Pages

Thursday, 21 June 2012

சாட்சி

இரவு மணி இரண்டு இருக்கும்.

கார்த்திக் சற்றும் பயமில்லாமல் அந்த ஊரின் புனிதமேரி நினைவாலயத்தின் உள்ளே சென்றுகொண்டு இருந்தான்.அவன் அலைபேசியின் வெளிச்ச உதவியோடு கல்லறைகளை கடந்துகொண்டு இருந்தான்.தான் தேடிவந்ததை கண்டது போல் ஒருநிமிடம் ஒரு கல்லறையை வெறித்துப் பார்த்தான்.

                                                           கரோலின் பெர்னாண்டஸ் 
                                          தோற்றம் 22.06.1986 மறைவு 26.12.2010 .

அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்தவன்  சட்டென அங்கிருந்த ஒரு கோடாலியை எடுத்து கல்லறையை உடைக்கத் தொடங்கினான்.

உள்ளே அவளின் சருகு போன்றதொரு கூடு  தான் இருந்தது.மூக்கின் துவாரம் வழியாக ஒரு புழு ஊர்ந்து கொண்டு இருந்தது.
அவனது முகம் வியர்த்துவிட்டது.சட்டென அந்த உடலை எடுத்து தன் முகத்தின் அருகே கொண்டுவந்தான்.தன் மொபைலில் ஒரு புகைப்படம் எடுப்பதற்குள் எங்கிருந்தோ வந்த கூட்டம் அவனை சுற்றிவளைத்துவிட்டது.

காவல்நிலையம்.....

..................
சற்று சோர்வடைந்த குரலுடன் கார்த்திக் பேச ஆரம்பித்தான்.

நானும் கரோலினும் லவர்ஸ் சார்.
.............................
............................
அவன் கதையைக்கேட்டு எல்லோரும் சோகமுகத்தோடு இருந்தனர்.

ஊட்டியிலிருந்து காரில் திரும்பிக்கொண்டு இருக்கும் பொழுது வேறொரு கார் நேரெதிரே வர ;இவன் தன் காரை திருப்பமுயன்று அது ஒரு மரத்தின் மீது மோதி அவள் இறந்துவிட்டதாகவும் கூறினான்.

இறந்தாலும் காதலி காதலிதானே. அவள் பினமானாலும் ,சில வருடத்தில் மக்கிவிட்டாலும் இவன் காதல் போயத்துவிடுமா என்ன?.

இவனது முகவரியைக்குறித்துக்கொண்டு  காவல்துறையினர்  இவனைவிடுவித்தனர்.

காரில் தன் நண்பனோடு பயணிக்கத்தொடங்கினான்.

டேய் என்ன சொல்லிடா தப்பிச்ச . கார் ஓட்டிக்கொண்டே பதில் எதிர்பார்த்து இருந்தான் ஜெரோம்.

பதிலெல்லாம் இருக்கட்டும்.பெட் வச்ச 5000 ரூபாயை எடு. என்னமோ ஜீசஸ் , பிசாசுனெல்லாம் பயம் காட்டின.எப்புடி.

கண்டிப்பா காச தர்றேன்.என்னடா சொன்ன?.

லைட்டா மன்மதன் அம்பு கதைய உல்டாபண்ணி சொன்னேன். எல்லோரும் நம்பீட்டாங்க.

சரி அந்த பொண்ணு.

கரோளின்க்ரா பேரயே அங்க தான் பார்த்தேன். அட போட பொணம் என்ன வந்து சாட்சியா சொல்ல போகுது.

இருவரும் சிரித்தனர்.

மறுநாள் காலை ...

காரும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் உடல் நசுங்கி பலி.

