பெங்களூருவின் பாரப்பன அக்ரஹாரா சிறை வளாகம் வருக வருகவென நிரபராதிகளையும்
அன்போடு தன் பக்கம் இழுத்தவண்ணம் இருந்தது. இந்த பத்திரிகை நிருபர் இங்கு
வருவது இருபத்தி ஆறாவது முறை.தினமும் தண்டிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தான்
ஏன் சிறைக்கு வந்தனர் என்பதைப்பற்றி சொல்ல வேண்டுமாம்.
இந்த நாள் என்னுடையது.
இங்கு நான் அடைக்கப்பட்டு இருப்பதற்குரிய காரணம் என்னவெனில்;
சும்மா பேச்சு வழக்கில சொல்லுங்க.நான் எழுதிக்கறேன்.
சரி அப்புறம் உங்க இஷ்டம்.
நான் என்ன பத்தி சொல்றதுக்கு முன்னாடி என் பக்கத்து ரூம்ல இருக்குற அபுஜ்மரியா பத்தி சொல்லணும்.
நீங்க உங்கள பத்தி மட்டும் பேசலாம்.அவரென்ன ஊமையா??
ஊமை இல்லை.ஆனால் ஊமை ஆக்கப்பட்டவர்.
சட்டீஸ்கர் மாநிலத்துல ஒரு கிராமத்து மக்களுக்காக போராடியவர். அந்த மாநிலம் இந்த மனுசன மதிச்சு விருதெல்லாம் கொடுத்துச்சாம். இதுதாங்க நடந்தது.
அங்க இருக்குற ஒரு பழங்குடி அனாத பெண்ணை மூணு பெரிய இடத்து நாய்க கற்பழிக்கறாங்க. நியாயம் கேட்க போலீஸ் ஸ்டேசனுக்கு போன அந்த பொண்ணுக்கு அங்கயும் வெறியாட்டம் தான் நடந்து இருக்கு.விஷயம் இந்த அபுஜ்மரியாவுக்கு போக அவர் எவ்வளவோ போராடினாராம்.
கடைசியா இவரையும்,அந்த பொண்ணையும் மாவோயிஸ்ட் தீவிரவாதின்னு முத்திர குத்தி இங்க அடைச்சுவச்சுருக்காங்க.
எந்த மாநிலம் இவருக்கு அவார்ட் கொடுத்துச்சோ அதே மாநிலம் இவர தீவிரவாதின்னு சொல்லுது.நான் இங்க வந்து ரெண்டு மாசம் ஆவுது.இதுவரைக்கும் ஒரு வார்த்தை பேசல.
சில சமயம் மனுஷன் செத்துட்டார்ன்னு நினைக்குறப்ப கண்ணுல லேசா கண்ணீர் வரும்.
சரி சரி டைம் ஆகுது உங்கள பத்தி சொல்லுங்க.
அந்த பெரிய மனுசனோட பாக்குறப்ப நான் பண்ணினது எல்லாம் தப்பு தான். என் வக்கீலுக்கு இது வரைக்கும் ரெண்டு லச்ச ரூபா செலவு அழுது இருப்பேன். பன்னிபய வெளிய எடுக்க முடியாதுன்னு கைவிருச்சுட்டான்.தப்பு பண்ணினது ஏதோ உண்மைதாங்க.யாருதாங்க தப்பு பண்ணல.ஏன் ஜட்ஜ் தப்பே பண்ணி இருக்க மாட்டனாக்கும்.சொல்லுங்க
தப்பு பண்ணீட்டு வெட்டிவசனம் பேசாதே. தப்பு பண்றப்ப யோசிச்சுருக்கணும்.
அதேதாங்க.ரெண்டு லச்ச ரூபா செலவு பண்ணி உண்மையெல்லாம் சொல்லி படிச்ச வக்கீலாலையே ஒன்னும் புடுங்க முடியல. உன்கிட்ட சொல்லி நீ என்னத்த புடுங்க போற.பேப்பர கிழிச்சு போட்டுட்டு கெளம்பற வழியப்பாரு..
