Pages

Monday 26 December 2011

சினிமா

                                       அஞ்சுவது அஞ்சாமை பேதைமை
               ரொம்ப நாளுக்கு அப்புறம் எழுதறேன்... பிடிச்ச விசயத்துக்கு பயப்பட கூடாது.. பயப்படற விசயம் பிடிச்சாலும் கொஞ்சம் யோசிக்க தோணுது..  அண்ணா சொன்ன மாதிரி  மக்களின்  ரசனையை  புரிஞ்சுகறது ரொம்ப கஷ்டம் ..
சினிமா சினிமா சினிமா . சின்ன வார்த்த அர்த்தம் புரியறதுக்குள்ள ஆயுசு முடிஞ்சுரும் போல.
             விக்ரமன்னு ஒருத்தர் இருந்தாரு . ஒரே கதைக்கு டிங்கரிங் பைண்டிங் பண்ணாம கதை பெற மட்டும் மாத்தி நூறு நாளு ஓட்டினார். ஷங்கர் டிங்கரிங் பைண்டிங் பண்ணி ஓட்டினாரு. ஏனோ ரொம்ப வருஷம் பொறுத்த பயபுள்ளைக 'உன்னை நினைத்து'ல கண்டுபிடிச்சுடாங்க.. ஷங்கர் மட்டும் தப்பிச்சுட்டார்.ஊரரசுனு ஒருத்தர் இருக்காரு. ரெண்டே படத்துல இவரையும் கண்டு பிடிச்சுடாங்க.
         
               அட இவுங்கலேல்லாம் பார்த்து ஒன்னும் பயபடல. மக்களை நினச்சா தான் பயமே. குங்கம பூவும் கொஞ்சும் புறாவும்னு ஒரு படம். ஹீரோ ஹீரோயின் பரவால ரகம்.கதையும் ஓகே. படம் சுத்தமா ஓடல. மைனானு ஒரு படம் கதை முனாடி சொன்ன படாது மாதிரி தான் ஆரம்பிச்சுச்சு. ரெண்டு படத்துலயும் ரெண்டு பேரும் அவுட்டு.மைனால ஹீரோவும் சகிகல. இந்த படம் என்னடானா பயங்கரமா ஓடுது.
               ஊழல பத்தி ஷங்கர் இல்லாட்டி முருகதாஸ் சொன்ன பாக்குற மக்கள் சுசிகணேசன் சொன்ன அப்ப ஏதுக்கள(ஒரு வேலை இது தான் முக ராசியோ)..
              விஜய் 50  பேர அடிக்கறாரு. கார்த்தி ௦ 200 பேர அடிக்கறாரு. அட நம்ம தென்னிந்திய ப்ரூஸ் லீ தனுஷ் அடிக்கறாரு. விக்ரம் அந்நியன்ல அடிச்சப்ப ஏத்துக்கிட்ட நாம் ராஜபாட்டைல ஏத்துக்கல. ஒரு மண்ணும் விளங்கல...
              ஒருத்தன் என்னடான்னா சியான் விக்ரம் மாதிரி இங்கலிபீசுல யாரோ சியான் பென்னு ஒருத்தர் விக்ரம் நடிச்சத காபி அடிச்சத சொல்றாரு... இவன  கூட மன்னிச்சுரலாம் .. ஒரு கிறுக்கன் பந்தயம் படம் ஹிட்டுன்னு பெட்டு கட்டுறான் . கேட்டா அதுல தலைவர் விசய்படம் வருமாம். அட போங்கடா கோயாங்கோ 

No comments:

Post a Comment