு பொசுக்குன்னு கீழ விழுந்துட்டான். பேச்சு மூச்சே இல்ல.குமரேசன் அலறி அடிச்சு ஊரையே கூட்டிட்டான்.. ஆஸ்பித்திரிக்கு கொண்டு போற வரைக்கும் புலம்பிகிட்டேதான் இருந்தான். 

                 செல்லாண்டி மாரியாத்தா என் தம்பிய காப்பாதுடீ. 

                 குமரசேன் பொஞ்சாதிக்குகூட இவஞ்செய்யுறது அதிகப்படியா   இருந்துச்சு. 

                  அய்யா என் தம்பிய காப்பாத்துங்க.. 

                  டாக்டர் பல்ஸ் பார்த்துவிட்டு தேறாது என்பது போல் பார்த்தார். ICU வில் ECG பார்த்துட்டு உங்க தம்பிக்கு HEART ATTACKனு சொல்லீட்டார். குமரேசனுக்கு நெஞ்சு அடைச்சுடுச்சு. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டான். 

                 நான் நம்ப மாட்டேன். என் தம்பிய கொன்னுபுட்டீன்களா . பாவிகளா. நாசமத்துபோக.  

                  சரி சார். பிரேத பரிசோதனை செய்யணும் கையெழுத்து போடுங்க. 

                  என் தம்பிய கொன்னது இல்லாம வெட்டவும் பாக்குறீங்களா. போடமாட்டேன். (அவன் கைநாட்டு என்பது மற்றொரு விசயம் ) 

                 ஊர்க்கார்களும் சண்டை போடவே. டாக்டருக பொணத்த எடுத்துட்டு போக விட்டுட்டாங்க...
                  
                 4  நாலு கழிச்சு தென்ன மரத்துக்கிட்ட உக்காந்து இருந்து கொண்டே தம்பிய நெனச்சு பார்த்தான். கண்ணுல தண்ணி வர்றப்ப மனசு சொல்லுச்சு நடிகண்டா நீ

        " பின்ன சும்மாவா அன்னிக்கு அவன்தான் முதல்ல பார்த்தான்அதுக்காக பாதி வேணும்னா கொடுப்பனா?? . தேங்காய்னா பரவால தங்கமுங்க அதுவும் ஒண்ணா ரெண்டா 22 தங்க காசு விடுவனா.மண்ணுல பொதஞ்சு இருந்துச்சு. 

        குமாரு ஒரு பிரச்சன்னையும் இல்ல. நமக்குள்ள எதுக்கு சண்ட ஒரு மாசம் உள்ளயே இருக்கட்டும். அடுத்த மாசம் தோட்டத்துக்கு மருந்து வைக்கணும். அது வரைக்கும் ரெண்டு பேரும் இத தொட வேண்டாம். குமார் என்னை முழுசா நம்பினான்..

      அப்புறம் தான் யோசிச்சேன். பேசாம விஷம் கொடுப்போம்.. ௦௦௦ ௦  ௦௦௦௦ ௦ 2 g  potassium எடுத்து தினமும் சோத்துல கலந்தா 30 நாள்ல லேசா ஆரம்பிக்குற மூச்சுத்திணறல் (asphyxia). அப்படியே நீர்வீக்கம்(edema) அதிகமாகும். கண்ணுக்கு போற நரம்புல (miotic pupil ) வீக்கம் அதிகமாகி; விஷம் உடலை அரிச்சு ரத்தம் சிவப்பு கலர்ல இருந்து கருப்பா மாற ஆரம்பிக்கும்.. பாசமா வளத்த தம்பி பங்கு கேட்டா பங்கு போட வேண்டியது தான். 

       எல்லாம் சரியா நடந்துச்சு. இந்த சனியம்புடுச்ச டாக்டரு பொசுக்குன்னு AUTOPSY (பிரேத பரிசோதனைனு ) சொல்லி குண்ட தூக்கி போட்டுட்டான்.விடுவனா அழுதல்ல தம்பிய கூட்டியாந்தேன்.
   
     நான்தான் கொன்னேன்னு இந்த விளக்கத்த சொன்னா என் பொஞ்சாதி கூட நம்பாது. பின்ன கைநாட்டு மட்டுமே போட தெரிஞ்ச ஒரு ஆளுக்கு இவ்ளோ அறிவான்னு என் பொண்டாட்டி புட்டுக்கிடும்..