இது விபத்து அல்ல கரோலின் தான் இவர்களை கொன்றாள் என்று இந்த இரு பிணமும் சாட்சியா சொல்ல போகிறார்கள்

நோட்டு:புள்ளி மட்டும் வைத்து இருக்கும் இடங்களில் நீங்களாகவே
ஒரு காதல் கதையை முடிவு செய்துகொள்ளவும்

Friday, 4 May 2012

காதல் அழிவதில்லை

கோம்ஸ் ஹெட்செட்டில்  காதை பொருத்திக்கொண்டு இருந்தாள்.கோமதி  கோம்ஸ் ஆகி இருந்தாள் .காரணம் கார்த்திக் . இருவரும் ஒரே ஊர்.காதலர்கள் இனி இவர்தம் உரையாடல்.

என் கண்மணி உன் காதலன் எனை பார்த்ததும்

என்ன டா பாட்டெல்லாம் பாடுற.

சும்மா தான்.சரி என்ன பண்ற

இன்னிக்கு பாட்டி ஊருக்கு போறேன்பா. நாளைக்கு ஈவனிங்  வந்துருவேன். நீ என்ன பண்ற

AS USUAL RIDING BIKE . பஸ் கெளம்பிருச்சா

எத்தன வாட்டி சொல்றது.போன கட் பண்ணு.

சரி சரி வண்டிய ஆப் பண்ணிட்டேன்.

கோமதி முன் சீட்டில் உக்கார்ந்து இருந்தாள்.சட்டென அவள் பார்வையில் கார்த்திக் தென்பட்டான்.ஹெட்செட் மாட்டிக்கொண்டு பேசன் பைக்கில் சென்றுகொண்டு இருந்தான் . அவள் முறைத்தவாறு ,

நீ பொய் சொல்றத விடவே மாட்டியா

இப்ப என்ன ஆச்சு ஒய் பொலம்பிங்

நக்கலா .நீ பைக் ஓட்டிட்டு தான இருக்க

சத்தியமா இல்ல பா.

உன் பின்னாடி ஒரு பஸ் வருது பாரு.

என்ன வெலயாடுரியா..

அதுல தான் நான் வர்ரேன்.என்கிட்டயே பொய் சொல்ற.போ உன்கிட்ட பேசமாட்டேன்

பஸ் டிரைவர் ஹாரனை சப்தமாய் அழுத்த கார்த்திக் பேசியது அவளுக்கு கேட்கவில்லை.சாடாரென ஒரு லாரி இடப்பக்கமிருந்து வந்து கார்த்திக் ஓட்டிய பைக் ..........

கார்த்திக்கின் மூளை சிதற ; அவன் தலை இல்லாமல் துடித்துக்கொண்டு இருந்து இறந்தான்.

அதை பார்த்த அடுத்த நொடி கோமதி பேருந்தில் அதை பார்த்தவாறு இதயம் அடைத்து இறந்தாள்.

காதல் அழிவதில்லை.

If every time I thought of you, a star fell.. Well, then the sky would be empty ..

To be in love is merely to be in a state of perceptual anesthesia


உண்மை காதல் இப்படித்தான்.அடுத்த கணம் உயிர் பிரிந்துவிடும்.

சரி

சரி கதைக்கு வருவோம்

என் கண்மணி உன் காதலன் எனை பார்த்ததும்

கோமதி பதில் சொல்ல போறியா இல்லையா.ஒரு நிமிஷமா நீ ஒன்னுமே பேசல .சத்தியமா நான் பைக்க ஆப் பண்ணிட்டேன்.இந்த ரோட்டுல பஸ்செல்லாம் வராது பா.

பேக்கு பொண்ணு கோமதி பேக்ல பாத்து ஏதோ ஒரு பேக்க லவ்வர்னு நினச்சு உயிரை விட்டுடுச்சு.


