Pages

Tuesday 27 March 2012

பயணம்

அன்று நான் நானாக இல்லை.

என் மகள் சுவற்றில் சாய்ந்து இருந்தாள்; அவள் இதழோரத்தில் நேற்று இரவு இருந்த சிரிப்பு இப்போது மறைந்து போய் இருந்தது.

நேற்றைய இரவு சற்று அதிகமாகவே நீண்டு இருந்தது.


என் மகளின் காதலுக்கு நான் என் மனைவியை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. என் மனைவி இறுதி வரை அவள் பிடியில் இருந்து கீழ் இறங்கவில்லை. என் மகளும் அப்படியே.


இன்று அனைத்தும் மாறி இருந்தது.


என் மனைவி யாரையோ அலைபேசியில் தொடர்பு கொள்ளமுயற்சித்து கொண்டு இருந்தாள்.

நானும் என் கட்டிலில் இருந்து எழ முயற்சித்து தோற்றுப்போய் இருந்தேன்.

வண்டியில் செல்லலாமே என யோசித்துக்கொண்டு இருக்க; என் மனைவியும்  என்னோடு பயணம் செய்ய ஆயுத்தமானாள்.இவ்வாறு நானும் என் மனைவியும் சேர்ந்து ஒரு விசயத்தை செய்வது இதற்கு முன்னர் எப்போது என்று நினைவில் இல்லை.

இன்று காலையில் இருந்து என் மனதிற்கு நெகிழ்வாய் அமைந்தது இந்த பயணம் மட்டுமே . குளிர்  காலத்தின் நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்தன.

சட்டென அ.முத்துலிங்கம் அவர்களின் கவிதை ஒன்று மனதில் தோன்றியது


குளிர் காலம் வரப்போவதற்கான அறிகுறி
ஆடுகள் கத்தையான ரோமத்தின் கதகதகப்பில்
தங்களை பாதுகாக்க ஆயத்தப்படுத்தின.
மனிதர்கள்
தங்கள் உடம்புகளை நீண்ட அங்கிகளுக்குள்
மூடி மறைத்துக்கொண்டார்கள் .
இந்த மரங்கள் மட்டும் ஏனோ
இருக்கும் இலைகளையும் உதிர்த்துவிட்டு
வெறும் மேலோடு குளிர் காலத்தை
எதிர்க்கத் தயாராகி விட்டன.
என்ன துணிச்சல்!!

என் வயது என்னை முழுக்கவிதையையும் என் மனதில் தோன்ற விடாமல் என் ஞாபகமறதியை அதிகப்படுத்தி இருந்தது.

நான் ஏனோ ஒரு சிறுவன் போல் அனைத்தையும் பார்த்துகொண்டே பயணித்துக்கொண்டு இருந்தேன்; ஏனோ எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது போன்றதொரு  உணர்வு..


சிறிது நேரம் கண் அயர்ந்துவிட்டேன்...

வாகனம் இப்போது கல்லறை நோக்கி உருண்டோடியது.


அனைவரும் சூழ்ந்து இருக்க

ஒரு  3 அடி குழி வெட்டப்பட்டு இருந்தது. சவப்பெட்டி திறந்த நிலையில் கிடந்தது. எனக்கு சட்டென ஓர் ஆசை...


அந்த சவப்பெட்டியில் படுத்தால் எப்படி இருக்குமென??.


யாரும் பார்க்காதபோது  சட்டென பெட்டிக்குள் என்னை கிடத்தினேன்.என் வீட்டு கட்டிலை விட இந்த மெத்தை எனக்கு சவுகரியமாய் இருந்தது.இங்கு ஏன் தூங்கக்கூடாது என நான் சிந்திக்கும் முன் தூங்கியிருந்தேன்..

இருள் என்னை சூழ்ந்து இருந்தது. இது கனவு என சொல்லி என் மனதை தேற்றிக்கொண்டு இருந்தேன்.கண் விழித்தும் பயனில்லை என பின் முடிவுக்கு வந்தேன்..

இந்த கட்டில் எனக்கு நிரந்தரம் ;என் இடம்  மீண்டும் தோண்டபடாத வரை..