  இன்னிக்கு சாந்திரம் தங்க வேட்டை "

  மனதிற்குள் சொல்லி எழுந்தான் குமரேசன்..

 கதை முற்றும் 


கிறுக்கு பைய இவன் செஞ்சதுக்கும் HEART அட்டக்குக்கும் என்ன சம்பந்தம்... குமாரு போய் சேர்ந்த காரியமே வேற. ஒரு நாலு சாயங்காலம் குமரேசன் பையன் விஜய் அந்த புதையல தோண்டிகிட்டு இருந்தான்.. 


 " டேய் என்னடா பண்ற " 


 "இல்ல சித்தப்பா பிரெண்டு ஒருத்தன் தங்க சாகுலேட்டு கொடுத்தான். மண்ணுல வச்சு எடுத்தா குட்டி போடும்னு சொன்னான். அது தான் பாக்குறேன்".

பாவம் இளகைய மனசு குமாரு பாதி செத்து போயிட்டான். அதையே நெனச்சு நெனச்சு உயிரும் போயிடுச்சு..



  

STORY INSPIRED FROM ஸ்ரீராம்'s சாபம் AND சுஜாதா's SHORT STORY 
MEDICAL TERMS FROM அலர்மேல்மங்கை..




Friday 20 January 2012

AS YOU LIKE IT

            இந்த கதை ஒரு பாண்டஸி கதை. ஆதலால் மூளையை மூலையில் வைக்கவும்..

           ஹீரோ பேரு (யோசிக்கல). ஒரு சின்ன வியாதி. தெளிவாக படித்து கொள்ளவும், இவரு எந்த பொண்ணுகிட்ட propose  பண்ணுறாரோ ; அந்த பொண்ணு அடுத்து யாரு பார்த்து இவர லவ் பண்ணலாம்னு தோணுதோ அவரு கூட செட் ஆகிரும். இதனால் இவருக்கு என்ன நடக்க போகிறது என்பது தாங்க கதை 

           ஏன் எனக்கு மட்டும் இப்படி?. இன்னிக்கு நேத்துனா பரவால. ஆனா யார பார்த்தாலுமே இப்படி தாங்க நடக்குது. எனக்கு சோகமா படுறது எல்லா பொண்ணுகளுக்கும் வசதியா போச்சு. எங்கிட்ட வந்து propose  பண்ணுங்க ப்ளீஸ்னு வரிசைல நிக்குதுக. இதுல எவ்ளோ செலவானாலும் பரவாலைன்னு வசனம் வேற. என்ன கொடும சார்.. 
          
          ஜாலியா ஆரம்பிச்சது இப்ப எரிச்சலா இருக்கு.ஒரு MATRIMONIAL மாதிரி USE  பண்றாங்க.. 

           I LOVE YOU

           I LOVE YOU

           I LOV U
   
           I LUV UUUU 

           இந்த ஊரே வேண்டாம்டா சாமி.இங்க யாருக்கும் என்ன பத்தி தெரியாது. என் உடன் பிறவா பக்கி கார்த்திக்   சொல்லாத வரை..

           FOR THE FIRST TIME  எனக்கும் தோணுது. ராதாமோகன் சொன்ன மணியும் அடிக்கல.. விஷ்ணுவர்தன் சொன்ன மாதிரி ராஜா சார் பாட்டும் கேக்கல. ஒரே நிசப்தம்..

           YA I AM GOING TO PROPOSE FOR THE FIRST TIME FROM MY HEART 

         அப்படின்னு PROPOSE பண்ண போனா மண்டைல அலராம் அடிக்குது. அய்யகோ ??? 

          என்ன பண்ணலாம்.

         சாக போற படு கேவலமா இருக்கற ஒரு பொண்ணுகிட்ட லவ்வ சொல்லுவோம். ரொம்ப கேவலமா எங்க தேடுறது??. அட கார்த்தி எதுக்கு இருக்கான். தேடுனு சொன்னா தேட போறான்.

         சத்தியமா சொல்றேன் இவ்ளோ கேவலமா ஒருத்தவங்கள பார்க்க முடியாது. பொன்னம்பலத்துக்கு  பொம்பள வேஷம் போட்ட மாதிரி இருந்தாங்க.சரி ட்ரை பண்ணி பார்போம். 

        சொல்லிட்டேன். சொல்லி தொலைச்சேன். நம்பாமல் மண்டைய சொரிந்து கொண்டே போயிருச்சு.. 
        
