Pages

Thursday 6 November 2014

ஹே ராம் - (HEY RAM)

இந்திய சினிமா தன் நூறு ஆண்டுகளை கடந்து பயணித்துக் கொண்டு இருக்கிறது.ஆண்டுதோறும் தன் வெளியீடுகளை அது அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.சினிமா தன்னை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்து செல்ல எண்ணிக்கை படங்கள் தேவை இல்லை.என்றேனும் சில படங்கள் வரும்.அவை ஓடாத படங்கள் அல்ல.மக்களின் ரசனையை அதிகமாக எடை போட்டுவிட்டு எடுக்கப்படுபவை.2000 ஆண்டு வெளிவந்து அரசியல் கட்சிகள்,மக்களின் பேராதரவில் தோற்கடிப்பட்ட ஹே ராம் படம் பற்றிய ஒரு அலசல். தமிழில் இதற்கு பிறகேனும் இப்படத்தை யாரையாவது எழுத இது தூண்டும் என்ற நம்பிக்கையில் ஆரம்பிக்கிறேன்.


கமல்ஹாசன் இதுவரை நடித்த படங்களை ஒரு தராசில் வைத்தால், தன் எல்லா படங்களை ஒரு தட்டிலும், ஹே ராமை ஒன்றிலும் வைக்கலாம்.இது வரையில் வந்த தமிழ் படங்கள் அல்ல,இந்திய சினிமாக்களில் கூட  இவ்வளவு தீர்க்கமாய் ஒரு படம் வந்தது இல்லை.படத்தில் ஒரு வரியோ,ஒரு காட்சியோ,ஒரு கதாபாத்திரமோ வீணடிக்கப்பட்டதாக தோன்றவில்லை.இப்படத்தையும் காந்தியப்போலவே நாம் ஒதுக்கிவைத்து உதாசீனப்படுத்தியது தான் இப்படத்திற்கு நாம் செய்த நன்மை

 
எழுத்தாளர் சுஜாதாவின் வரிகளோடு இதை ஆரம்பிக்கலாம் 

                             “உண்மை சம்பவத்தின் சாயலில் ஒரு கற்பனைக் கதையைப் பின்னுவதில் சங்கடங்களும் சந்தோஷங்களும் உள்ளன. ஜே எஃப் கே, டே அஃப் ஜக்கால் (JFK. Day of the Jackal) போன்ற படங்களுடன் இதை ஒப்பிட முடிகிறது சங்கடங்கள் இவை - உண்மை சம்பவங்களை அதிகம் திரிக்க முடியாது முக்கியமான சம்பவ மைல் கற்கள் அசைக்க முடியாதவை என்பது உலகமே அறியும். சாகேத்ராமன் கொன்றான் என்று சொல்ல முடியாது. ஆனால் காந்தியை கொல்ல முயற்சித்தவன் சாகேத்ராமன் என்கிற அளவுக்கு உண்மையுடன் விளையாடலாம். உண்மைச் சம்பவத்தை சார்ந்து படம் பண்ணுவதில் சந்தோஷங்களும் உண்டு. படமா நிஜமா என்கிற பிரமிப்பை ஏற்படுத்தலாம்.”


                                                

படம் கமலின் குரல் பதிவோடு ஆரம்பிக்கிறது,கே.பி அவர்களின் உதவியாளர் அனந்துவை வாழ்த்தி, வருடம் 1999 என காட்டப்படுகிறது.இப்போது நடப்பது அனைத்துமே ப்ளாக் & வொயிட்டில் காட்டப்படுகிறது.ஓர் நபர் நுழைய,ஓர் வயதானவர் கிடத்தப்பட்டு இருக்கிறார்.இருட்டைப்பற்றி நுழைந்த மருத்துவர் வினவ,எழுத்தாளர் சாகேத் ராம் (கௌதம் கந்தடை),தன் தாத்தா எப்போதுமே இருட்டைத்தான் விரும்புவார் என தெரிவிக்கிறார்.மருத்துவர் முனாவர் (அப்பாஸ்) மஹாத்மா காந்தி தூங்கும் போது கூட வெளிச்சம் இருக்க வேண்டும் என்று விரும்புவாராம் என்கிறார். “என் தாத்தா மஹாத்மாவெல்லாம் கிடையாது,ஆனா ஒரு நல்ல ஆத்மாஎன்கிறார் எழுத்தாளர்.படம் முழுக்கவே காந்திக்கும், சாகேத் ராமிற்குமான தொடர்பு வந்து கொண்டே இருக்கிறது.








இனி படத்தின் கதை இவ்வாறாக ஆரம்பிக்கிறது.இது உண்மையில் நிகழ்ந்ததா என்கிற கேள்விக்கு இதை விட எளிதாய் பதில் தர முடியாது. 89 வயதான சாகேத் ராம் (கமல்) எதையும் பேசவில்லை. எழுத்தாளர் சாகேத் ராம் மருத்துவரிடம் இவ்வாறாக சொல்கிறார்,” என் தாத்தா என்கிட்ட நிறைய பேசுவார்.அவர் சொல்ற கதை எல்லாமே FIRST PERSON SINGULAR தான். ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்னு சொல்ல மாட்டார்.நான் இருந்த ஊர்ல ஒரு ராஜா இருந்தார்னு சொல்வார்.எது நிஜம்,எது இவரா சேர்த்துண்டதுன்னு சொல்ல முடியாது.என்னோட அடுத்த நாவலுக்கு இவரு சொன்ன கதை தான். BIOGRAPHYயா FICTION ஆன்னு சொல்ல முடியாத மாதிரி ஒரு கலவை.ஆக இனி காட்சிப்படுத்தடும் ஒவ்வொரு காட்சியுமே நிகழ்ந்து இருக்கலாம்,இல்லை கற்பனை ஆகவும் சேர்க்கப்பட்டு இருக்கலாம்.




கதை இந்தியாவில் நடக்கிறது. பிரிக்கப்படாத,பிளவுபடாத 1946 இல் இருந்த இந்தியா.அம்ஜத்தும்(ஷா ருக் க்ஹான்),சாகேத் ராமும் மொஹெஞ்சதாரோவில் வேலை செய்யும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.படத்தின் கலர் டோன் முற்றிலும் மாற்றப்படுகிறது.படத்திற்கு முதன் முதலில் எடுக்கப்பட்ட ஷாட் இது தானாம்.Mr. Wheeler "IT's PACK UP TIME" என்பார்.சினிமாவில் பார்க்கப்படும் நம்பிக்கைகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு இருக்கும்.சற்றே கோபமுறும் அம்ஜத்தின் characterization அதன் இறுதி வரையில் தெளிவாகவே இருக்கிறது. அடுத்த ஒரு வசனத்தில் பதிவு செய்யப்பட்டுவிடுகிறது, “கிரிஸ்து பிறப்பதற்கு பல ஆயிரம் வருஷம் முன்னால்,கழிவு வசதிகள் வேணும்னு நினைத்த நாகரீகம்,குழந்தைகள் விளையாட பொம்மை வேண்டும் என நினைத்த நாகரீகம்,நம்மள மாதிரி பெரியவங்க விளையாட ஆளுக்கொரு சாமி வேணும்னு நினைத்த நாகரீகம் அல்ல”. கமலின் பகுத்தறிவு  சாட்டை சுழல தொடங்குகிறது.


            

இந்தியா-பாகிஸ்தான் பிரிவால் கலவரம் வெடிக்கும் சூழல் உருவாகிறது.தொல்பொருள் வேலைகள் நிறுத்தப்படுகிறது.அடுத்த காட்சி Archaeological Society of India Recreational Club, Karachi யில் நடக்கிறது.பிரிவினை பற்றி ஓவ்வொருவரும் தம் கருத்தை முன்வைக்கின்றனர்.சாகேத் ராம் பிரிக்கப்படும் இந்தியாவை விரும்பவில்லை.லால்வானி(ஷௌரப் ஷுக்லா) ஒரு சிந்தி தொழிலதிபராக காட்டப்படுகிறார். அம்ஜத்தின் மனைவி நபீஸா (இராவதி ஹர்ஷே) சாகேத் ராமிற்கு ராக்கி கட்டிவிட வேண்டும் என்கிறாள்.நபீஸாவிற்கும் ராமிற்குமான சகோதர பாசம் இக்காட்சியில் சொல்லப்படுகிறது.”எப்படி லால்வானி,அம்ஜத் எல்லாம் ஓர் திராவிட மொழி பேசுகிறீர்கள் என Mr.Bright கேட்கும் போது.எல்லோரும் ஒன்றாய் மெட்ராஸ் காலேஜில் படித்ததாய் கூறுகிறார். தன் தந்தை கார்பெட் விற்க தமிழகம் சென்று உள்ளதாகாவும்,அவர் மனைவி ஆம்பூர் என்றும் கூறுவார்படத்தில் எல்லோரும் தமிழ் பேசாமல்,சிலர் மட்டுமே பேசுவர்.அதிலும் ஒரு லாஜிக் தேவை என்பதர்காக இது .மதத்தை விட நட்பு மேலானது எனராமர் ஆனாலும்,பாபர் ஆனாலும்பாடல் ஒலிக்கிறது.முதல் முறையாக பியானோ  இக்காட்சியில் வருகிறது.படம் முழுக்க நாயகன் பியானோ  வாசிக்கும் காட்சிகள் இடம்பெறுகிறது.