Monday 26 March 2012

மெல்ல திறந்தது கதவு


baatein hawa hai saari, saari ki saari
kyun hai kyun hai kyun hai kyun hai kyun....
rukhi si khaali khaali, ulti hi duniya saari
kyun hai kyun hai kyun hai kyun hai kyun....

மெல்ல திறந்தது கதவு படத்தின் குழலூதும் பாடலின்  ஹிந்தி வெர்சன் ஓடிக்கொண்டு இருந்தது.

மெல்ல திறந்தது கதவு

"சார் ஒரு க்ரூப் போட்டோ எடுக்கணும் ".

அப்படி ஒரு அழகை அக்கடையின் ரிசப்சனிஸ்ட்  பார்த்ததில்லை போலும் ;


உள் அறையில்   லென்சை சரிசெய்து கொண்டிருந்தான் அக்கடையின் உரிமையாளர்  .

சார் சூப்பர் பொண்ணு சார். கடைல முன்னாடி மாட்டுறதுக்கு பொண்ணு போட்டோ வேணும்னு சொண்ணீங்கள்ள. இவ மேட்ச் ஆவா சார்.

ஹ்ம்ம் சரி சரி உன்ன நம்புறேன். முகத்த நல்லா கழுவீட்டு வரசொல்லு பார்ப்போம்.

அந்தப்பொண்ணு மேக் அப் போட்டுட்டு இருக்கா சார். கண்டிப்பா சொல்றேன். இதவிட அழகான பொண்ணு கிடைக்கமாட்ட சார். அவ ஒத்துக்குவாளா .

அதெல்லாம் சொல்லி சமாளிச்சுக்கலாம். டைம் ஆனா பரவால. மெதுவா வர சொல்லு . சில பேருக்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கணும்.

2 மணி நேரம் ஆகிவிட்டது. பொறுமை இழந்தநிலையில்

யோவ் வரசொல்லுயா . மதியம் சாப்பாட்டுக்கு போகனும் . இன்னுமா மேக் அப் பண்றா.

இன்னும் அஞ்சு நிமிஷம் ப்ளீஸ்..

அவளை பார்த்தவுடன் ; ஒன்றும் சொல்லாமல் ரிசப்சனிஸ்டை கடுமையாக ஏசிவிட்டு வெளியேறினான்..


உள்ளே நுழைந்தவனுக்கு இன்னும் அதிர்ச்சி


           மெல்ல திறந்தது கதவு

குறிப்பு : நகைச்சுவைக்காக மட்டுமே ; இஸ்லாமிய நண்பர்களை கிண்டல் செய்யும் பொருட்டில் அல்ல                            

Monday 19 March 2012

வலி

அன்று இரவு வண்டியில் வரும் போது ; இருவர் என்னை வேண்டும் என்றே இடித்தனர். வெளிச்சமின்மை காரணமாக அவர்கள் யார் என அறியவில்லை. ஆனால் அதற்கு காரணம் நான் வேலை செய்யும் நிறுவனத்தில் ஏற்பட்ட தகராறு என்று மட்டும் ஊர்ஜிதம்   செய்துகொண்டேன்.பெரிதாக ஏதும் அடி இல்லை எனினும் உள்காயங்கள் சில. தோள்பட்டையும்; முதுகும்  ஏதோ செய்தது.

எழும்போது அப்படி ஒரு வலி . எழ முடியவில்லை. லீவு சொல்லி விடவேண்டும் என்று கூட யோசித்தேன். நான் கோழை அவர்கள் செய்யும் செயல்களை கண்டு அஞ்சிவிட்டேன் என்று எடுத்துக்கொள்ளக்கூடும். ஆகையால் சென்றேன்..


உள்ளே நுழைந்ததும், யாரிடமும் எதுவும் பேசாமல் என் இடத்தில் உட்கார்ந்து  கொண்டேன்.


தேநீர் இடைவேளையில் , அவர்கள் யாரும் ஒன்றும் நடக்காதது போன்று ஒரு முகபாவனை வைத்து கொண்டனர். எனக்கு எரிச்சலாய் இருந்தது. விடுப்பு எடுத்து கெளம்பிவிட்டேன்.


அன்று மாலை .

சென்றிருந்த மருத்துவமனையில் ஆள் யாரும் இன்றி செவிலியர் மட்டும் வெளியே உக்கார்ந்து இருந்தார்.

