Pages

Wednesday 8 February 2012

கைதி


                                                    சிக்கனம் , கஞ்சம் , சுயநலம் , இந்த வார்த்தைகளுக்கு தமிழின் ஆழம் நோக்கி வேறு ஒரு வார்த்தை தேடினால் அது தான் அருண் என்ற இந்த கதையின் குறுகிய மனம் உள்ள பாத்திரத்தின் படைப்பு.. 

                                பேச்சில் ஒரு தெளிவு. சீரிய சிந்தனைகளை  வலைதளங்களில் தெளிப்பவன்  , எளிதில் பழகும் பண்பு என ஒரு முகம் . வாழ்விலோ ஒரு கஞ்சம் , இலவசத்தை நம்பி ஓடும் ஒரு ஜீவன்; என ஒரு முகம் . நம்மை போல வலை தளங்களில் மட்டும் வல்லவன். 

                                 தான் செல்லவிருக்கும் ஊருக்கு வீட்டில் இருந்தே உணவு பொட்டலம் கொண்டு வந்திருந்தான்.. நடந்து  வருகிற வழியில் ஒரு கடையில் சிம் கார்டுகள் விற்பனை செய்யபட்டுகொண்டு இருந்தன.. 

                       TALKTIME 999 
                      
                       SIM CARD 99


ஆக்டிவேடட் பண்ணின சிம் சார். 

 100 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான். திடீரென் ஒரு சிம் கார்டு கீழே விழ அதை எடுத்து வைத்து கொண்டான்...

நூறு ருபாய் மிச்சம்..

எப்போதும் போல் அன்ரிசர்வ்வேசனில்  சென்று டிக்கெட் எடுக்காமல் நின்று கொண்டான். வேலூரில் இருந்து ஈரோடிற்கு சென்று கொண்டிருக்கிறான் . 

இரயில் கிளம்பிகிறது. 

அங்கு அவன் சந்திக்கும் நபர்கள் பற்றிய உரையாடல் தான் கதை. 

NOTE ! : மூவரின் பேச்சுகளும் நேர் கூற்றில் தான் வரும்..

NOTE 2 : பெயர் குறிக்கபடாமல்   காட்சிகள் நகரும். இரயில் பயணங்களில் பலர் பெயர் கேட்பதில்லை.

"யோவ் ஜன்னல மூடுயா " உள்ளிருந்து ஒரு குரல்.

ஜன்னல மூடு . உனக்கு குளுருலேன்னா மத்தவங்கள் பத்தியும் யோசி.. 

நீங்க எங்கிருந்து வர்றீங்க 

சென்னைல இருந்து ஜோலார்பேட்டை போகனும் 

இந்த இரயில் அங்க நிக்காதே 

தெரியும் சார் . டிரைன் ஸ்லோவா போகும் . அங்க வேலை செஞ்சிட்டு இருக்காங்க . சோ எப்பயும் போல் ரன்னிங் தான் 

தம்பி நீ எந்த ஊரு 

திண்டுக்கல் ணா . VIT காலேஜுக்கு வந்தேன் ..

அங்க என்ன பா ?

CULTURALS ணா .. நாளைக்கு தான் முடியுது. ஆனா இன்னிக்கே கெளம்புறேன் ..

என்ன ஊர்ரா இது . சுத்தி பார்க்க ஒரு இடம் கூட இல்ல . ஏதோ கற்கோவில்னு சொன்னாங்க. போய் பார்த்தா வெறும் கல்லு தான் இருக்கு ...

உங்களையெல்லாம் ஊட்டில போய் விட்டாலும் என்னபா இது வெறும் பனியா  இருக்குன்னு வந்துடுவீங்க 

அப்புறம் ஊட்டில என்னதாங்க இருக்கு.போன தடவ ஊட்டி போனப்ப அரை மணி நேரத்துல எல்லாத்தையும் பார்த்துட்டேன். ஏதோ போட் ஹௌசுன்னு சொன்னாங்க. படகுல பெடல் போட்டு வச்சுருந்தாங்க..

அண்ணா ஒரு இடத்துக்கு போனா . அதா மெய்மறந்து பாக்கணும். நீர் வீழ்ச்சின்னா வைரமுத்து சொன்ன மாதிரி அது நீர் எழுச்சிங்ற அளவுக்கு அத  ரசிச்சு பார்க்கணும். இல்லாட்டி வாழுறதே வேஸ்ட்டு.. 

அட ஆம்பூர் வந்துருச்சு போல 

எப்டினா இவ்ளோ இருட்டுலயும் கரெக்டா சொல்றீங்க 

எல்லாம் பிரியாணி வாசத்த வச்சு தான்.

ஏன் யா நீ வேற .. இங்க தோல் பேக்டரி இருக்கு..

ஆமா அண்ணா அதையெல்லாம் மூடியாச்சு. ஆனா இன்னும் வாட மட்டும் போகல 

சரி எங்க வேலை பாக்குறீங்க..

சென்னைலங்க 

சென்னைல எங்க ??

தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க 

இல்ல நந்தனத்துக்கு   வருவேன்.