சாகேத் ராம் தன் மனைவி அபர்னாவை(ராணி முகர்ஜி) பார்க்க கல்கத்தாவிற்கு வரும் சமயம்,அங்கு கலவரம் வெடித்து இருக்கிறது.மொஹம்மத் அலி ஜின்னாஹ்வின் DIRECT ACTION DAY - Great Calcutta Killings of august 16th காரணமாக கல்கத்தாவில் கலவரம் வெடிக்கிறது.சுஹ்ராவர்தியும் இஸ்லாமியர் என்பதால் இதை அவர் கண்டுகொள்ளவில்லை என்கிறார் டாக்சி டிரைவர் முஸ்லீம் கலவரக்காரர்கள் மத்தியில் அல்த்தாஃப் என்னும் தையல்காரனையும் பார்க்கிறான் சாகேத்.கார் செல்வதற்கு மக்களை ஒதுங்க சொல்லிவிட்டு,அந்த காரின் பின் கண்ணாடியை தாக்குகிறான்.இவனது கதாப்பாத்திரம் ஒரு backstabbing என்றும் இன்னமும் முடியவில்லை என்பதும் அடுத்த சில காட்சிகளில் சொல்வதற்கு இது.கலவரத்தின் காரணமாக எல்லாக் கடைகளும் பூட்டிக்கிடக்கிறது.


அபர்னா ஒரு ஆசிரியையாக கல்கத்தாவில் வசிக்கிறாள்.அபர்னா சாகேத்துக்கு ஒரு தந்தி வந்து இருப்பதாக சொல்கிறாள்.சாகேத் அலட்சியமாக என்ன தந்தை நலமில்லையா இல்ல இறந்தேவிட்டாரா என்று கேட்கிறார்.அவன் தன் குடும்பத்தை விட்டு வந்துவிட்டார் என்பது புலப்படும்.அவர் பின் இறப்பதும் இவன் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்காது.எங்கே தன்னை பிரிந்து சென்று விடுவானோ என பெங்காளி அபர்னா வருத்தம் கொள்கிறாள்.சாகேத் அதை தெளிவுபடுத்துகிறான்.அபர்னாவும்,சாகேத்தும் இணைந்து பியானோ வாசிக்கின்றனர்.



நீ பார்த்த பார்வைக்கு ஓர் நன்றிபாடலுக்கு முன் வரும் பெங்காளி கவிதையை அப்ரனா வாசிக்கிறாள்.அதன் ஆங்கில மொழியாக்கம் இவ்வாறாக வருகிறது.


Moonlight in the sky on the forest trail The scent of the leopard.My heart is like a deer in the silence of the night which way am I going The silvery shadow of leaves on my body no more deer anywhere As far as I go I see the moon bent like a sickle cutting the last gold And deer-grain then sinking slowly into the darkness Of  all the sleep in the eyes of a hundred does.     

இருவரும் காதல் கொள்கின்றனர். சாகேத் தமிழ் முறைப்படி தாலி கட்டுகிறான்,அவளுக்கு பெங்காளி முறைப்படி திலக்கும் இடுகிறான்

 

அபர்னா தன் காலில் அணிந்து இருக்கும் மெட்டியை எடுத்து சாகேத்தின் சுண்டு விரலில் இடுகிறாள்.வெளியே சென்று ஏதேனும் வாங்கி வர சாகேத் செல்கிறான்.அபர்னா கலவரக்காரர்களை எண்ணி பயம் கொள்ளத் துவங்குகிறாள்.

தான் பயணிக்கும் வழியில் ஒரு சீக்கிய பெண்ணை ஒரு மனிதன் துரத்துகிறான்.”உனக்கு வெக்கமா இல்லஎன்று சாகேத் திட்டும் போது இல்லை என சொல்லிவிட்டு மீண்டும் துரத்துகிறான்.பின்னால் ஒரு பெரிய கூட்டமே துரத்துவதை கண்டு சாகேத் அவனது பைக்கில் ஏற்றி அவளை அவளது வீட்டில் விடுகிறான்.அவர்களின் வீட்டில் தொலைபேசி இருக்கிறதா என வினவி ,HARDWICK என்கிற ஆங்கிலேய உயர் அதிகாரியிடம் நிலைமையை பற்றி பதறுகிறான்.இங்கே சாகேத் பேசுவது எதுவும் காட்டப்படவில்லை.ஹார்டுவிக்கின் பதில் சொல்லும் தோணியிலேயே சில விஷயங்கள் சொல்லப்படுகிறது.   

  

மிகவும் ரிலாக்ஸாகவே,தேநீர் அருந்திக்கொண்டே எவ்வித பதபதைப்பும் இல்லாமல்  பதில் கூறுகிறார். “ஆமாம்.ஆனால் நாம் என்ன பண்ண முடியும்.இந்துக்களுக்கு நாங்கள்  வெளியேற வேண்டும்.இஸ்லாமியர்களுக்கு நாட்டை அவர்களுக்கு தர வேண்டும்.நீங்கள் ஏன் காங்கிரஸ் அலுவலகத்திற்கோ, மஹாத்மாவிற்கோ ஃபோன் செய்யகூடாது?” மறுபக்கம் அழைப்பு துண்டிக்கப்படுகிறது.




தான் காலம் தாழ்த்தி வந்துவிட்டதை சாகேத் ராமால் உணரமுடிகிறது. அவனது பியானோவின் மீது அவன் கட்டிப்போடப்படுகிறான்.அல்த்தாஃபும்,அவனோடு வந்தவர்களும் அபர்ணாவை கற்பழிக்கிறார்கள்.சாகேத்தை கட்டிப்போட்டுவிட்டு நிற்கும் ஒருவனை,அல்த்தாஃப் உள்ளே அழைக்கிறான். அதற்கு அவன் “i prefer this one"  என சாகேத்தை பார்க்கிறான்.சாகேத்தின் பின் தொடை பகுதியை லேசாய் தடவிக் கொடுக்கிறான்.ஓர் இன சேர்க்கை பற்றிமுதன் முறையாக ஒரு சினிமா பேசுகிறது.தன் கையாலாகாத தனத்தை எண்ணி சாகேத் பியானோ பொத்தான்களில் முகம் புதைத்து அழுகிறான். துப்பாக்கியை வைத்துக் கொண்டு சாகேத்தை மிரட்டுகிறான்.ஒரு பாலியல் வன்முறையின் உச்சம் வசனம் இல்லாமல் உணர வைக்கப்படுகிறது.அவனுக்கு சம்மதிப்பதுப் போல் சாகேத் கைகள் விடுபடும் வரை அமைதி காத்து பின் அவனை தாக்குகிறான்.கழுத்து அறுபட்டு,ரத்தம் பீறிட அபர்ணா இறந்து போகிறாள்.தன் துப்பாக்கியில் தோட்டாக்களை போட்டுக்கொண்டு அவர்களை பழி வாங்க கிளம்புகிறான்.அந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒவ்வொரு தளத்திலும் வன்முறை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.


அடுத்து வரும் எல்லா காட்சிகளுமே வன்முறையின் பொருட்டு  RED SHADE இல் காட்டப்படுகிறது. ஒரு மசூதியின் மேல் பகுதி எறிவது போல் காட்டப்படுகிறது. பின்னர் அது அதற்கு பின்னால் நடக்கும் ஒரு கலவரத்தை காட்டுகின்றது.சாகேத் ராம் அல்த்தாஃப்பின் கடைக்கு வருகிறான்.

அது எறிந்து கொண்டு இருக்கிறது.ஒரு இஸ்லாம் குடும்பத்தை சீக்கியர்கள் இரக்கமின்றி கொல்கின்றனர்.சிறுவர்கள் தீயில் போடப்படுகிறார்கள்.அந்த பகுதியே தீக்கிறை ஆக்கப்படுகிறது.அல்த்தாஃப் ஒரு வீட்டின் பைப் வழியாக கீழே இறங்குகிறான்.


 

சூழ்நிலை தன்னை இவ்வாறு செய்ய வைத்ததாக உயிருக்கு மன்றாடுகிறான் அல்த்தாஃப்.அவனையும்,தடுக்க வருபவரையும் சுட்டுக் கொல்கிறான் சாகேத். சாகேத்தின் கோபம் இன்னமும் அடங்கவில்லை.இருவர் இணைந்து ஒரு வயதான இஸ்லாமியரை கத்தியால் குத்திக் கொண்டு இருக்கின்றனர்.சாகேத் துப்பாக்கியுடன் வருவதைக்கண்டு அவனை இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என எண்ணி ஒருவன் ஓடி விடுகிறான்.மற்றொருவன்அல்லா அக்பஎன்கிறான்.அந்த இஸ்லாமியரை இவன் சுட முயற்ச்சிக்கும் போது,”அல்லா,உங்களை என்னை காப்பாற்ற அனுப்பி இருப்பதாக சொல்கிறார். தன் பேத்தியை அழைக்கிறார்.சாகேத் உள்ளே நுழைந்து பார்க்கும் போது,

 

ஓர் பார்வையற்ற சிறுமி தன் கையில் ஒரு பொம்மையோடு தன் தாத்தாவை அழைத்தபடி இருக்கிறாள்.சாகேத் ஒரு கணம் செய்வதறியாது திகைக்கிறான்.அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறான்.அந்த சிறுமி அவள் தாத்தாவின் உடலை தொட தன் விரல்களில் படிந்தது என்ன என்பதை சொல்லாமல் அக்காட்சி முடியும்.இந்த காட்சி முழுவதுமே ராஜாவின் இசை வன்முறையின் ஊடே மென்சோகத்தை புகுத்தியபடி இருக்கும்.