மேடம், டாக்டர் எப்ப வருவாங்க ??

உள்ள வாங்க ..

எனக்கு சற்று அசௌகரியமாக பட்டது. நான் தவறாக எண்ணிவிட்டேன். அந்த செவிலியர் தான் மருத்துவர்.


சாரிங்க

ஹ்ம்ம் பரவால  சொல்லுங்க.

மேடம் முதுகு ; தோள்ப்பட்டை எல்லாம் ரொம்ப வலிக்குது .

சரி ஒரு XRAY எடுத்துடுங்க. அப்புறம் தான் கிளியரா சொல்ல முடியும் ..

400 ரூபாய் என் பர்சில் இருந்து திருடப்பட்டது.

மேடம் ரிப்போர்ட் ..


சார் பெருசா ஒன்னும் பிரச்சனை இருக்கறதா தெரியல. ஆனா நீங்க கேர்புல்லா இருக்கணும். தண்டுவடத்துல சிறிசா வீங்கி இருக்கு. அதுனால கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துக்குங்க..


ஒரு வாரம் கழித்து


எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

அமைதியான சூழ்நிலயில் எல்லாவற்றையும் அசை போட்டேன்

என்னை அடிக்க சொல்லி ஆள் அனுப்பியவர்கள் ஒன்றும் தெரியாதது போல் நடித்தது.முதுகும் ,தோள்ப்பட்டையும் வலித்தது. 400 ரூபாய் திருடப்பட்டது. அந்த செவிலியரும்!!! முதுகில் பிரச்சனை என சொன்னது ..

கனவில் அடி வாங்கினாலும் உண்மையிலேயே முதுகு பிரச்சனை வருமோ ??

Sunday 11 March 2012

ஜானி

"செனோரீட்டா ஐ  லவ் யூ; மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ "

அண்ணே ஒரு டீ ஒரு வர்க்கி ....

இந்த கடை முன்னாடி தான் அவள முதல் முறையா பார்த்தேன்...


சார் சத்தியமா சொல்லணும். இவ்ளோ அழகா நீங்க யாரையும் பார்த்து இருக்க மாட்டீங்க. சில நாய்க தான்தான் அழகுங்ற  மாதிரி சீன போடும் . ஆனா இவ REALLY AWESOME  சார்  ....


இதோ ...

இந்த APARTMENT ல தான் சார் வேலை பாக்குறேன். நான் என் நாலு பிரண்ட்ஸ்  எல்லோரும் இங்க தான் 3  வருசமா இருக்கோம்.

எல்லாத்துக்கும் நைட் டூட்டி ஜாப் தான் சார். எல்லோரும் காலைல தூக்க கலக்கத்துல இருப்பாங்க. பட் அவ காலைல ஆறரை மணிக்கு வாக்கிங் வருவா. அவளுக்காக நானும் வந்துருவேன் . ஓனரு  அந்த வகைல நல்ல டைப்.


அவள பார்த்து நான் சிரிப்பேன். அவளும் பதிலுக்கு சிரிப்பா..

அவள வீடு வரைக்கும் பாலோ பண்ணுவேன்.உள்ள போய்ட்டா திரும்பி வரவே மாட்டா..

இப்படியே நாட்கள் நகர்ந்தன ..

ஒரு நாள் அவள பார்க்ல பார்த்தேன் ..

இன்னிக்கு சொல்லிரலாம்னு முடிவு பண்ணிட்டேன் . சொன்னேன் ..



என்ன வெறுங்கைல வந்து லவ் சொல்ற???.

அதுக்கென்ன சில நாய்க மாதிரி கிடார் வச்சுகிட்டா சொல்ல முடியும் . நம்மள  பாக்குறவங்க என்ன நினைப்பாங்க.

நான் என்ன சொன்னாலும் அவனுகளுக்கு லொள் லொள்ளுன்னு தான் கேட்கும்

. நீ பதில் சொன்னாலும் அவனுகளுக்கு லொள் லொள்ளுன்னு தான் கேட்கும் ..