Wednesday, 2 May 2012

கைதியின் டைரி

பெங்களூருவின் பாரப்பன அக்ரஹாரா சிறை வளாகம் வருக வருகவென நிரபராதிகளையும்  அன்போடு தன் பக்கம் இழுத்தவண்ணம் இருந்தது. இந்த பத்திரிகை நிருபர் இங்கு வருவது இருபத்தி ஆறாவது முறை.தினமும்  தண்டிக்கப்பட்ட  ஒவ்வொருவரும் தான் ஏன் சிறைக்கு வந்தனர் என்பதைப்பற்றி சொல்ல வேண்டுமாம்.

இந்த நாள் என்னுடையது.

இங்கு நான் அடைக்கப்பட்டு இருப்பதற்குரிய காரணம் என்னவெனில்;

சும்மா பேச்சு வழக்கில சொல்லுங்க.நான் எழுதிக்கறேன்.

சரி அப்புறம் உங்க இஷ்டம்.
நான் என்ன பத்தி சொல்றதுக்கு முன்னாடி என் பக்கத்து ரூம்ல இருக்குற அபுஜ்மரியா பத்தி சொல்லணும்.

நீங்க உங்கள பத்தி மட்டும் பேசலாம்.அவரென்ன ஊமையா??

ஊமை இல்லை.ஆனால் ஊமை ஆக்கப்பட்டவர்.

சட்டீஸ்கர் மாநிலத்துல ஒரு கிராமத்து  மக்களுக்காக போராடியவர். அந்த மாநிலம் இந்த மனுசன மதிச்சு விருதெல்லாம் கொடுத்துச்சாம். இதுதாங்க நடந்தது.

அங்க இருக்குற ஒரு பழங்குடி அனாத  பெண்ணை மூணு பெரிய இடத்து நாய்க கற்பழிக்கறாங்க. நியாயம் கேட்க போலீஸ் ஸ்டேசனுக்கு போன அந்த பொண்ணுக்கு அங்கயும் வெறியாட்டம் தான் நடந்து இருக்கு.விஷயம் இந்த அபுஜ்மரியாவுக்கு போக அவர் எவ்வளவோ போராடினாராம்.

கடைசியா இவரையும்,அந்த பொண்ணையும்  மாவோயிஸ்ட் தீவிரவாதின்னு  முத்திர குத்தி இங்க அடைச்சுவச்சுருக்காங்க.

எந்த மாநிலம் இவருக்கு அவார்ட் கொடுத்துச்சோ அதே மாநிலம் இவர தீவிரவாதின்னு சொல்லுது.நான் இங்க வந்து ரெண்டு மாசம் ஆவுது.இதுவரைக்கும் ஒரு வார்த்தை பேசல.

சில சமயம் மனுஷன் செத்துட்டார்ன்னு நினைக்குறப்ப கண்ணுல லேசா கண்ணீர் வரும்.

சரி சரி டைம் ஆகுது உங்கள பத்தி சொல்லுங்க.

அந்த பெரிய மனுசனோட பாக்குறப்ப நான் பண்ணினது எல்லாம் தப்பு தான். என் வக்கீலுக்கு இது வரைக்கும் ரெண்டு லச்ச ரூபா செலவு அழுது இருப்பேன். பன்னிபய வெளிய எடுக்க முடியாதுன்னு கைவிருச்சுட்டான்.தப்பு பண்ணினது ஏதோ  உண்மைதாங்க.யாருதாங்க தப்பு பண்ணல.ஏன் ஜட்ஜ் தப்பே பண்ணி இருக்க மாட்டனாக்கும்.சொல்லுங்க

தப்பு பண்ணீட்டு வெட்டிவசனம் பேசாதே. தப்பு பண்றப்ப யோசிச்சுருக்கணும்.

அதேதாங்க.ரெண்டு லச்ச ரூபா செலவு பண்ணி உண்மையெல்லாம் சொல்லி படிச்ச வக்கீலாலையே ஒன்னும் புடுங்க முடியல. உன்கிட்ட சொல்லி நீ என்னத்த புடுங்க போற.பேப்பர கிழிச்சு போட்டுட்டு கெளம்பற வழியப்பாரு..