சாகேத் அடுத்து ஸ்ரீ'ராம்' அப்யங்கரை(அதுல் குல்கர்னி) சந்திக்கிறான்.அப்யங்கர் சாகேத் மார்பில் இருக்கும் உபனயனத்தை பார்க்கிறார்.சாகேத் கையில் இருக்கும் துப்பாக்கியையும்,சாகேத் வகுப்பில் தன்னைவிட மூத்தவன் என அப்யங்கர் உறுதி செய்கிறான்.பின்னர்  அபிவாத்யய் கூறுகிறான் சாகேத்திடம்


“Abhivadaye vishwamitra aagamarshana kaushika, triyashreya pravaranvitha kaushika gothra, aapasthambha sutra, yajusshakha adhyayee, Shriram Abhyankar sharma nama aham asmibhu”(Of Kaushik, son of Vishwamitra…Of Kaushik, thrice blessed…Of Kaushik, the high priest of Yajur Veda… Of Kaushik, I bear my lineage. I am Shri Ram Abhyankar.)

 
ஒரு தமிழ் படத்தில் அபிவாத்யய் வரும் காட்சி இதுதான் முதல் முறை.
தான் நிர்வகிக்கும் ஒரு பத்திரிக்கையை சாகேத்திற்கு கொடுக்கிறார் அப்யங்கர். இங்கு இருக்கும் மக்களுக்கு நீ யார் என தெரிய வேண்டும் எனக்கூறி சாகேத்தின் நெற்றியில் திலகம் இடுகிறான்.சாகேத் அந்த இடத்தை விட்டு விடுபட ஓடுகிறான்.அலரல் சத்தம் ஓய்ந்தபாடில்லை.ஒரு சீக்கிய கும்பல் ஒரு இஸ்லாம் சிறுவனை வெட்டிக் கொல்கிறது. இங்கு பிரச்சனை இந்துவா,இஸ்லாமா என்பது இல்லை என்பது மெல்ல மெல்ல சாகேத்திற்கு விளங்க ஆரம்பிக்கிறது.தீவரவாதம் என்பது ஒரு மதத்திற்குள் வரையறுக்கப்படவில்லை என்பது அவனுக்கு புரிபடுகிறது.
பிணங்களின் நடுவே அடுத்த நாள் விடிகிறது.

முனிசிபாலிட்டி வண்டிகள் உடல்களை ஏற்றிச் செல்கிறது.யானைப்பாகன் கொல்லப்பட்டு யானை ஒன்று தனித்து விடப்பட்டு இருக்கிறது.அதன் நிலையோடு தன்னை ஒப்பீடு செய்கிறான் சாகேத்.தன் அபர்னா இறந்த பின் அதே நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறான்.


அப்யங்கர் தந்த முகவரியில் போலீஸ் யாரையோ தேடிக்கொண்டு இருக்கிறது.நேற்றைய வேட்டை எப்படி இருந்தததென அப்யங்கர் வினவ.சாகேத் பேச முடியாமல் தடுமாறுகிறான்.முன்னர் காட்சிகளில் அம்ஜத் தமிழ் பேசுவது போல், இதில் அப்யங்கர் தமிழ் பேசுகிறான் ,தான் தஞாவோர் மராட்டியன் என்கிறான்.படத்தில் தமிழர்கள் அல்லாது தமிழ் பேசும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு காரணம் வழிய சேர்க்கப்படுகிறது.விஸ்வரூபத்திலும் இது போன்று பார்க்க இயலும்.கமல் ஒரு நடிகனாய் கதை தேர்வில் பல படங்களில் தோற்த்து இருக்கலாம்.ஒரு இயக்குனராய் என்கும் தவறு இழைப்பதில்லை. ”நீங்களெல்லாம் கொல்வதற்கு ஏதோவொரு காரணம் சொல்லிக்கொள்கின்றனர்,கடவுள்,மதம் என”.சாகேத்தால் அவன் கொலைகளை சகித்துக்கொள்ள முடியவில்லை.  சாகேத்தின் கொலைகளை நியாயப்படுத்துகிறான் அப்யங்கர்.இதற்கு எல்லாம் காரணம் காந்தி தான் என மூளை சலவை செய்கிறான் அப்யங்கர்.காந்தி பற்றி ஒரு தவறான புரிதலை சாகேத்திற்கு விதைக்கிறான் அபயங்கர்.முதலில் இருந்தே முதலில் இருந்தே khilafat movement, போன்றவற்றை பயன்படுத்தி அந்த பச்சை செடியை மரமாக்கினான் என்கிறான். கொலை செய்வது தவறில்லை என்றே ஆரம்பிக்கிறார்.குற்றத்திற்கு தான் தண்டனையே அன்றி கடமைக்கு இல்லை;கொலை குத்தம் எனில்,யுத்தமும் குத்தம் தானே.பட்டாளத்துக்காரன் செய்யும் கொலை எப்படி குற்றம் ஆகும்.இது ஒரு சிவில் போர் என்கிறான் அப்யங்கர்.


ஒரு மாட்டுவண்டி கவிழ்ந்து கிடக்கின்றது.இறந்த மாட்டின் வயிற்றுப்பகுதியில் ஒரு மிருகம் ருசி பார்த்துக் கொண்டு இருப்பதை சாகேத் காண்கிறான்.போகிற போக்கில்இந்த புத்தகத்தை படி.இது தடை செய்யப்பட்ட புத்தகம்.அட்டையை பிரிக்காம படி.இத எழுதியது வீர் ....” என்பதோடு பொலீஸ் அவனை சுற்றி வளைப்பது போல் காட்சி பின்னப்பட்டுள்ளது.இதற்கு பெயர் தான் உண்மையோடு விளையாடுவது.யார் எழுதியது என்பதனை முழுதாய் சொல்ல ஒரு நொடிகூட ஆக போவதில்லை



கல்கத்தாவை விட்டு கிளம்புகிறான் சாகேத்.அவன் நேசித்த அவனது பியானொ அந்தரத்தில் தொங்குகிறது.பொருட்களை கூட பொருட்படுத்தாமல் அங்கிருந்து கிளம்புகிறான்.அவனது அபர்னாவைப் போலவே,
அவனது பியானோ விழுந்து இறக்கின்றது,.பாகன் அற்ற .இவன் மீண்டும் தன் நிலையோடு அதை ஒப்பிட்டு வருந்தத் தொடங்குகிறான்.


 

கதை அங்கு இருந்து ஸ்ரீரங்கம் நகர்கிறது. தமிழ் பாடலான "பதங்கொண்டு நடத்தும் வாழ்க்கைமாவுத்தன் அவனும் இன்றிகதங்கொண்டு துழைக்கும் வெய்ய அங்குசம் அதுவும் இன்றிமதங்கொண்ட வேழம் போலத் திரிகிறேன் பண்டு நான்குவிதங்கொண்ட மறைகள் போற்றும் அரங்கமா நகர் உளானே!" ஒலிக்கின்றது.தான் அடி வைத்து நடத்தும் வாழ்க்கை  மாவுத்தனால் அடக்கப்படாத,உடம்பை குத்தி வழிநடத்தும் அங்குசம் இல்லாத  மதங்கொண்ட யானை போல திரியும் வாழ்க்கைஎன அர்த்தம் தொனிக்கும் வரிகள்.அபர்னா என்னும் தன் பாகனை தொலைத்து விட்டு யானையாய் சாகேத் உணர்கிறான்.பெண் பார்ப்பதற்காக பாஸ்யம் மாமா (வாலி), வசந்தா அத்தை ஆகியோரோடு செல்கிறார்.தூணோடு ஒரு யானை கட்டப்பட்டு இருக்கிறது.சாகேத்தும் அதே போல் பிடியில் சிக்கிக்கொள்கிறான்.அவனுக்கு இதில் விருப்பம் அறவே இல்லை என்பதைஅப்பாவும்,மனைவியும் இறந்து 6 மாதம் ஆகலை,அதுக்குள்ள பொண்ணு பார்க்க போறோம்என்கிறான்.மணப்பெண் மைத்திலியாக (வசூந்த்ரா தாஸ்) ,கதை முழுக்க முழுக்க அக்ராகாரத்தில் பயணம் செய்கிறது.வடக்கில் நடந்தேறிய கலவரம் பற்றிய சுவடு கூட இங்கு இல்லை.முழுக்க முழுக்க அய்யங்கார் குடும்பமாய் காட்சி அளிக்கிறது .தனியா தெரிவது மைத்திலியின் நீல நிர லென்ஸ் கண்கள் மட்டுமே. மைத்திலி சாகேத் காலில் விழுந்து வணங்குகிறாள்.சாகேத் தன் சுண்டு விரலில் இருக்கும் அபர்னாவின் மெட்டியை கவனித்து வருந்துகிறான்.