Friday 9 March 2012

மனிதம்

சைரோன் ஒலி அணைக்கப் பட்டிருந்தது. அப்போதும் நல்ல கூட்டம் குழுமி இருந்தது. காமிராக்களின் வெளிச்ச சிதறல்கள். வழக்கமான கேள்விகள். அதை விட வழக்கமான பதில்கள். வெள்ளை அங்கியில் ரத்த பொத்தல்கள். நான்கு பிணங்கள் ஆம்புலன்சில் இருந்து இறக்கப் பட்டு தரையில் கிடத்தப்பட்டன.

"தீவிரவாதிகளுக்கும் எங்களுக்குமான மோதலில் சட்டம் ஜெயித்திருக்கிறது" என்றார் துணைக் கமிஷனர்.
                                      _________________________________

நேரம்: அதிகாலை நான்கு மணி
சாமான்ய மக்கள் அசந்து உறங்கும் நேரம்
குற்றங்களுக்கு ஏற்றது.

பாரக்பூரின் பரபரப்பான சாலை அமானுஷ்யதில் உறைந்திருந்தது. தோட்டாக்கள் நிரப்பப்பட்டன. ட்ரிக்கர் சரிபார்க்கப்பட்டது. காக்கிகள் காத்திருந்தார்கள். அவர்கள் எதிர்சாரியில். அவர்களுக்காக மரணம் காத்திருந்தது. இருட்டின் அமைதியில் ஒரு 'விஷுக்'. உடலில் ரத்த ஊற்றுகள் பெருக்கெடுத்தன. தார் சாலை எங்கும் குருதி வழிந்தோடியது. 

ரமேஷ் சந்த், it's your turn என்றார் அவ்உயர் அதிகாரி.

சந்தின் தோள்பட்டையில் புல்லட் இறங்கியது.

                                  ____________________________________

மத்திய பிரதேசத்தின் இருண்ட காடுகள்.

செருப்பு மாலைக்குள் முதல் அமைச்சர் வணக்கம் சொல்லி கொண்டிருந்தார். சமாதானம் செய்ய வந்த அதிகாரி ஒருவர் பழத்தால் தாக்கப்பட்டார்.

உங்க நல்லதுக்கு தான ரோடு போட்ருக்கோம். ஸ்கூலு கட்டி கொடுத்தோம்

அதெல்லாம் எங்களுக்கா பண்ணுனீங்க..உங்க வெளிநாட்டு மொதலாளிகளுக்காக தான போட்டீங்க...காது குத்தாதீங்க.

வாக்குவாதம் முற்றியது. சென்சார் செய்யப் படவேண்டிய வார்த்தைகள்  காற்றில் பறந்தன.

எச்சரிக்கை விடப்பட்டது. கூட்டம் கொந்தளித்தது.

தினசரிகளுக்கு நாளைய தலைப்பு செய்தி கிடைத்தது. பழங்குடிகள் சுடப்பட்டார்கள்.

                                  _________________________________

சார்..மாட்டிக்கிட்டா..?

மாட்ட மாட்டோம். இப்ப கூட நாலு பேர வங்கி கொள்ளையர்கள்னு சுட்டாங்க. மாட்டுனான்களா? ஒரு பிரதமர் கொல்லப்பட்டதா மூணு பேர புடிச்சு வச்சு இருக்கனுங்க? அது உண்மையா? 

இருந்தாலும்...

தைரியமா பண்ணலாம்..உங்களுக்கு தான் இன்னிக்கு காயம்.

சார்??


Tuesday 6 March 2012

கன்னம்


 அனிதாவின்  திருமண விழாவிற்கு சென்றிருந்த போது ;

ஜெயா எப்போதும் போல் சிரித்துக்கொண்டு இருந்தாள்.

ஒரு பெரியவர் வந்து ஜெயாவின் தம்பியிடம் ,

கண்ணு தாத்தாக்கு கன்னத்துல முத்தம் கொடு பார்ப்போம்

ஜெயாவின் தம்பி கன்னம் எது?என்பது போல்; ஜெயாவை  பார்க்க

ஜெயா குறும்புடன் காதருகே வந்து "மூஞ்சில முடி எங்க இல்லியோ அது தான் கன்னம் "

ஜெயாவின் தம்பி சட்டென பெரியவரின் தலையில் முத்தம் கொடுத்தான்

             
மன்னிக்கவும் வேறொரு சிறந்த படம் கிடைக்கவில்லை

புகார்

பாட்டி எப்போதும் போல் நாயின் வேகத்துக்கு பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்.. அந்த நாயைப்பற்றி சொல்ல வேண்டும் . ஏதோ ஹட்ச் டாக் என பெயர் சொல்லி 2000 ரூபாய்க்கு வாங்கி வந்தாள் சுகந்தி.
அந்த பாட்டியை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாங்கி இருந்தனர் கணேஷ் ;சுகந்தி தம்பதிகள்..