      ஒரு வாரம் தீவிர செக்கிங். 

     தப்பிச்சுட்டேன். 
  
    இனி எல்லாம் சுபம்னு போய் சொல்லிட்டேன்.சும்மா மூணு வார்த்த ஒரு கப் COFFEE   

    காதலில் நானும் வென்றுவிட்டேன். 

    திடீர்னு சனியன் வந்தான். 
   
     பேப்பர் பார்த்தியாடா??
     
     இல்ல. ஏன் இந்திய ஜெயச்சுருச்சா!!

      போடா லூசு பயலே நம்ம TEST பண்ணின அல்பாயுசு கெழவிய எவனோ கல்யாணம் பண்ணிடானாம்....

       







    அடுத்து என்ன பண்ணலாம் 
    
    அவள் யாரையும் பார்க்க கூடாது. பார்த்தாலும் நினைக்க கூடாது.

    இது வரைக்கும் கதை சொன்ன ஹீரோ இனி என்ன பண்ணலாம்னு யோசிக்க போயிட்டாரு.. 

    இந்த கார்த்திக் பய அந்த பொண்ணுகிட்ட சொல்லீட்டான்  


    இனி கதைய நம்ம பார்போம்..
                                                                 
           அந்த பொண்ணுக்கு தெரியாம 
ஹீரோ மார்பிங் பண்ணிக்கறாரு. இவர பொறுத்த வரைக்கும் அந்த பொண்ணு அவ கண்ணுல பார்க்க போற ரெண்டாவது பையனும் இவரே (என்ன ஒரு புத்திசாலித்தனம் )

          அவ இன்னும் கொஞ்சம் யோசிச்சு. EYE BALL TRANSPLANTATION பண்ணிக்குது . அவள பொறுத்த வரைக்கும். அவள் கண்கள் பார்க்கும் முதல் இரண்டாவது இரண்டும் ஹீரோ தான். (இதுக ரெண்டும் லவ் பண்ணா உருப்படுமா )


         மார்பிங் முகத்த இவ லவ் பண்ண ஆரம்பிக்கிறா.
       
               காதல் !! கதை ஒரு வழியா முடியுது..

        நோட்டு1: அந்த புது கண்களுக்கு ஹீரோ முதல் ஆள். கதை முடியல

        நோட்டு 2: கதை பிடிக்கலேன்னா நானும் மூளையை கலட்டி வச்சுட்டதா முடிவுகட்டிகொள்ளவும்

 TITLE FROM ஷேக்ஸ்பியர்
 EYE TRANSPLANTION IDEA FROM MINORITY REPORTS 

Wednesday 18 January 2012

நிஜம் அல்ல நிழல்

                                 இந்த கதை படிக்கும் போது  சிகப்பு ரோஜாக்கள்; DIAL M FOR MURDER பட காட்சிகள் ஞாபகம் வந்தால் ஆசிரியராகிய !!!!! நான் பொறுப்பல்ல
                               
                                 கணவன் நல்லவன்

                                 மனைவி கள்ளதொடர்பு

                                 கணவன் கொலை செய்ய திட்டமிடுகிறான்

                                 இது தாங்க  கதை...



                                 இனி கதைக்கு போவோம்


                                    திட்டம் தான் இந்தாண்டு திட்டம் அல்ல. ஆறு மாத திட்டம். கொலை செய்ய வேண்டும்.ஆம் அவள் தான். பணக்காரி.. பிணக்காரியாக்க வேண்டும்..
                                 என்னைக்கு வருவ (அதீத மரியாதை )


                                  3 DAYSLA வந்துருவேன் 
               
                                  எல்லாம் எடுத்துட்டு போறீங்கல்ல.(ஆம் உன்னை கொலை செய்யும் திட்டத்தையும் சேர்த்து )

                                  அடுத்த 3  நாட்களில் நடப்பது  


                                  கோபால் டெல்லி சென்று  விட்டான்   


                                  கிருத்திகா கார் விபத்தில் பலி.


                                  கோபால் சென்னை பயணம்.       


                                  கொலை முடிந்து விட்டது. கதையும் தான்.
                           
                                  அப்படின்னு வந்து பார்த்தா அவபாட்டுக்கு உக்காந்து இருக்கா. அந்த கார்த்திக் பயலும் பக்கத்துல உக்காந்துகிட்டு சிரிச்சு பேசிக்கிட்டு இருக்காங்க.. அடச்சீ இவளுக்கு ஏன் மரியாதை ..