வீட்டின் மாடியில் சாகேத் தன் நண்பர்களோடு உரையாடுகிறான். தன் திருமணத்தையும்,இந்தியா,பாகிஸ்த்தானின் பிரிவை விவாகரத்து என்றும் ஒப்பீடு செய்கிறான் சாகேத். சாகேத்தை தவிர மற்றவர்கள் பாகிஸ்தான் பிரிந்தது சரி என்ற தொணியில் பேசுகிறார்கள்.செறங்கை வெட்டி எறிவது போல் பாகிஸ்தானை ரேட்கிலிஃப்  பிரித்து விட்டதாய் சொல்கிறான். பாகிஸ்தானை ஒரு வேண்டாத ஒன்றாகவே இங்கு இருப்பவர்கள் நினைத்து இருந்தனர்

 
காந்தியை நக்கல் செய்வதை அங்கு யாரும் விரும்பவில்லை.அங்கு இருப்பவர்களில் சாகேத்தை தவிர மற்ற எல்லொரும் காந்தியை தெய்மாகவே பார்த்தனர், கல்கத்தா கலவரங்களுக்கு காந்தி தான் காரணம் என சாகேத் ஏற்கனவே முடிவு செய்கிறான்.அவர்கள் இருவரௌம் பஎசும் காட்சியில் கூட.இதை ஒரு வேண்டாத பந்தமாகவே பார்க்கிறான் சாகேத்.சாகேத்திற்கும்,மைத்திலிக்கும் ஆன தொடர்பு விலகியே இருக்கிறது, முதல் இரவில் மைத்திலி உடை மாற்ற உள்ளே செல்ல,அங்கே ஒரு பல்லி தற்செயலாய்,அவள் மீது விழுகிறது. அவள் அலறுகிறாள்.சாகேத்திற்கு அது அபர்னாவின் அழு குரலாய் கேட்கிறது.அபர்னாவை காப்பாற்றுவதாய் எண்ணி கதவை தட்டுகிறான்.பின்,அங்கே மைத்திலி இருப்பதைக் கண்டு தன் தவறை உணர்கிறான்.


 

இயல்பு நிலைக்கு வருவதற்காக தண்ணீரை எடுத்து ஊற்றிக்கொள்கிறான்.அவனால் கொலை செய்யப்பட்ட எல்லொரும் அவன் முன்னால் வருவது போன்றதொரு பிரம்மை ஏற்படுகிறது.ரத்தத்தில் நகர இயலாது தத்தளிக்கும் பல்லியாய் அவன் தன்னை உணர்கிறான்.

 ”தி ஸ்டேட்ஸ்மேன்நாழிதழ் பாகிஸ்தான் விடுதலை அடைந்ததை காட்டுகிறது.நாள் 14-ஆகஸ்ட்-1947.சாகேத் மீண்டும் கல்கத்தாவிற்கு வருகிறான்.தன் குடும்பத்தை விட்டு தனியாக கல்கத்தா வந்து இருக்கிறான்.அவன் வாழ்ந்த குடியிருப்புக்கு செல்கிறான்.கல்கத்தா முற்றிலுமாய் மாறி இருக்கிறது.அபர்ணாவும்,பியானொவும் அவன் கண் முன்னால் வந்து போகின்றன.அவன் தங்கி இருந்த வீட்டிற்கு செல்கிறான்.அங்கு புதிதாய் குடி வந்து இருப்பவரிடம் அபர்ணா வரைந்த காளியின் படத்தை கேட்டு வாங்கிக் கொள்கிறான்.படத்தை கைகளில் சுமந்தபடி தெருவில் நடண்டு செல்கிறான்.அவனால் கொல்லப்பட்டவர்கள் அவன் கண் முன் வந்து செல்கின்றனர்.


சுஹ்ராவர்திக்கும்,காந்திக்கும் எதிராய் கோஷங்ளை எழுப்பி ஒரு கும்பல் செல்கிறது. இந்த காட்சியில் தான் காந்தி கதாப்பத்திரம் (நஸ்ருதீன் ஷா) அறிமுகம் செய்யப்படுகிறது.

 

கடந்த ஆண்டு கல்கத்தாவிலும்,பெங்காலிலும் நடந்த கொலைகளுக்கு சுஹ்ராவர்திதானே காரணம் என சாகேத் வினவுகிறான்.அவரும் வேறு வழியின்றி  ஒப்புக்கொள்கிறார்.சுஹ்ராவர்திக்கும்,காந்திக்கும் எதிராய் கோஷம் எழுப்பியவர்கள்,சட்டென்று அவர்களுக்கு ஆதரவாய் கோஷங்கள் எழுப்புகிறார்கள்.சாகேத் ராம் குழப்பத்தில்,குழுமியிர்ருவர்களைக் கண்டு வெறுப்படைகிறான். அங்கிருந்து கடந்து செல்ல,ஒளியின் மறைவில் இருந்து அப்யங்கர் வெளிப்படுகிறான்.மனிதர்களுக்கு நியாபகம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்கிறான்.அடுத்து வரக்கூடிய அப்யங்கரின் வசனம் அப்படியே  இந்த ஆட்டு மந்தை ஆட்டுப்பால குடிக்கற இந்த தாத்தா பின்னால போயிக்கிட்டு இருக்கு.தாத்தா பக்ரீத்த கொண்டாட போயிக்கிட்டு இருக்கார்னு தெரியாது, இந்த மட மந்தைக்கு ”.

 
ஒரு முதியவர் இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரர்கள் என கத்திக்கொண்டு வருகிறார்.கோபமுறும் அப்யங்கர் முரண்பாடானவற்றை சொல்லி சகோதரர்கள் என்று சொல்லுகின்றான். ஜெர்மனி-இங்கிலாந்து;சீனா-ஜப்பான்;ஆடும்-கறி வெட்டுபவரும் சகோதரர்கள் தானே என்பது போல் பேசுகிறான்

 

அந்த நள்ளிரவில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கிறது.

சாகேத் ராம் மறுபடியும் தமிழகம் வருகிறான்.சாகேத்திற்கும் மைத்திலிக்கும் இடையேயான இடைவெளி அப்படியே தான் இருக்கிறது.எப்படியேனும் ராமிடம் பேசவேண்டும் என்பதாய் மைத்திலி பேசுகிறாள். "அம்மா முகத்த கூட பாக்க முடியலையேனு வருத்தமா இல்லையா"என கேட்க.போட்டோ இருக்கிறதே  என பதில் வருகிறது.கல்கத்தா பற்றியும்,அபர்ணா பற்றியும் பேசும் போது தான் சாகேத் ஆர்வமாய் பதில் தருகிறான்.அபர்ணா வரைந்த காளியின் படத்தை மைத்திலிக்கு தருகிறான்.மைத்திலி தான் வரைந்த ஆண்டாள் படத்தை சாகேதிற்கு தருகிறாள்.இந்த காட்சியில் வரும் ஆண்டாள் என்பது ஒரு அழகியல் குறியீடு.

 

சாகேத் தன் மனைவியோடு மகாராஷ்டிரா கிளம்புகிறான். காந்தி பற்றிய புரிதல் இருவருக்கும் அதிகம் வேறுபடுகிறது.தென் இந்தியாவில் இருப்பவர்கள் கலவரம்,பிரிவினை,போன்றவற்றின் பாதிப்பு அற்றவர்களாகவே இருக்கிறார்கள்.அவர்கள் காந்தியை பெரிதும் நம்பினர் .இப்போது இங்கு நடக்கும் பிரச்சனைகளுக்கு வடஇந்தியர்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் இது போலத்தான் . ரேட்க்ளிப் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை பிரித்த போது,தென் இந்தியர்களுக்கு அது பெரிதாய் எவ்வித பாதிப்பையும் தரவில்லை.மைத்திலி எதிர் வாதம் செய்யும் போதெல்லாம் அது சாகேத் ராமிற்கு அவள் மேல் அதிக அன்பை கூட்டுகிறது.காந்தியின் குரங்குகளுக்கு சாகேத் நக்கல் செய்ய,மைதிலி அதை  தீர்க்கமாய் மறுக்கிறாள்.
அப்யங்கர் தன்னை ராமகிருஷ்ண பாண்டேவாக அறிமுகம் செய்து கொள்கிறான்.சாகேத் ராமின் திருமண முடிவு பற்றி அவனுக்கு இஷ்டம் இல்லை என்பது இக்காட்சியில் புலப்படுகிறது.மகாராஜாவோடு வேட்டைக்கு செல்வது பற்றி பாண்டே கூறுகிறான். கொலை செய்வதில் என்ன ஆனந்தம் இருக்கிறது என மைத்திலி கேட்க,அதற்கு சாகேத் ராம் பதில் அளிக்கிறான்.ஒரு ஓநாய் ,நம் குழந்தையை கொள்வது நியாமா எனக்கேட்கும் பொது,ஓநாயின் பார்வையில் இருந்து பார்த்தாள் தவறில்லை என அபயங்கர் கூறிவிட்டு வண்டி கிளம்புகிறது.

