Pages

Tuesday, 27 March 2012

பயணம்

அன்று நான் நானாக இல்லை.

என் மகள் சுவற்றில் சாய்ந்து இருந்தாள்; அவள் இதழோரத்தில் நேற்று இரவு இருந்த சிரிப்பு இப்போது மறைந்து போய் இருந்தது.

நேற்றைய இரவு சற்று அதிகமாகவே நீண்டு இருந்தது.


என் மகளின் காதலுக்கு நான் என் மனைவியை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. என் மனைவி இறுதி வரை அவள் பிடியில் இருந்து கீழ் இறங்கவில்லை. என் மகளும் அப்படியே.


இன்று அனைத்தும் மாறி இருந்தது.


என் மனைவி யாரையோ அலைபேசியில் தொடர்பு கொள்ளமுயற்சித்து கொண்டு இருந்தாள்.

நானும் என் கட்டிலில் இருந்து எழ முயற்சித்து தோற்றுப்போய் இருந்தேன்.

வண்டியில் செல்லலாமே என யோசித்துக்கொண்டு இருக்க; என் மனைவியும்  என்னோடு பயணம் செய்ய ஆயுத்தமானாள்.இவ்வாறு நானும் என் மனைவியும் சேர்ந்து ஒரு விசயத்தை செய்வது இதற்கு முன்னர் எப்போது என்று நினைவில் இல்லை.

இன்று காலையில் இருந்து என் மனதிற்கு நெகிழ்வாய் அமைந்தது இந்த பயணம் மட்டுமே . குளிர்  காலத்தின் நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்தன.

சட்டென அ.முத்துலிங்கம் அவர்களின் கவிதை ஒன்று மனதில் தோன்றியது


குளிர் காலம் வரப்போவதற்கான அறிகுறி
ஆடுகள் கத்தையான ரோமத்தின் கதகதகப்பில்
தங்களை பாதுகாக்க ஆயத்தப்படுத்தின.
மனிதர்கள்
தங்கள் உடம்புகளை நீண்ட அங்கிகளுக்குள்
மூடி மறைத்துக்கொண்டார்கள் .
இந்த மரங்கள் மட்டும் ஏனோ
இருக்கும் இலைகளையும் உதிர்த்துவிட்டு
வெறும் மேலோடு குளிர் காலத்தை
எதிர்க்கத் தயாராகி விட்டன.
என்ன துணிச்சல்!!

என் வயது என்னை முழுக்கவிதையையும் என் மனதில் தோன்ற விடாமல் என் ஞாபகமறதியை அதிகப்படுத்தி இருந்தது.

நான் ஏனோ ஒரு சிறுவன் போல் அனைத்தையும் பார்த்துகொண்டே பயணித்துக்கொண்டு இருந்தேன்; ஏனோ எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது போன்றதொரு  உணர்வு..


சிறிது நேரம் கண் அயர்ந்துவிட்டேன்...

வாகனம் இப்போது கல்லறை நோக்கி உருண்டோடியது.


அனைவரும் சூழ்ந்து இருக்க

ஒரு  3 அடி குழி வெட்டப்பட்டு இருந்தது. சவப்பெட்டி திறந்த நிலையில் கிடந்தது. எனக்கு சட்டென ஓர் ஆசை...


அந்த சவப்பெட்டியில் படுத்தால் எப்படி இருக்குமென??.


யாரும் பார்க்காதபோது  சட்டென பெட்டிக்குள் என்னை கிடத்தினேன்.என் வீட்டு கட்டிலை விட இந்த மெத்தை எனக்கு சவுகரியமாய் இருந்தது.இங்கு ஏன் தூங்கக்கூடாது என நான் சிந்திக்கும் முன் தூங்கியிருந்தேன்..

இருள் என்னை சூழ்ந்து இருந்தது. இது கனவு என சொல்லி என் மனதை தேற்றிக்கொண்டு இருந்தேன்.கண் விழித்தும் பயனில்லை என பின் முடிவுக்கு வந்தேன்..

இந்த கட்டில் எனக்கு நிரந்தரம் ;என் இடம்  மீண்டும் தோண்டபடாத வரை..

Monday, 26 March 2012

மெல்ல திறந்தது கதவு


baatein hawa hai saari, saari ki saari
kyun hai kyun hai kyun hai kyun hai kyun....
rukhi si khaali khaali, ulti hi duniya saari
kyun hai kyun hai kyun hai kyun hai kyun....

மெல்ல திறந்தது கதவு படத்தின் குழலூதும் பாடலின்  ஹிந்தி வெர்சன் ஓடிக்கொண்டு இருந்தது.

மெல்ல திறந்தது கதவு

"சார் ஒரு க்ரூப் போட்டோ எடுக்கணும் ".

அப்படி ஒரு அழகை அக்கடையின் ரிசப்சனிஸ்ட்  பார்த்ததில்லை போலும் ;


உள் அறையில்   லென்சை சரிசெய்து கொண்டிருந்தான் அக்கடையின் உரிமையாளர்  .