                                 எங்கே சொதப்பீனோம்???

                               


                                  இனி யாரையும் நம்ப போறதில்லை.. நானே முடிவு கட்டுகிறேன் . யாருக்கு தெரிந்தாலும் பரவாயில்லை. நீங்கள் யாரும் என்னை போட்டுகொடுக்க மாட்டீர்கள்  என்று நம்புகிறேன்.

                                  அன்று இரவு எங்கள் படுக்கை அறையில் ச்சே அவர்கள் அறையில் பீரோவுக்கு பின்னால் ஒளிந்து இருந்தேன்.

                                 இருவரின் முகத்திலும் சிரிப்பு.கடைசியாக சிரித்து கொள்.

                                  யாரும் சந்தேகபடலையா.
                               
                                  ச்சே ச்சே

                                   என்ன சந்தேகம். ஒன்னும் புரியல.பீரோவுக்கு பக்கத்தில் ஒரு செய்தித்தாள். அதிர்ச்சியில் உறைந்தேன்..
                               
                                  பிரபல தொழில் அதிபர் கார் விபத்தில் பலி 


                                                கோபால் என்கிற 31 வயது தொழில் அதிபர் ஏர்போட்டிற்கு செல்லும் வழியில் எதிரே வந்த தனியார் பேருந்தில்  மோதி இறந்தார்.கார் டிரைவர், கோபால் இருவரும் சம்பவ இடத்திலேயே ப......லி....  


MORAL : EXECUTION IS IMPORTANT THAN PLANNING 

Monday 2 January 2012

காட்சிபிழை


ROOM NO.36 சாப்பாடு வெளிய இருக்கு எடுத்துகோங்க.

 வாழ்க்கை முற்றிலும் வெறுத்திருந்தது அவள் இங்கு வந்து சேரும் முன். நான் யார் என்று உள்ளே ஒரு கேள்வி சில நாட்களாய் மட்டும் மனதில் ஒலிக்கின்றது.
       
                       புது புது அர்த்தங்கள் படத்துல வர்ற கீதா மாதிரி ஒரு மனைவி.ஏனோ பிடிக்கல ரஹ்மான் மாதிரி எனக்கும்.ஓடி வந்துட்டேன் torture  தாங்க முடியாம...

அவள் இங்கு என்று வந்தாள் என்று தெரியாது. எனக்காகவே வந்தாள் என்பது போல ஒரு உணர்வு.I LOVE HER THE MOST, கல்யாணம் ஆகாத ஒருவனுக்கு மனதில் தோன்றும்  கனவு போல் இருந்தாள்.
     
நீங்க அழகா இருக்கீங்க.. சிரித்துகொண்டே சென்றுவிடுவாள்.
   
டாக்டர் எப்ப வருவார். கீழ் floorல இருக்கார். என்றும் எதையோ பறிகொடுத்து போல் இருப்பாள். Many times she makes me feel that she has special interest in me.


                         எனக்கு எது எது பிடிக்கும் என்று கேட்டு அறிந்துகொண்டு எனக்கு கல்யாணம் செய்து வைத்தனர் போலும். over-possession harms us at much occasions.அவள் செய்யும் ஒவ்வொரு விசயமும் செயற்கைதனங்கள் மட்டுமே மேலோங்கி இருக்கும்.அவள் பிடித்தாலும் பிடிக்கவில்லை ரகம்.

                          அன்று அமைதியும் இனிமையாய் பட்டது.கொடைகானல் சாலையில் ஐபேட் உடன் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தேன்..cigarette lighter வாடை கூட வாசம் தான்.நினைவுகளை அழித்துக்கொண்டு இருந்தேன் . காதில் ஒரு கூக்குரல் வேறொன்றும் நினைவில் இல்லை.

மருத்துவமனையை விட்டு வெளியே வந்துவிட்டேன்.யாரும் தெரியாத ஒரு ஊர்.இருந்தும் மனதில் ஒருவித மகிழ்ச்சி.

இவள் பெயர் நித்யா. இவள் மட்டுமே உலகம் எனக்கு. அவளிடம் காதலை சொல்ல முடிவெடுத்தேன்..

உங்களோடு  இருக்க ஆசை
           
இப்படியே பைத்தியமாவா??. அவள் கேள்வி என்னை சற்று கோபப்பட வைத்தது.ஆனால் கோபம் வரவில்லை. சிரித்தேன்.... சிரித்தாள்...