 

கொலைக்கு கொலை தீர்வாகாது என்பதில் மைதிலி உறுதியாக இருக்கிறாள்.கலவரத்தில் பாதிக்கப்பட்டவனின் பார்வையில் இருந்து பார்த்தால் கொலையின் நியாயம் புரியும் என்பதாய் அப்யங்கரின் பதில் அமைகிறது. சாகேத் தனுக்கு கொல்ல வேண்டும் என்கிற வேட்கை கிடையாது.ஒரு ஆர்வம் மட்டுமே என சொல்ல,

மகாராஜாவும்,அப்யங்கரும் அதை பற்றி பேசி கொள்கின்றனர்.சாகேத்தை ஏதோ  ஒன்றிற்கு அவர்கள் தயாற்படுத்தவே எல்லாம் நடக்கிறது .காரில் மகாராஜா,அபயங்கர்,சாகேத் எல்லோரும் செல்கின்றனர்.ஓர் இடத்தில் ரயில்வேகாரர்கள் பூட்டி இருக்கிறார்கள்."எல்லா கதவுகளையும் பூட்டி விட்டனர்.இதை மட்டும் திறந்து என்ன செய்ய?"என்பதே கேட்கிறார்.வல்லபாய் பட்டேலின் அறிவுரைப்படி,மகாராஜாக்கள் அனைவரும் தங்கள் நிலங்களை இந்திய அரசாங்கத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என இருந்தது.மகாராஜாக்களும் இனி பப்படம் சாப்பிட்டு உயிர் வாழ வேண்டும் என நக்கல் அடிக்கிறார் மகாராஜா.பப்படம் விற்கும் ஒரு ஏழையிடம் அதை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்.இவ்வளவு பணத்தை இவனுக்கு எண்ணக்கூட தெரியாது என நக்கல் அடிக்கிறார் மகாராஜா.பப்படம் விற்பவன் சிரித்துக்கொண்டே தான் பணம் எண்ணுவதை தான் தொழிலாக கொண்டேன் கராச்சியில் என்கிறான் .சாகேத் அந்த குரல் கேட்டு திரும்பி பார்த்தி அதிர்கிறான்.பப்படம் விற்பவன் எவனது பழைய பணக்கார நண்பன் லால்வாணி . பாகிஸ்தானில் இந்துக்களுக்கு ஏற்பட்ட துயரம் கண்டு கோபமடைகிறான்.லால்வானியின் குடும்பம் என்னவானது என கேட்க ரயிலில் குவியலாய் பிணங்கள் வந்ததை பற்றி சொல்கிறான்.

விஜயதசமி விமர்சையாக கொண்டாடப்படுகிறது.அபயங்கர் வற்புறுத்தலால் சாகேத் மது அருந்துகிறான்.பத்து தலை ராவணனை ராமர் வாதம் செய்யும் காட்சி காட்டபடுகிறது.இசையில் தொடங்குதம்மா பாடல் பின்னணியில் ஒலிக்கிறது  .

காந்தியை கொல்ல திட்டம் தீட்டப்படுகிறது.மகாராஜாவின் வரிகள் அப்படியே 
"Gentlemen, if our Hindu soul is to survive, this Mahatma must die. The misfortune of this Hindu nation is its worst enemy is a practicing Hindu! Right from beginning, he has been taking their side and neglecting the people of his own religion. For centuries we have been worshiping the valor and its accompanying instruments He now wants us to change our form of worship and pray to a new God, himself, and a new religion, Ahimsa.My brave men, it should be done as a symbolic act and not as the revenge. But to show the world and the country what a Hindu is capable of "
  

சாகேத்தின் மூளை அதன் கட்டுப்பாட்டை இழந்து இருந்தது.அபயங்கர் முன்னால் சொன்ன  "பச்சை செடிக்கு தண்ணி ஊத்தி மரமா ஆக்கிட்டான் "என்பது விசுவலாய் காட்டப்படுகிறது.அது ஒரு பச்சை முள் கள்ளி செடியாய் வளர்கிறது.



 

காளியின் படமும்,ஹிட்லரின் படமும் ,விநாயக் சவர்காரின் படமும் அங்கே இருக்கறது . அப்யங்கரும்,சாகேத் ராமும் காந்தியை கொல்ல நியமிக்கப்படுகிறார்கள்.மகாராஜா ஒரு ராம் தான் இந்த காரியத்தை செய்ய வேண்டும் என எழுதி இருக்கிறது என்கிறார். காந்தியை உண்மையில் கொன்றது ஒரு ராம் என்பது வேறு. காந்தி,மூன்று குரங்குகள்,பாகிஸ்தான் கொடி எல்லாம் காட்டப்படுகிறது

 

துப்பாக்கியின் சத்தத்தில் அது அப்படியே சிதறுகிறது .பின்னர் ஜெர்மனியின் ஸ்வஸ்திக் காட்டப்படுகிறது.அது மெல்ல உருமாறி ஹிந்துக்களின் ஸ்வஸ்திக் காட்டப்படுகிறது .ஜெர்மனியின் யூத மக்களோடு இங்கு இருப்பவர்கள் ஒப்பீடு செய்யப்படுகிறார்கள்.










 

ஸ்வஸ்திக்  மீண்டும் உருமாறி ஒரு தாமரை வடிவத்தை அடைகிறது .
சாகேத்தும் மைதி
லியும் கலவி கொள்கிறார்கள்.

  

அந்த கட்டில் அப்படியே உடைந்து மொஹெஞ்சதாரோவின்  மணல் மேடுகளில் விழுவதாய் காட்சிப்படுத்தப்படுகிறது .மைதிலி ஒரு பெரிய துப்பாக்கியாய் உருமாற்றம் பெறுகிறாள்.



சாகேத் பல நாட்கள் கழித்து பியானோ வாசிக்கிறான்.இம்முறை அதில் ஒரு உற்சாகம் இல்லை.ஒரு விதமான மூர்க்கத்தனமாய் காணப்படுகிறான்.  


மறுநாள் போலோ மாதிரியான விளையாட்டு நடத்தப்படுகிறது. சாகேத்தும் ,அப்யங்கரும் கலந்து கொள்கிறார்கள்.அப்யங்கரின் குதிரை அவன் மீது விழுந்து ,அவன் விபத்துக்கு உள்ளாகிறான்.அந்த குதிரையை மகாராஜா சுட்டு வீழ்த்துகிறார்.சாகேத் அப்யங்க்கரை சந்திக்க மருத்துவமனைக்கு செல்கிறான் .அபர்ணாவின் மெட்டியை  சாகேத் கைகளில் அணிந்து இருப்பான்.அதை மைதிலியின் கைகளில் அணிகிறான்.அதன் சாட்சியாய் ,முதல் முறையாய் மைத்திலிக்கு நீ பார்த்த பார்வைக்கு ஓர் நன்றி பாடலின் பிஜிம் வாசிக்கப்படுகிறது .

.
ராம் மட்டும் தனியே அப்யங்கரை பார்க்க செல்கிறான் .ராமிடம் காந்தியை கொள்வதற்கான துப்பாக்கி வழங்கப்படுகிறது.


உரிய காலம் வரும்போது தந்தி வரும் என்றும் சொல்லி அனுப்புகிறான் .படம் முழுக்க ராமாயணம் தொடர்புபடுத்த படுகிறது.அபயங்கர் இருக்கும் அறையில் ஆஞ்சநேயர் படம் இருக்கிறது .தன் உடல் செயல் இழந்து விட்டதாகவும்,பரிசுத்தா ஆமா மட்டுமே மீதம் இருப்பதாகவும் சொல்கிறான்.


 

படம் மீண்டும் இன்றைய தினத்திற்கு வருகிறது. அது அழகே ப்ளாக் அண்ட் வொயிட்டில் காட்டப்படுகிறது .வயதான சாகேத் ராமை மருத்துவமனைக்கு ஒரு வண்டியில் அழைத்து செல்கிறார்கள்.நாள் டிசம்பர் 6,பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்.நகரம் கலவரமாய் கிட்டக்கின்றது. இவர்களின் வண்டி மாற்று திசையில் திருப்பி அனுப்பப்படுகிறது .கலவரம் வெடிக்கிறது.

இவர்களது வண்டி போலிசால் இப்ராஹீம் (நாசர்)நிறுத்தப்பட்டு ,இவர்கள் அருகில் இருக்கும் ஒரு குழியில் தங்கவைக்கப் படுகிறார்கள்.வயதான சாகேத் ராமின் செயற்கை காற்று கருவியோடு குழியினுள் வைக்கப்படுகிறார் .   சாகேத் மீண்டும் பழைய காட்சிகளை நினவு கூர்கிறார்.
சாகேத் தன மனைவியோடு சொந்த ஊரில் இருக்கிறன்.காலம் கனிந்து வருதற்காக தன்னை தயார் படுத்திக்கொண்டு இருக்கிறான் காந்தி ஒரு கோரமான  நிலையில் ஒரு படத்தில் காட்சி அளிக்கிறார்.காதி செல்லும் இடங்களை ஏற்ல்லாம் குறிக்கும் இதிய வரைபடம் ஒன்றும் இருக்கிறது .