சார் சூப்பர் பொண்ணு சார். கடைல முன்னாடி மாட்டுறதுக்கு பொண்ணு போட்டோ வேணும்னு சொண்ணீங்கள்ள. இவ மேட்ச் ஆவா சார்.

ஹ்ம்ம் சரி சரி உன்ன நம்புறேன். முகத்த நல்லா கழுவீட்டு வரசொல்லு பார்ப்போம்.

அந்தப்பொண்ணு மேக் அப் போட்டுட்டு இருக்கா சார். கண்டிப்பா சொல்றேன். இதவிட அழகான பொண்ணு கிடைக்கமாட்ட சார். அவ ஒத்துக்குவாளா .

அதெல்லாம் சொல்லி சமாளிச்சுக்கலாம். டைம் ஆனா பரவால. மெதுவா வர சொல்லு . சில பேருக்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கணும்.

2 மணி நேரம் ஆகிவிட்டது. பொறுமை இழந்தநிலையில்

யோவ் வரசொல்லுயா . மதியம் சாப்பாட்டுக்கு போகனும் . இன்னுமா மேக் அப் பண்றா.

இன்னும் அஞ்சு நிமிஷம் ப்ளீஸ்..

அவளை பார்த்தவுடன் ; ஒன்றும் சொல்லாமல் ரிசப்சனிஸ்டை கடுமையாக ஏசிவிட்டு வெளியேறினான்..


உள்ளே நுழைந்தவனுக்கு இன்னும் அதிர்ச்சி


           மெல்ல திறந்தது கதவு

குறிப்பு : நகைச்சுவைக்காக மட்டுமே ; இஸ்லாமிய நண்பர்களை கிண்டல் செய்யும் பொருட்டில் அல்ல                            

Monday, 19 March 2012

வலி

அன்று இரவு வண்டியில் வரும் போது ; இருவர் என்னை வேண்டும் என்றே இடித்தனர். வெளிச்சமின்மை காரணமாக அவர்கள் யார் என அறியவில்லை. ஆனால் அதற்கு காரணம் நான் வேலை செய்யும் நிறுவனத்தில் ஏற்பட்ட தகராறு என்று மட்டும் ஊர்ஜிதம்   செய்துகொண்டேன்.பெரிதாக ஏதும் அடி இல்லை எனினும் உள்காயங்கள் சில. தோள்பட்டையும்; முதுகும்  ஏதோ செய்தது.

எழும்போது அப்படி ஒரு வலி . எழ முடியவில்லை. லீவு சொல்லி விடவேண்டும் என்று கூட யோசித்தேன். நான் கோழை அவர்கள் செய்யும் செயல்களை கண்டு அஞ்சிவிட்டேன் என்று எடுத்துக்கொள்ளக்கூடும். ஆகையால் சென்றேன்..


உள்ளே நுழைந்ததும், யாரிடமும் எதுவும் பேசாமல் என் இடத்தில் உட்கார்ந்து  கொண்டேன்.


தேநீர் இடைவேளையில் , அவர்கள் யாரும் ஒன்றும் நடக்காதது போன்று ஒரு முகபாவனை வைத்து கொண்டனர். எனக்கு எரிச்சலாய் இருந்தது. விடுப்பு எடுத்து கெளம்பிவிட்டேன்.


அன்று மாலை .

சென்றிருந்த மருத்துவமனையில் ஆள் யாரும் இன்றி செவிலியர் மட்டும் வெளியே உக்கார்ந்து இருந்தார்.

மேடம், டாக்டர் எப்ப வருவாங்க ??

உள்ள வாங்க ..

எனக்கு சற்று அசௌகரியமாக பட்டது. நான் தவறாக எண்ணிவிட்டேன். அந்த செவிலியர் தான் மருத்துவர்.


சாரிங்க

ஹ்ம்ம் பரவால  சொல்லுங்க.

மேடம் முதுகு ; தோள்ப்பட்டை எல்லாம் ரொம்ப வலிக்குது .

சரி ஒரு XRAY எடுத்துடுங்க. அப்புறம் தான் கிளியரா சொல்ல முடியும் ..

400 ரூபாய் என் பர்சில் இருந்து திருடப்பட்டது.

மேடம் ரிப்போர்ட் ..


சார் பெருசா ஒன்னும் பிரச்சனை இருக்கறதா தெரியல. ஆனா நீங்க கேர்புல்லா இருக்கணும். தண்டுவடத்துல சிறிசா வீங்கி இருக்கு. அதுனால கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துக்குங்க..


ஒரு வாரம் கழித்து


எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

அமைதியான சூழ்நிலயில் எல்லாவற்றையும் அசை போட்டேன்

என்னை அடிக்க சொல்லி ஆள் அனுப்பியவர்கள் ஒன்றும் தெரியாதது போல் நடித்தது.முதுகும் ,தோள்ப்பட்டையும் வலித்தது. 400 ரூபாய் திருடப்பட்டது. அந்த செவிலியரும்!!! முதுகில் பிரச்சனை என சொன்னது ..

கனவில் அடி வாங்கினாலும் உண்மையிலேயே முதுகு பிரச்சனை வருமோ ??