அங்க தாங்க வேலை பாக்குறேன்

ஆமா அங்க அந்த பெரியார் மாளிகை இருக்கே; அதுக்கும் பெரியாருக்கும் என்னங்க சம்பந்தம்.

அண்ணா உங்களுக்கு உண்மையாவே தெரியாதா இல்ல ச்சும்மா கேக்குறீங்களா

தெரிஞ்சுக்க தான்பா கேக்குறேன். ஒரு லாரி டிரைவருக்கு என்ன தெரியும் சொல்லு 

சரி வேல்லூர்ல அமிர்தியாவது  பாத்துருக்கியா?

ஆமா அந்த காடுதான.

எப்படியா எத சொன்னாலும் வெறுத்து சொல்ற..

அண்ணா நானும் பாத்துருக்கேன் அதுல நீரோடை ஒன்னு இருக்கும் .

ஆமா தம்பி டியுப்ல தண்ணி லீக் ஆனா மாதிரி வருமே அது தான

ஐயோ கஷ்டம் உங்களோட . எதையுமே ரசிக்க மாட்டீங்களா

இவனேலாம் தாஜ் மஹால் கூட்டிட்டு போய் விட்டாலும் , என்னபா வெறும் சுண்ணாம்புல பெயிண்ட் அடிச்சுருக்காங்கன்னு  சொல்லுவான்

சரி அத விடுங்க எங்க வேலை பாக்குறீங்க

அது தான் நந்தனம்னு சொன்னேன்ல

ஆமா ஆமா சொன்னீங்க .

பெரியார் மாளிகைக்கு பக்கத்து பில்டிங்..

அப்ப அங்க வந்தா உங்கள பார்க்கலாம்

என்ன பார்த்து  என்னங்க பண்ண போறீங்க . இரயில் பயணங்கள் நீடிக்காது..

ஏன் இப்படி சொல்றீங்க.. சரி உங்கள வந்து பாக்குறேன்.

ஏன்பா தம்பி பழனில சுத்தி பாக்குற மாதிரி ஏதுனாச்சும் இருக்கா ?

ஒன்னும் இல்லணா . பழனி மலைய சொன்னா . மலைக்கு மேல ஒரு கோவில கட்டி வச்சுருக்காங்கன்னு சொல்ல போறீங்க..

வாணியம்பாடி வந்துருச்சு போல 

ஆமா ஜோலார்பேட்டைல வண்டி நிக்காதுல்ல என்ன பண்ண போறீங்க 

உங்களுக்கு என்ன அம்னீசியாவா 

அப்டீன்னா 

அங்க வேலை நடக்குது. அதுனால மெதுவா தான் போகும். எப்பயும் போல ரன்னிங் தான்..

சரிங்க உங்க நம்பர் கொடுத்தீங்கன்னா ....... 

பேரே தெரியாது. நம்பர் வச்சு என்ன பண்ண போறீங்க 

சரி பேர சொல்லுங்க..

மறுபடியும் சொல்றேன். இரயில் பயணம் நீடிக்காது..

உள்ளிருந்து ஒருவன் வருகிறான் 

தம்பி தம்பி என்ன பண்ற 

ஜோலார்பெட்ல வண்டி நிக்காது எப்படி எறங்குவ?

ரன்னிங்க்ள இறங்கீடுவியா??.

சரி நான் இறங்குற மாதிரி இறங்கு..

பாத்தியா இவ்ளோ நேரம் நம்பர் கேட்டுட்டு இப்ப ஆள காணோம். எங்கயா அந்த மனுஷன்??..

அண்ணா நீங்க நம்பர் கொடுங்க. நான் அவர்ட்ட கொடுத்துடறேன் 

தம்பி நீ இறங்குவியா  ?

சரி உன் பேக்க தூக்கி போடு.

இப்படி இறங்கு 

டே  இறங்கு டா

மறுபடியும் இரயிலில் ஏறி

நீ மொதல்ல இறங்கு பா 

அண்ண உங்க நம்பர் . 

உன் நம்பர் சொல்லு MISSED CALL கொடுக்கறேன் 

9629151439 

பேச்சுக்கள் முடிந்தது 

இரயிலில் இரங்கியவாறு அவர் அலைபேசி எடுத்து என் நம்பரை அழுத்தி 'ஹலோ' என்றார்   ; விரைவாக சென்ற வண்டியின் வேகத்தில் முன்னர் இருந்த ப்ளேட்பாரம் கம்பியில் இடித்து ரத்தம் வழிய அவர் இறப்பதை அவன் பார்த்தான்..

மண்டயில் ஏதேதோ சொல்ல 

இரயில் கம்பிய புடிச்சு இழு 

கத்து 

ஏதாவது பண்ணு 

திடீரென அவ்வாறு தோன்றியது

ஏன் கத்தனும். நமக்கெதுக்கு இந்த வேலை.

சிம்மை கழற்றி தூக்கி எறிந்தான்..

100 ரூபாய் சிம் உதவியது..



2 comments:

  1. Super.Couldnt guess what the story is leading to until reading it fully!

    ReplyDelete
  2. that will make th e reader to read it curiously. thanks for the reAD

    ReplyDelete