 

அப்யங்கர் இறந்து விட்டதாகவும், காந்தி ஒரு மாதம் டெல்லியில் இருப்பதாகவும், காந்திக்கு சேவை செய்ய இது தான் சரியான தருணம் என்றும் தந்தி வருகிறது.மைத்திலி கர்ப்பம் தரித்து இருப்பது பின்னர் தான் ராமிற்கு தெரிய வருகிறது.சாகேத் கிளம்ப தயார் ஆகிறான் . வாத நோயால் பாதிக்கப்பட்ட வசந்தா அக்காளின் கணவர் குரல் கேட்டு விரைந்து செல்கிறான்.அவர் இறந்து இருப்பதை கண்டு வருந்துகிறான்.வசந்தா அக்காளையும்,மைத்திலயையும் நினைத்து வருந்துகிறான்.ஒரு லெட்டர் எழுதி வைத்து விட்டு,அங்கு இருந்து கிளம்பி டில்லி வருகிறான்


டில்லியில் ஹோட்டல் மரினாவில் அரை எண் 43இல் சாகேத் ராம் தங்குகிறான் .அங்கு கோவர்தன்  (கொல்லப்புடி மாருதி ராவ் )என்னும் நபர் அறிமுகமாகிறார் அவன் ஹோட்டலில் தங்கும்நபர்களுக்கு மாது சப்ளை செய்யும் நபராக வருகிறார்சாகேத் ராம் அங்கு இருந்து பிர்லா ஹவுசிற்கு செல்கிறான் அங்கு காந்தி நேரு,ஆசதிடம் பேசுவது போல் காட்சி அமைக்கட்டு இருக்கும்.காந்தி அமர்ந்து இருக்கும் இடத்திற்கு பின் புறம் உள்ள அறையில் புகைப்படம் எடுக்க அங்கு இருக்கும் நபரிடம் லஞ்சம் தருகிறான் சாகேத்.ஆடுகளை பராமரிக்கும் அவனோ ஏற்கனவேஒருவர் அப்படித்தான் இங்கு வந்ததாக சொல்கிறான்.காந்தி பேச இருக்கும் மைக் வேலை செய்யாததால் அவரது உதவியாளர் காந்தி பேசுவதை சத்தமாக உரைக்கிறார் . சிலரின் நடமாட்டம் சாகித் ராமை சந்தேகம் வர வைக்கிறது 

 . 

ஒருவனை "நாத்து " என்ற பெயரில் ஒருவன் அழைப்பது சொல்லப்படுகிறது . சாகேத் ராமும் நாத்துரம் கோட்சேவும் மோதிக் கொள்வது போல் ஒரு அமைக்கப்பட்டு இருக்கும் சுவற்றில் ஒருவன் வெடி வைத்து கூட்டத்தை கலைக்க முயற்சிசெய்கிறான் அவனை கைது செய்கிறது போலிஸ்நாள் 20.ஜனவரி.1948. இந்த ஒரு காட்சியில் மட்டும் படம் உண்மை சம்பவங்களில் எவ்வளவு நெருங்கி  செல்ல முடியுமோ அவ்வளவு சென்று இருக்கும் . காந்தியை கொள்வதற்காக நாதுராம் விநாயக்  கோட்சேவும்,அவர்தம் கூட்டாளிகளும் அரங்கேற்றிய செயலை ஒரு மூன்றாவது  நபர் பார்ப்பதாய் படத்தில் வரும்.மதன்லால் ,ஷங்கர்,திகம்பர்,விஷ்ணு,கோபால் கோட்சே,நாத்துராம் கோட்சே,நாராயண்ஆப்தே அடங்கிய குழு மகாராஷ்த்ரியாவில் இருந்து பிர்லா பாவணிற்கு காந்திய கொலை செய்ய வந்து இருந்தனர்.சுவற்றில்  வெடி வைத்தது மதன்லால்.அது பெரிய பாதிப்பைஏற்படுத்தவில்லை என்பதால் அவர்கள் அந்த திட்டத்தை கை விடுகின்றனர் . மதன்லால் மட்டும் போலீசில்  மாட்டிக் கொள்ள மற்றவர்கள்  தப்பி விடுகின்றனர் . மதன்லால் பின்பு போலீசோடுஅவர்கள் தங்கி இருந்த மரினா ஹோட்டலுக்கு மற்றவர்களை காட்டிக் கொடுக்க வருகிறான் . அதற்குள் இங்கு இருந்தவர்கள் கோட்செவோடு தப்பி விடுகின்றனர்.பின்னர்நாத்துராம் காந்தியை 30.ஜனவரி சுட்டுக்கொன்றது வரலாறு 


அங்கே மைதிலியின் தந்தை உப்பிலி அய்யங்கார் (கிறிஸ் கர்னாட் ) சாகித் ராமை சந்திக்கிறார்ராமின் பெரியப்பாவும் ;அக்காளும் இறந்து விட்டதாய் தெரிவிக்கிறார்.தந்தியை வைத்து இங்குவந்ததாகவும் தன் நண்பர் கோயல் (ஓம் பூரி ) ராமை காந்ஹியிடம் பேச அனுமதி வாங்கித் தருவார் என்றும் கூறுகிறார்ராம் அங்கு இருந்து கடந்து மரினா ஹோட்டலுக்கு செல்கிறான்அங்கேபோலிஸ் நாத்துராம் கோட்சேவை தேடி வருகிறதுஅவனிடம்    இருக்கும் துப்பாக்கி   மாட்டி விடக்கூடாது என்பதற்காக அதை அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும் ஒரு சோடா வண்டியில்வைக்கிறான் . போலிஸ் சென்று விட,அதற்குள் அந்த சோடா வண்டி கிளம்பி விடுகிறதுஅந்த ஆசாத் சோடா பேக்டரிக்கு கோவர்தனின் உதவியுடன் செல்கிறான்அங்கு அவனது பழைய நண்பன் அம்ஜத் கானை   
அம்ஜத் : Jinna's daughter சொந்த மகளே இந்தியா தான் தன நாடுன்னு இங்கேயே தங்கிட்டாங்க .நான்                        காந்தியோட மகன் .இங்க தான் இருப்பேன் நான் காந்தியோட மகன் இங்க தான்                                           இருப்பேன்.இது என் நாடுராம் :உன் சின்னாவோட பாகிஸ்தானுக்கு போங்கஅம்ஜத் :எங்கேடா போக சொல்ற ??ராம் : போதும் .போதும் எல்லோரும் கண் காது போங்கோ .அம்ஜத் :அப்ப உன் ஜாதிக்கு பிரதிநிதியா வந்து இருக்கியா ?? do you remember my father ? அவரும்                               சாகல.கொன்னு போட்டாங்க ஹிந்துஸ் .ராம் :அவ சாகல.கொன்னு போட்டாங்க.பல தந்தைகள்,மனைவிகள் ஹிந்துக்கள கொன்ன மாதிரி              கொன்னு போட்டாங்க முஸ்லீம்ஸ்அம்ஜத் : ஏன் ஏன் .உன் அபர்ணாவை செத்த  கோமா ?? 
ராம் :தேவைப்பட்டால் அதுவும் செய்யும் .அம்ஜத் :come here.அப்ப உன் துப்பாக்கி முஸ்லீம்ஸ் கொல்ற துப்பாக்கி 

 அம்ஜத் :தப்பிக்க,சுடுவே இல்லையா ?

                                           ராம் : of course .



கல்கத்தா கலவரத்தில் அபர்ணா இறந்துவிட்டதை சொல்கிறான் அம்ஜத் இப்போது குடும்பத்தோடு கராச்சியை விட்டு இங்கேயே வந்து விட்டதாய் சொல்கிறான்

  .அம்ஜத்திடம் தன் பர்ஸை தொலைத்து விட்டதாக சொல்கிறான்.அங்கே ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இருப்பதால்அம்ஜத் இருவரையும் உள்ளே இருக்க சொல்கிறான்ராம் தேட வந்துஇருப்பது துப்பாக்கி என்பது பின்னர் தான் அம்ஜத்திற்கு தெரிய வருகிறது.ராம் அவர்களை தாக்க முயல,சோடா பேக்டரி உரிமையாளர் ஜலால் கொல்லப்படுகிறார்.அங்கே கலவரம் வெடிக்கிறது.கோவர்தன் சாரி என்கிற இந்து கும்பலிடம் சோடா பேக்டரியில் இருக்கும் இஸ்லாமியர்கள் பற்றியும்,அவர்கள் வைத்து இருக்கும் ஆயுதங்கள் பற்றியும் சொல்லி விடுகிறான்.எதற்காக துப்பாக்கி கொண்டு வந்தாய் என அம்ஜத் கேட்க.ராம் இவாறு பதில் அளிக்கிறான் .படத்தின் மிகவும் முக்கியமான ஒரு உரையாடல் இப்போது வருகிறது.இறுதியில் ராம் திருந்துகிறான் .மைதிலி முன்பு சொன்னது போல்,பழி வாங்குதல் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது என்பதை ராம் புரிந்து கொள்கிறான் .

