Pages

Tuesday 10 April 2012

காவல் தெய்வம்

வேலாண்டிபாளையம் ..

கலவரக்கண்களோடு காவல் நிலையத்திற்கு உள்ளே நுழைந்தான் ரகுமான்

அவன் கண்களில்  நேற்றிரவு  தூக்கம் களவு செய்யப்பட்டு இருந்தது. களவு சொல்ல வந்த விஷயத்தை பார்ப்போம் 

அய்யா என் பொஞ்சாதியை  நேத்து இருந்து காணோமுங்க?

என்னயா சொல்ற நல்லா தேடி பாத்தியா 

வழக்கம்போல் சாதரணமாக கேட்டார் இன்ஸ்பெக்டர்..

கண்ணீர் உருண்டோடியது அவன் கன்னங்களில்.

சரி சரி ரைட்டர் இன்னும் வரல. வெளிய ஒக்காரு. வந்ததுக்கு அப்புறம் ஒரு கம்ப்ளைன் எழுதி கொடுத்துட்டு போ.

அவரின் பொறுப்பற்ற பேச்சு இவனை கோபம் அடைய செய்தது. இவனை பொறுத்தவரை போலீஸ் என்றால் புகார் கொடுத்தவுடன் பிடித்து தர வேண்டும்.

உங்க பொஞ்சாதினா இப்படி கண்டுக்காம இருப்பீங்களா??

சடாரென விழுந்தது ஒரு அடி. ஏன்டா கூ..... வாய  மூடிட்டு போய் வெளிய உக்கார்.வாய் நீளுதோ.. 

அழுதபடி சென்று கை தரையில் பட குத்தவைத்து உக்கார்ந்து இருந்தான்..

இரண்டு மணி நேரம் ஓட்டம் கண்டுவிட்டது.இன்னும் யாரும் வரவில்லை..

யோவ் எங்கயா அந்த ரைட்டர். அந்த மனுஷன் காலைல இருந்து உக்காந்து இருக்கான். நான் வேற கோபத்துல அடிச்சுட்டேன். 

குப்புசாமி சார் அந்த ஆள கூப்பிட்டு ஒரு கம்ப்ளைன் எழுதி வாங்கிக்குங்க..

இந்தாப்பா பேரு;ஏரியா எல்லா விவரமும் எழுதி கொடுத்துட்டு போ..

அவன் எழுதுகையில் இனி இந்த ஊர் அவனை எப்படி நோக்கும் என்பதிலேயே அவன் முழுக்கவனமும் இருந்தது.அவனை இரண்டு மணிநேரம் அலைக்கழித்த ரைட்டர் மேலும் இருந்தது..

கோப்புகளை சரிசெய்கையில் ஒரு படத்தை பார்த்து ரகுமான் கதறினான் 
"இவன் தான் சார் என் பொஞ்சாதியை கூட்டீட்டு  ஓடீட்டான் "

எல்லோரும் அதிர்ச்சியாய் பார்க்க ரைட்டர் கோகுல் சந்தோசமாய் கோப்பில் சிரித்துக்கொண்டு இருந்தார் 

2 comments:

  1. excellent machiiiiiiiiiii very nice

    ReplyDelete
  2. Ha ha ha nice one bro :) bursted into laughter after reading this. Feel pity for the guy who lost his wife :(

    ReplyDelete