இந்த நாள் என்னுடையது.
இங்கு நான் அடைக்கப்பட்டு இருப்பதற்குரிய காரணம் என்னவெனில்;
சும்மா பேச்சு வழக்கில சொல்லுங்க.நான் எழுதிக்கறேன்.
சரி அப்புறம் உங்க இஷ்டம்.
நான் என்ன பத்தி சொல்றதுக்கு முன்னாடி என் பக்கத்து ரூம்ல இருக்குற அபுஜ்மரியா பத்தி சொல்லணும்.
நீங்க உங்கள பத்தி மட்டும் பேசலாம்.அவரென்ன ஊமையா??
ஊமை இல்லை.ஆனால் ஊமை ஆக்கப்பட்டவர்.
சட்டீஸ்கர் மாநிலத்துல ஒரு கிராமத்து மக்களுக்காக போராடியவர். அந்த மாநிலம் இந்த மனுசன மதிச்சு விருதெல்லாம் கொடுத்துச்சாம். இதுதாங்க நடந்தது.
அங்க இருக்குற ஒரு பழங்குடி அனாத பெண்ணை மூணு பெரிய இடத்து நாய்க கற்பழிக்கறாங்க. நியாயம் கேட்க போலீஸ் ஸ்டேசனுக்கு போன அந்த பொண்ணுக்கு அங்கயும் வெறியாட்டம் தான் நடந்து இருக்கு.விஷயம் இந்த அபுஜ்மரியாவுக்கு போக அவர் எவ்வளவோ போராடினாராம்.
கடைசியா இவரையும்,அந்த பொண்ணையும் மாவோயிஸ்ட் தீவிரவாதின்னு முத்திர குத்தி இங்க அடைச்சுவச்சுருக்காங்க.
எந்த மாநிலம் இவருக்கு அவார்ட் கொடுத்துச்சோ அதே மாநிலம் இவர தீவிரவாதின்னு சொல்லுது.நான் இங்க வந்து ரெண்டு மாசம் ஆவுது.இதுவரைக்கும் ஒரு வார்த்தை பேசல.
சில சமயம் மனுஷன் செத்துட்டார்ன்னு நினைக்குறப்ப கண்ணுல லேசா கண்ணீர் வரும்.
சரி சரி டைம் ஆகுது உங்கள பத்தி சொல்லுங்க.
அந்த பெரிய மனுசனோட பாக்குறப்ப நான் பண்ணினது எல்லாம் தப்பு தான். என் வக்கீலுக்கு இது வரைக்கும் ரெண்டு லச்ச ரூபா செலவு அழுது இருப்பேன். பன்னிபய வெளிய எடுக்க முடியாதுன்னு கைவிருச்சுட்டான்.தப்பு பண்ணினது ஏதோ உண்மைதாங்க.யாருதாங்க தப்பு பண்ணல.ஏன் ஜட்ஜ் தப்பே பண்ணி இருக்க மாட்டனாக்கும்.சொல்லுங்க
தப்பு பண்ணீட்டு வெட்டிவசனம் பேசாதே. தப்பு பண்றப்ப யோசிச்சுருக்கணும்.
அதேதாங்க.ரெண்டு லச்ச ரூபா செலவு பண்ணி உண்மையெல்லாம் சொல்லி படிச்ச வக்கீலாலையே ஒன்னும் புடுங்க முடியல. உன்கிட்ட சொல்லி நீ என்னத்த புடுங்க போற.பேப்பர கிழிச்சு போட்டுட்டு கெளம்பற வழியப்பாரு..
நிறுத்தற்குறிகளை பயன்படுத்தவும்... புரிவதில் சிரமம் உள்ளது.. சொல்ல வந்த விஷயம் தடுமாற்றத்துடன் புரிகிறது.. அபுஜ்மரியா நிஜமா?
ReplyDeleteநல்லா இருக்கு - கதையில் கொஞ்சம் ட்விஸ்ட் எதிர் பார்த்தேன் கார்த்திக்... @சஸ்வீட்சுதா
ReplyDeletehii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in