 
அம்ஜத் : துப்பக்கிய எதுக்கு இங்கு கொண்டு வந்தே 


ராம் : நான் கொண்டு வரல.உங்க மாவோட சோடா தரக் கொண்டு வந்தது.சரி நான் கிளம்புறேன் .


அம்ஜத் : முட்டாள்,செத்துப்போவாய் , i do not know why you are carrying this gun ,but you will need my help to get out of here .

 
ராம் : i do not think so .யாரோட உதவியும் தேவை இல்லை.நானே தப்பிசுடுவேன்.



 ராம் : கைபர் கால்வாய் வழியா வந்த விதேசி நீ.
700 ஆண்டுகள் எங்களை ஆண்ட  திமிர் உங்களுக்கு

    
அம்ஜத் : அப்ப ,நான் பொறக்கலியே நான் உன்கூட தான பொறந்தேன்  .


அங்கு தோட்டாக்களின் சத்தம் அதிகமாகி இருந்தது. காந்
தியால் அமைதியாய் இருந்த தேசம் இப்போது ராமால் மீண்டும் ஆரம்பித்து உள்ளது என்கிறான் அம்ஜத் .அபர்ணாவை கொன்று நீங்கள் தான் ஆரம்பித்தீர்கள் என்கிறான் ராம்.
அம்ஜத் : அபர்ணாவை கொன்றதற்காக என்னை மன்னி.என் வாப்பாவை கொன்றதற்காக                                     உன்னை மன்னிக்கிறேன் .or  well அப்ப சுடு .ஒரு முசல்மான கொல்ற சந்தோசத்த நான்                             உனக்கு தர்றேன் . somebody will have to put a full stop to this .


ராம் : ரத்தத்துல புல் ஸ்டாப் வைக்க தான் வந்து இருக்கேன் .நான் உன்ன கொல்ல வரல.. இதுக்கெல்லாம் காரனத்த கொல்ல வந்து இருக்கேன்

எல்லாவற்றிற்கும் காரணம் காந்தி தான் என்பதை தீர்ர்க்கமாய் நம்புகிறான் ராம் .அதற்குள் இங்கு சாரியின் (டெல்லி கணேஷ் ) ஆட்கள் சுற்றி வளைத்து விடுகிறார்கள் .அம்ஜத்தை தன தம்பி பரத் என பொய் சொல்கிறான் ராம் .படம் முழுக்கவே ராமாயணத்திற்கான தொடர்பு இருந்து கொண்டே இருக்கும் . அம்ஜத்தா ,பரத்தா என்பதை அவுத்து பார்த்தா தெரிந்து விடும் என்கிறான் சாரி .அம்ஜத்தை சுத்தியலால் தாக்குகிறார்கள் . ராம் சாரியையும்,மற்றவர்களையும் சுடுகிறான் .அபர்ணாவை இழந்தது போல் ,அம்சத்தை அவன் இழக்க விரும்பவில்லை .அங்கு சூழ்ந்த இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களை காப்பாற்றுகிறான் . ராம் தன் தவறை எண்ணி அழுகிறான் .


மறுநாள்.மருத்துவமனை முழுக்க சடலங்களாய் இருக்கிறது .அம்ஜத்திடம் பைரவ பற்றி விசாரிக்கின்றனர் போலிஸ். "ராம் என் அண்ணன்  .பைரவ என்ற மிருகத்தை இதற்கு முன் பார்த்தது இல்லை " என்கிறான் அம்ஜத் . அம்ஜத் இறந்து போகிறான் .ஜனவரி 30 ,பிர்லா ஹுசில் காந்தியை ராமும்,அம்ஜத்தின் குடும்பமும் சந்திக்கின்றனர் .


டிசம்பர் 6 ,1999. செயற்கை ஆக்சிஜனும் தீர்ந்து  விடுகிறது .என்ன சத்தம் என சாகேத் கேட்க .ஹிந்து முஸ்லிம் கலவரம் என்கிறான் பேரன் சாகேத் ராம் . "இன்னுமா.சொப்பனம் வருகிறது.என்னை எழுப்பு மைத்திலி "என சொல்லிவிட்டு ராம் இறக்கிறார்  . 
 இப்ராஹீம் என்கிற இஸ்லாமியரால் தான் இப்போது இவர்கள் எல்லோரும் உயிர் பிழைக்கின்றனர் 

காந்தியும் ,சாகேத் ராமும் பேசிக்கொள்வதாய் ஒரு காட்சி வருகிறது.சாகேத் தன தவறை எண்ணி அழுகிறான். சர்தார் பட்டேலும்,அவரது மகளும் (ஸ்ருதி ) நடந்து செல்கின்றனர் .காந்தியிடம் மன்னிப்பு கேட்க வருகிறான் சாகேத்

 

காந்தி அங்கு இருந்து கிளம்ப ,நாத்துராம் கோட்சேவால் மறிக்கப்பட்டு காந்தியை சுட்டுக் கொல்லப்படுகிறார்..காந்தி ஹே ராம் என்னும் வார்த்தைகளை சொல்லாமல் இறக்கிறார்

மௌண்ட்பேட்டன் "காந்தியை கொன்றது ஒரு முஸ்லிம் அல்ல ஹிந்து "என பிர்லா ஹுசில் குழுமி இருப்பவர்களிடம் சொல்கிறார். நேரு உங்களுக்கு எப்படி தெரியும் என கேட்க.."நல்ல வேலை ,அது ஒரு ஹிந்து. இல்லை எனில் இந்த தேசம் இன்னும் சுக்கு நூறாகி இருக்கும் " என்கிறார் .சாகேத் ராம் தன தவறை எண்ணி அழுகிறான்..   


சாகேத் ராமின் இரங்கலுக்கு காந்தியின் கொள்ளு பேரன் ,துஷார் காந்தி வருகிறார் .அவரிடம் பேரன் சாகேத் காந்தியின் செருப்பையும் கண்ணாடியையும்  தருகிறான் .


'அது உங்களுடையது ' என்கிறான். அப்போது செருப்புகள் மற்றும் கண்ணாடிக்கு அடியில் "Gandhiji's slippers and spectacles goes missing" எனும் நாளிதழ் பக்கம் காட்டப்படுகிறது. இருட்டிலேயே வாழ்ந்த சாகேத் ராமின் அறைக் கதவுகளையும் ஜன்னல்களையும் பேரன் சாகேத் ராம் திறக்க உள்ளே பாய்ந்தோடும் வெளிச்சத்தில் சுவற்றில் காந்தியின் சித்திரம் வரையப் பட்டிருப்பதோடு ரகுபதி ராகவ் பாடல் உச்சஸ்தாயியில் ஒலிக்க படம் நிறைவு பெறுகிறது.

ஹே ராமும் உண்மையும் 


உண்மை சம்பவங்களை மையமாக கொண்டதால் ,படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பெயர்கள் கூட சரியாகவே இருக்கும்.முகங்கள் கூட 70% ஒத்துபோவது மாதிரியான முகங்களை தான் தேர்வு செய்து இருக்கிறார்கள் 

1944-48 வரையிலான காலத்தில் மொஹெஞ்சதாரோ ஹரப்பா தோல் பொருள் ஆராய்ச்சியினை நடத்தியவர் மார்டிமேர் வீலர் . 




கல்கத்தா கலவரங்களின் போது அங்கு இருந்த சுஹ்ராவர்தியின் பெயர் சாஹித் .






இந்திய சினிமாவிலேயே இத்தனை நுட்பங்களும் உட்ப்ரதிகளும் கொண்ட திரைப்படம் இதுகாறும் வெளியாகவில்லை என்பது நிதர்சனம். 'நான் நடிகனானதே என் முதல் தோல்வி' என்பார் கமல்ஹாசன். அவரது விருப்பம் இயக்குவதில் தான் இருந்திருக்கிறது. படம் வெளியான காலத்தில் பலரால் புரிந்து கொள்ளப்படவில்லை அல்லது இஸ்லாமிய விரோத திரைப்படம் எனத் தவறாக திரிக்கப்பட்டது. கமல் ஒரு காந்தியவாதி அல்ல. ஆனால் காந்தியின் ரசிகன் என்பதும் இந்து முஸ்லிம் ஒற்றுமை பேண விழைபவர் எனபதும் தெளிவு. இதன் மர்மமும் வசீகரமும் ஆழமும் அளப்பரியது. அதனாலேயே வெளியாகி பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னரும் உலக சினிமா ரசிகர்களை இன்னமும் ஈர்த்துக் கொண்டிருப்பது. இந்தியாவின் மகத்தான நடிகருக்கு அவரது அறுபதாவது பிறந்து நாளில் இப் படத்தை சரியாக 'கற்பதே' நாம் அவருக்கு செய்யும் மரியாதை.ஹே ராமின் ஆடியோ விழாவில் கமல் சொன்னதை இதி நினைவி கூறலாம் "கடந்த காலத்தில் நடந்தவற்றை  திருத்த ஹே ராம் திருத்த முயலப்போவதில்லை.இது போன்றவை மீண்டும் நிகழ வாய்ப்பு உள்ளது என்பதற்கான ஒரு நினைவோலை மட்டுமே . " ஹே ராம்!!