அவளுக்கென்று யாரும் இல்லை.என்னை போல் அவளும் தனிமை விளக்கு.சில நாட்கள் அவளோடு இருந்தேன்.


We joined together not just by hands... 


ஏன் இவ்வாறு என்பது போல் ஒரு கனவு.நினைவு படுத்தி பார்க்கையில் அனைத்தும் நிஜம்.அழகான மனைவி,முகம் ஞாபகம் இல்லை.ஓடி வந்து இருக்கிறேன் என்கிறது மனம்..ஏன் என்று தெரியவில்லை??.. மீண்டும் கேள்வி பதில்கள் மனதில்?.
     
ஏன் வீட்டை விட்டு வந்தேன்?
                        
அவள் என்ன செய்தாள்?
                          
If taking care is something bad.what else has the nurse did for me?? 


                         
மனைவியின் அன்பு தவறில்லை என்று தோன்றியது. மண்டைக்குள் ஒளிச்சிதறல்கள்.விண் விண் என்று தேனீ ரீங்கரமிடுமா? எனக்கு அப்படி தான் இருந்தது.நான்கு மாதமிருக்குமா? இல்லை,இல்ல்லை இல்ல்ல்லாஆஇ...

                       
ஆறு மாதங்கள்...சீட் எரிந்து போச்சா? ச்சே. நான் எப்படி பிழைத்தேன்? ஏன் அவள் வந்து என்னை பார்க்க வில்லை? நான் கொடுமைக்காரனா? இது கனவா?கனவுதான்.கனவேதான்..முழிக்க வேண்டும் தூக்கத்தில் இருந்து முழிக்க வேண்டும்......இல்லை தூக்கமில்லை.இவளை என்ன செய்ய?

                         
ATM கார்டு இருந்தது.நிறைய பணம் இருந்தது.காரே வாங்கலாம்.கார் வாங்கும் அளவுக்கு பணம். கார் வேண்டாம். டாக்ஸி பிடிக்கலாம். உடனே மனைவியை பார்க்க வேண்டும். எந்த ஊர்? அந்த ஊர்தான்.ஆம்.அதே ஊர்தான்.

                       
இவள் நினைவுகளை வைத்து கொண்டு என் மனைவியுடன் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? இவளை வைத்துகொண்டு எப்படி நிம்மதியாய் வாழ முடியும்.இவளுக்கு நான் மட்டுமே இருக்கிறேன் என்று நினைக்கும்போது இப்பொழுது மகிழ்ச்சியாய் உள்ளது.ஆனால் இவள் இருநதால் எனக்கு மகிழ்ச்சி இருக்காது.

மாட்ட மாட்டேன். நிச்சயம் மாட்ட மாட்டேன்.நான் யார் ஒரு patient . அவள் ஒரு nurse .எங்களுக்குள் ஒன்றும் இல்லை.இருந்திருந்தால் என்ன.நான் உளறபோவதில்லை. அவள் உளற இருக்கபோவதில்லை.

தேவை ஒரு கயிறு..

இல்லை

இல்லை

கழுத்து நெரிந்து மாட்டிகொள்வேன்.

கத்தி??

ஏன் இவ்வளவு யோசிக்கிறேன் போகிற வழியில் தள்ளிவிட்டால் இறையாகி(எழுத்து பிழை அல்ல ) விடுவாள். பின்பு ஜூனியர் விகடனில் மலை அடிவாரத்தில் பெண் பிணம் கொலையாளி யார்?.


யாருக்கு தெரியும் நானில்லை. பக்கத்தை திருப்புவது போல் அவள் வாழ்க்கையும் மறைந்துவிடும்;மறந்தும் விடும்.

பிகில் அடித்துக்கொண்டு இருந்தேன்.மனைவி முகம் மறந்து விட்டது.இதோ அவளுக்காக நான். நான் மட்டுமே. நித்யாவா?? யார் அது??. ஆம் இப்போது அவள் அது தான்..
                                 ________________________________________
பி.கு: POLICE துப்பு துலக்கியது. அவள் பெயர் நித்யா அல்ல வந்தனா என்று கண்டுபிடித்தது.வந்தனா கொடைகானல் மருத்துவமனையில் யாருக்கோ nurse  ஆக இருந்து இருக்கிறாள்.

HURRAY என் மனைவி பெயர் வந்தனா என்று கத்தி கொண்டு இருந்தேன் .....