சுகந்தியின் மகள் கோமதியோ ஹட்ச் நாயோடு தான் விழிப்பு; தூக்கம் எல்லாம் ; பள்ளிவிட்டு வந்தவுடன் நாயை பார்த்தால் தான் இவளுக்கு எல்லாமே.


இப்படி இருக்கையில் ....

பாட்டி எப்போதும் போல் நாயின் வேகத்துக்கு பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்.. 

திடீரென்று அந்த நாய் தன் சங்கிலியை விட்டு விலகி சென்றது. பாட்டி செய்வதறியாமல் திகைக்க ; நாய் அவளது பார்வையில் தென்படவில்லை.

வீட்டிற்குள் கேட்க போகும் அர்ச்சனைகள் தன் காதில் இப்போதே விழத்  தொடங்கின.


உள்ளே நுழைந்ததும் :



  • அந்த நாய் மதிப்பு எவ்ளோன்னு தெரியுமா??
  • கோமதி கேட்டா என்ன சொல்றது ??
  • திங்குற அளவுக்கு புத்தி இருக்கா ??
  • உங்களுக்கு செலவு பண்றத விட இந்த நாய்க்கு அதிகமா செலவு பண்ணி இருக்கோம் 


எதுவும் பேச வேண்டாம் முதல்ல வெளிய போங்க

பாட்டி கண்ணீரோடு வெளியே  செல்ல...

சில நாட்கள் கழித்து

அய்யா !!

என்ன சொல்லு

எங்கம்மாவ பார்க்கணும்

ஓ அது நீ தானா??? சுகந்தி சற்றே கோபத்துடன் .


நீ வாங்குன காசுக்கு பாதி கூட உங்கம்மா வேலை செய்யல .யார்கிட்டயும் சொல்லாம அன்னிக்கு வீட்டைவிட்டு போய்ட்டாங்க. 


என்னமா சொல்றீங்க??

கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கோம் ; உங்கம்மாவோட ஒரு போட்டோ இருந்துச்சு அத வச்சு தேட சொல்லி இருக்கோம்

ரொம்ப நன்றிகம்மா

சரி சரி என்னிக்கு மிச்ச காச திருப்பி தர போற ..

என்னமா சொல்றீங்க..

உங்கம்மா போயாச்சு அந்த வேலைக்கு வேற ஒரு ஆளையும் வச்சாச்சு. உன்கிட்ட கொடுத்த காசுக்கு உங்கம்மா வேலை செய்யலையே...


அம்மா 


சரி சரி போய்த்தொல ....

எங்கம்மா கிடச்சா மட்டும் சொல்லுங்க

புகார் பண்ணி இருக்கோம் . நீ ஒரு மாசம் கழிச்சு வா

சில நாட்கள் கழித்து

நாங்க போலீஸ் ஸ்டேசன்ல இருந்து பேசுறோம் .. கொஞ்ச நாளைக்கு முன்னாடி   புகார் கொடுத்தது நீங்க தானா ??

சுகந்தி மகிழ்ச்சியோடு

"ஆமா சார் நாய் கெடச்சுருச்சுங்களா?? "

 


   நான் தினமும் கல்லூரிக்கு செல்லும் போது ஒரு பாட்டி நாய் ஒன்றை கூட்டிக்கொண்டு நாய்க்காக வாக்கிங் வருவார். விசாரிக்கையில் இவர் அந்த வீட்டில்  வேலை செய்கிறார் என்பதை அறிந்தேன். இருவரும் வருவதை பார்க்கையில் இந்த நாய்க்கு தான் பாட்டி காவலோ என எண்ண தோன்றும் . அவருக்காக இந்த கதை எழுதினேன்.