References

HEAVY REFERENCES FROM
http://theseventhart.info/2008/06/20/hey-ram-an-analysis-part-120/

Other references

http://en.wikipedia.org/

http://www.uiowa.edu/~incinema/HEYRAM.html

http://centreright.in/2013/03/the-false-symmetries-of-hey-ram/#.VFxQB_mUf_M

http://www.planetbollywood.com/Film/heyram.html

http://www.indolink.com/tamil/cinema/Reviews/articles/Hey_Ram!_14850.html

http://www.rediff.com/news/2000/jan/11diary.htm

http://bharathi-kannamma.blogspot.in/2007/11/blog-post.html

http://www.rediff.com/movies/2000/mar/01box.htm

Thanks to Sushima   for abhivadhyai explanation and  janakiraman for padhang kondu song explanation

13 comments:

  1. மிக அற்புதமாக எழுதி உள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Bro..mk.gandhi ya assassinate pannama Kamal manam matram en?? Nu potruntha nalla irukkum....super eluthaalumai..well done bro...

    ReplyDelete
  3. கார்த்திக்! என்ன சொல்லி புகழ்வது என்று தெரியவில்லை! அற்புதமான ஆராய்ச்சி. ஹே ராம் படத்தை எவ்வளவு முறை பார்த்தீர்கள் என்று தெரியவில்லை, ஆனால் அணு அணுவாக ரசித்து அதை எங்களுக்கும் பகிர்ந்திருக்கிறீர்கள். இதை எழுத நீங்கள் நிறைய காலம் எடுத்துக் கொண்டீர்கள் என்று தெரியும். அதன் நிறை இந்தப் பதிவில் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

    இந்தப் பதிவை படித்த எவரும் உடனே ஹே ராமை இன்னொரு முறை நீங்கள் சொன்னவற்றை மனத்தில் வைத்துக் கொண்டு பார்க்க வேண்டும் என்று நினைக்காமல் இருக்கமாட்டார்.

    நல்ல பதிவு. நிறைய பேர் படித்து கமலின் பெருமையையும் இந்தப் படத்தின் பெருமையையும் உங்கள் பதிவின் மூலம் உணர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    amas32

    ReplyDelete
  4. நான் ரசித்து பார்த்த படம். ஆனால் உங்கள் எழுத்தாளுமையால் புதிதாக பார்ப்பது போண்ற உணர்வை ஏற்படுத்தியது. நான் படம் பார்த்த கண்ணோட்டமும் என் மனநிலையும் படத்தினை எனக்கேற்றவாறுதான் ரசிக்கமுடிந்தது. ஆனால் இப்பொழுதும் கமல் இறுதியில் மனம்மாறிய காரணம் சரியாக இல்லை. சரியாகவும் இருக்க முடியாது.

    ReplyDelete
  5. அருமையான முயற்சி. வாழத்துக்கள் கார்த்திக்

    //சாகேத் பல நாட்கள் கழித்து பியானோ வாசிக்கிறான்.இம்முறை அதில் ஒரு உற்சாகம் இல்லை.ஒரு விதமான மூர்க்கத்தனமாய் காணப்படுகிறான்.
    //
    இதை வேறுமாதிரியாகவும் பார்க்கலாம். http://www.youtube.com/watch?v=INscMwhOdlg#t=1605 ராணிமுகர்ஜியோடு கலவிக்கு ஆயத்தமாவதே பியானோவின் மேல் தான். பால்கனியில் “முதல் ஷோ கலவி“ முடிந்த இடைவேளையில் மீண்டும் வந்து இருவரும் சேர்ந்து பியானோ இசைப்பர். கமல் வலதுகையாலும் ராணிமுகர்ஜி இடது கையாலும்... அதன் பின் மீண்டுமொரு கலவி ஷோ“ முடிந்து காட்சிகள் தொடரும் ...
    வசுந்த்ராதாஸோடான கலவி முடிந்ததும் கமல் மட்டும் பியானாவில் வந்தமர்ந்து அதே “நீ பார்த்த ..“ ப்ரீல்யுடை வாசிப்பார். http://www.youtube.com/watch?v=INscMwhOdlg#t=6534 முதலில் வலதுகையில், பின் ராணிமுகர்ஜி வாசித்த நோட்டை இடது கையால் முயற்சிப்பார். எப்டி வாசித்தும் அந்த ட்யுன் சரிவராது, ராணிமுகர்ஜி நோட்டை வாசித்தபடி வசுந்த்ராதாஜை திரும்பிபார்ப்பார். அதாவது ராணி முகர்ஜியை அளவுக்கு வசுந்த்ராதாஸ் கலவியில் வரமுடியாது என்பது போன்ற குறியீடு.

    ReplyDelete
  6. Interstellar படம் பற்றிய சுவாரசிய தகவல்கள்:

    Inception, Memento மற்றும் The Dark Knight படங்களை குடுத்த Christopher Nolan ன் சமிபத்திய படம் தான் Interstellar.

    (1) இந்த படத்தின் கதை மற்றும் திரைகதையை உருவாக்க Christopher Nolan மற்றும் அவரது சகோதரர் Jonathan Nolan அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் பிடித்தது.

    (2) நோலனின் சகோதரர் Jonathan Nolan இந்த கதை முழுக்க Relativity, Gravity, WormHole, Blackhole போன்ற அறிவியல் சார்ந்த விஷயங்கள் இருப்பதால் கலிபோர்னியா யுனிவர்சிட்டியில் Relativity பற்றி படித்துக் கொண்டே இந்த கதையை உருவாக்கினார்.

    (3) படத்தில் உள்ள ஒரு சோளக்காடு எரிவது போல உள்ள காட்சியமைப்புக்காக நோலன் கிராபிக்ஸ் பண்ண விரும்பவில்லை. Production Designer ஐ அழைத்து 500 ஏக்கர் அளவில் சோளத்தை பயிரிட்டு அது வளர்ந்ததும் அதை கொண்டு காட்சியமைப்பை உருவாக்கினார்.

    (4) படத்தில் நிறைய அறிவியல் சார்ந்த விஷயங்கள் இருப்பதால் அறிவியலை தவறாக சொல்லிவிடக்கூடாது, முடிந்தவரை சரியாக சொல்ல வேண்டும் என்பதற்காக Theoretical physicist Kip Thorne அவரை இந்த படத்தின் scientific consultant ஆக நியமித்து அவர் மூலம் இந்த Relativity, Wormhole மற்றும் Blackhole பற்றி முடிந்தவரை சரியாக படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

    (5) படத்தில் Wormhole மற்றும் Blackhole காட்சியமைப்புக்காக Theoretical physicist Kip Thorne மற்றும் 30 பேர் கொண்ட Visual Effects குழுவும் இணைந்து பணியாற்றினர். உண்மையாக Wormhole மற்றும் Blackhole எப்படி இருக்குமோ அதை திரையில் உருவாக்க Kip Thorne அவர்கள் Theroritical equation ஐ உருவாக்கி அதில் உள்ளது படி Visual Effects செய்தனர்.

    (6) Blackhole உருவாக்கத்தில் உள்ள சில frame ஐ correction செய்யவே 100 மணி நேரம் ஆகியதாம். அதற்காக அவர்கள் பயன்படுத்திய data மட்டும் 800TB அளவானது.

    Blockhole Making Video...
    https://www.youtube.com/watch?v=MfGfZwQ_qaY

    (7) IMAX கேமராவில் 66 நிமிடங்கள் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. The Dark Kinght Rises படம் 72 நிமிடங்கள் படப்பிடிக்கப்பட்டது. அந்த படத்திற்கு அடுத்தபடியாக இந்த படம் தான் அதிக நேரம் IMAX கேமராவில் எடுக்கப்பட்ட திரைப்படம்.

    மேலும் பல உலக சினிமா தகவலுக்கு
    https://www.facebook.com/hollywoodmve

    லைக் செய்யவும்...

    ReplyDelete
  7. If you could explain a bit more on the "thought process" behind his change of mind (to not kill MK Gandhi), it would icing on the top of this very informative post.

    ReplyDelete
  8. I prefer this for all to understand Hey ram clearly.

    ReplyDelete
  9. Nalla cinemavai thavaravittavarkal paarkavendiya kaaviyam.

    ReplyDelete
  10. அருமை... நான் ரசித்த அத்தனை குறியீடுகளையும் காணமுடிந்து...

    ReplyDelete
  11. ஹே ராம்! இப்படி ஒன்றா? அருமை

    ReplyDelete
  12. அருமையான பதிவு.
    "ஹே ராம்" படத்தை
    திரும்பவும்
    பார்க்கத் தூண்டுகிறது.

    ReplyDelete